தமிழன் என்ற அடையாளத்தை பாதுகாக்க நாம் ஒன்றிணைய வேண்டும்: - அனந்தி சசி­தரன்


 தமிழன் என்ற அடை­யா­ளத்தை நாம் பேணி பாது­காப்­ப­வர்­க­ளாக மாற­வேண்டும் அதற்­காக அனைத்து மக்­களும் ஒன்­றி­ணைய வேண்டும் என வட மாகாண சபை உறுப்­பினர் அனந்தி சசி­தரன் தெரி­வித்தார். வட­ம­ராட்சி கிழக்கு மரு­தங்­கே­ணியில் மாகாண சபை உறுப்­பி­னர்கள் எம்.கே.சிவா­ஜி­லிங்கம் மற்றும் சுகிர்தன் ஆகி­யோரின் நிதி ஒதுக்­கீட்­டுடன் வழங்­கப்­பட்ட விளை­யாட்டு உப­க­ர­ணங்­களை கைய­ளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கையிலேயே அவர் இதனைத் தெரி­வித்தார்.
தமிழன் என்ற அடை­யா­ளத்தை நாம் பேணி பாது­காப்­ப­வர்­க­ளாக மாற­வேண்டும் அதற்­காக அனைத்து மக்­களும் ஒன்­றி­ணைய வேண்டும் என வட மாகாண சபை உறுப்­பினர் அனந்தி சசி­தரன் தெரி­வித்தார். வட­ம­ராட்சி கிழக்கு மரு­தங்­கே­ணியில் மாகாண சபை உறுப்­பி­னர்கள் எம்.கே.சிவா­ஜி­லிங்கம் மற்றும் சுகிர்தன் ஆகி­யோரின் நிதி ஒதுக்­கீட்­டுடன் வழங்­கப்­பட்ட விளை­யாட்டு உப­க­ர­ணங்­களை கைய­ளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கையிலேயே அவர் இதனைத் தெரி­வித்தார்.
           
அவர் அங்கு மேலும் உரை­யாற்­று­கையில்,..
விளை­யாட்டுக் கழ­கங்கள் விளை­யாட்­டுக்கள், உடற்­ப­யிற்­சிகள் என்று மட்டும் நின்­று­வி­டாது விளை­யாட்­டு­க­ளூ­டாக தமி­ழர்­களின் பண்­பாடு, கலை கலா­சார விழு­மி­யங்­களை சமூ­கத்­தோடு இணைத்து செயற்­ப­டுத்த வேண்டும். இன்­றைய சூழலில் மோச­மான ஒரு நிலைக்கு இன்­றைய இளைய சமு­தாயம் தள்­ளப்­பட்­டுள்­ளது.இது திட்­ட­மிட்ட செய­லா­கவே உள்­ள­தாக எண்­ணக்­கூ­டி­ய­தாக உள்­ளது. போதை­வஸ்துப் பாவ­னைகள் கலா­சார சீர­ழி­வுக்கு இட்டுச் செல்­கி­றது. இன்­றைய இளைய சமு­தாயம் தமி­ழரின் பாரம்­ப­ரிய செயல்­களை மற்றும் கடந்த கால வர­லா­று­களை நினைத்து பார்க்க வேண்டும். இன்­றைய சூழல் ஏன் இவ்­வாறு உள்­ளது, யாரால் உரு­வாக்­கப்­ப­டு­கி­றது என்று அவ­தானம் செலுத்த வேண்டும்.
வெறும் உணர்ச்சி பேச்­சு­க­ளுடன் நாம் நிற்­காது எமது தேசியம், சுய­நிர்­ணயம் என்ற கோட்­பா­டு­க­ளுடன் தமிழ் இன அடை­யா­ளத்­துடன் நாம் வாழ எதிர்­காலம் உரு­வாக ஒன்­று­பட வேண்டும். இந் நிகழ்­வா­னது மாகாண சபை உறுப்­பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் மற்றும் சுகிர்­த­னு­டைய நிதி ஒதுக்­கீ­டாகும். எனது நிதி ஒதுக்­கீ­ட்டை பெண் தலைமைத்­துவ குடும்­பங்­களை இலக்­காக கொண்டே ஒதுக்­கீடு செய்­துள்ளேன்.
போரின் கார­ண­மாக பெண்கள் பல்­வேறு பிரச்­ச­ினை­களை சந்­தித்த வண்ணம் உள்­ளார்கள். அத்­த­கை­ய­வர்­களை அடை­யாளம் கண்டு உதவும் மகளிர் சங்கங்களுக்கு எனது ஒதுக்கீடு உள்ளது. இதன் மூலம் ஓரளவு எமது பொருளாதார மேம்பாட்டை அடையலாம் என்ற காரணத்தால் அவர்களுக்காக ஒதுக்கீடு செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila