இன்று காலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட மனு, பிற்போடப்பட்டு பிற்பகலுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. ஜெயக்குமாரி சார்பாக சட்டத்தரணிகளான எஸ்.விஜயராணி, ம.கிறேசியன், என்.சுந்தர சர்மா, எச்.றைகான், எஸ்.துஸ்ஸியந்தி ஆகியோர் மன்றில் ஆஜராகினர். விபூசிகாவை சிறுவர் இல்லத்திலிருந்து விடுவித்து தாயாருடன் இணைக்குமாறு சட்டத்தரணிகள் கூறினர். ஜெயக்குமாரி பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இவர் மீதும் இவர் மகள் மீதும் பயங்கரவாத குற்றம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக தாயார் தடுத்து வைக்கப்பட்டு, சிறுமி சிறுவர் இல்லத்திலும் வைக்கப்பட்டுள்ளார். இருவரும் பயங்கரவாதத் தடைச்சட்டத்திலிருந்து விடுதலையாகவில்லை. அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்று பயங்கரவாத குற்றத்தடுப்புப் பொலிஸாரிடமிருந்து கடிதம் கிடைக்கப் பெற்றால் மாத்திரமே தாயாருடன் சிறுமியை சேர்க்க முடியும். அதுவரையில் சிறுமியை சிறுவர் இல்லத்தில் இருந்து விடுவிக்க முடியாது என்று நீதவான் கூறினார். பொலிஸார் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்யப்பட்டதாக கூறப்படும் கோபி என்று அழைக்கப்படும் தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவை சேர்ந்தவருக்கு புகலிடம் கொடுத்திருந்தார் என்ற சந்தேகத்தின் பேரில் பயங்கரவாத புலனாய்வு பிரிவினால் கைது செய்யப்பட்டிருந்த ஜெயக்குமாரி ஒரு வருடத்துக்கு பின்னர் கடந்த செவ்வாய்க்கிழமை பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. |
விபூசிகாவை தாயாருடன் இணைக்க நீதிமன்றம் மறுப்பு! - குறுக்கே நிற்கிறது பயங்கரவாத தடைச்சட்டம்.
Related Post:
Add Comments