எண்ணெய் மாசைக் கண்டறிய அமெரிக்காவிலிருந்து யாழ் வந்தது நவீனகருவி


news
நிலத்தடி நீரில் எண்ணெய் மாசு கலந்துள்ளமை தொடர்பில் பரிசோதித்து அறியக்கூடிய FROG 4000 என்ற நவீன கருவி அமெரிக்காவில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு வந்து சேர்ந்துள்ளது என வடக்கு மாகாண சுற்றுச்சூலல் அமைச்சர் தெரிவித்தார். 
 
ரூபா  20 இலட்சம் பெறுமதிமிக்க இந்த நவீனகருவியை தான் நிலத்தடி நீரில் எண்ணெய் மாசு தொடர்பாக ஆராய்ந்து வரும் நிபுணர்குழுவிடம் நேற்று கையளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
 
மேலும், வலிகாமம் பிரதேசத்தில் நிலத்தடி நீரில் எண்ணெய் மாசு கலந்துள்ளது தொடர்பாக வடமாகாணசபையால் நியமிக்கப்பட்ட நிபுணர்குழு விரிவான ஆய்வுகளை மேற்கொண்டுவருகிறது. 
 
எனினும், தற்போது பயன்பாட்டில் உள்ள கருவிகளைப் பயன்படுத்தி ஆய்வுகளை மேற்கொள்வதற்கு அதிக நேரம் தேவைப்படுவதால் ஆய்வு முடிவுகளைப் பெறுவதில் காலதாமதம் ஏற்படுகிறது.
 
இதனைக் கருத்திற்கொண்டு ஆய்வைத் துல்லியமாகவும் விரைவாகவும் மேற்கொள்ளக்கூடிய கருவியொன்றை வாங்கித் தருமாறு வடமாகாண சுற்றுச்சூழல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் வெளிநாடுகளில் உள்ள தமிழ் அமைப்புகள் சிலவற்றிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார். 
 
கோரிக்கையை ஏற்றுக் கொண்ட அமெரிக்காவில் உள்ள இலங்கைத் தமிழ்ச்சங்கத்தினரும் அவுஸ்ரேலியாவில் உள்ள இலங்கைத்தமிழர்கள் சிலரும் இணைந்து நிதிப்பங்களிப்புச் செய்து இந்த ஆய்வுக்கருவியை அனுப்பிவைத்துள்ளனர். 
 
 
வடமாகாண சுகாதார அமைச்சின் யாழ்ப்பாண கேட்போர் கூடத்தில் தூய நீருக்கான விசேட செயலணியின் அமர்வு நேற்று நடைபெற்றது. அதன்போது அமைச்சர் நிபுணர்குழுவின் இணைப்பாளரும் பொறியியலாளருமான எந்திரி சோ. சண்முகானந்தனிடம் கையளித்துள்ளார். 
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila