செனல்4 ஊடகத்தின் ஆவணப்படம் உண்மையானது என அறிக்கையில் கூறவில்லை


செனல்4 ஊடகத்தின் இலங்கை குறித்த ஆவணப்படம் உண்மையானது என அறிக்கையில் எந்தஇடத்திலும் கூறவில்லை என ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வல் பரணகம தெரிவித்துள்ளார்.

செனல்4 ஊடகத்தின் ஆவணப்படம் உண்மையானது என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக பி.பி.சீ செய்தி வெளியிட்டிருந்தது.எனினும், தாம் அவ்வாறான ஓர் விடத்தையில் அறிக்கையில் கூறவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

ஆவணப்படத்தின் காட்சிகள் தொடர்பில் உண்மையை அறிந்துகொள்ள பக்கச்சார்பற்ற சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டுமென தாம் பரிந்துரை செய்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.பரணகமவின் அறிக்கை அண்மையில் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila