சர்வதேச விசாரணையே வேண்டும்! - மூதூரில் திரண்ட காணாமற்போனோரின் உறவுகள்.


காணாமற்போகச் செய்யப்பட்டோர் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அமர்வு இன்று திருகோணமலை, மூதூர் பிரதேச செயலகத்தில் நடைபெற்ற நிலையில், இந்த அமர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து காணாமற் போகச் செய்யப்பட்டோரின் உறவுகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வடக்கு, கிழக்கு சிவில் சமூக அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் விசாரணைக்கு அழைக்கப்பட்ட பெருமளவானோர் கலந்து கொண்டனர்.
காணாமற்போகச் செய்யப்பட்டோர் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அமர்வு இன்று திருகோணமலை, மூதூர் பிரதேச செயலகத்தில் நடைபெற்ற நிலையில், இந்த அமர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து காணாமற் போகச் செய்யப்பட்டோரின் உறவுகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வடக்கு, கிழக்கு சிவில் சமூக அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் விசாரணைக்கு அழைக்கப்பட்ட பெருமளவானோர் கலந்து கொண்டனர்.
           
இதன்போது, ஜனாதிபதி ஆணைக்குழுவில் தங்களுக்கு நம்பிக்கை இல்லை, சர்வதேச தரத்திலான விசாரணைக்குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் உறவுகள் ஈடுபட்டனர். காலை 9 மணிக்கு ஆரம்பமான போராட்டம் 11.30 மணிவரை முன்னெடுக்கப்பட்டது.


Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila