மிருசுவில் எட்டுபேர் கொலைக் குற்றவாளியான இராணுவச் சிப்பாய்க்கு மரண தண்டனை

Arme

மிருசுவில் கொலையுடன் தொடர்புடைய இராணுவ உத்தியோகத்தருக்கு மரண தண்டனை

மிருசுவில் பிரதேசத்தில் எட்டுத் தமிழ் பிரஜைகள் கொலையுடன் தொடர்புடைய இராணுவ உத்தியோகத்தருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு உயர் நீதிமன்றில் இந்த சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணை நடத்தப்பட்டு வந்தது.

கடந்த 2000மாம் ஆண்டு யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில் வைத்து எட்டு தமிழ்ப் பிரஜைகள் கொலை செய்யப்பட்டனர்.

கொலை செய்யப்பட்ட குறித்த தமிழப் பிரஜைகளின் சடலங்கள் யாருக்கும் தெரியாமல் இராணுவ உத்தியோகத்தர்களினால் புதைக்கப்பட்டிருந்தது.

எனினும், சம்பவத்தில் உயிர் தப்பி ஒருவரின் முறைப்பாட்டின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணைகளின் போது சடலங்கள் தோண்டி எடுக்கப்பட்டது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபராக குற்றம் சுமத்தப்பட்ட இராணுவ உத்தியோகத்தருக்கு கொழும்பு உயர் நீதிமன்றம் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இவேளை, இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என குற்றம் சுமத்தப்பட்டிருந்த நான்கு இராணுவ உத்தியோகத்தர்கள் குற்றமற்றவர்கள் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மிருசுவில் எட்டுபேர் கொலைக் குற்றவாளியான இராணுவச் சிப்பாய்க்கு மரண தண்டனை:-


மிருசுவில் பிரதேசத்தில் 2000ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் எட்டு பேர் கொலை செய்யப்பட்ட வழக்கின் முதலாவது குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று காலை இந்தத் தீர்ப்பை வழங்கியது. இராணுவப் படையணியைச் சேர்ந்த சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்க என்ற இராணுவச் சிப்பாய்க்கே மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila