இன்னொரு முகம், எந்த வழக்கும் இல்லாமல் வெறும் சந்தேகத்தின் அடிப்படையில் பல்லாண்டுக் காலமாக சிறை வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கவே கூடாது என்கிறது. எடுத்த எடுப்பில், 'தமிழ் அரசியல்கைதிகள் யாரும் சிறையில் இல்லை' - என்று ஒட்டுமொத்தமாகப் பூசி மெழுகப்பார்த்தது இலங்கை. விக்னேஸ்வரனின் கூர்மையான அணுகுமுறையால், அந்தப் புளுகுமூட்டை அவிழ்ந்தது. எந்த முகாந்திரமும் இல்லாமல் தமிழ் அரசியல் கைதிகள் சிறைவைக்கப்பட்டிருப்பது அம்பலமானது. 'அப்படியெல்லாம் யாரும் சிறைகளில் இல்லை' என்று சொன்ன அதே இலங்கை, 'அவர்களை விடுவிக்கக் கூடாது' என்று இப்போது கூசாமல் பேசுகிறது. தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பான உண்மைகளை அம்பலப்படுத்த விக்னேஸ்வரன் வகுத்த வியூகங்கள் குறித்து இப்போது பேசுவது தேவையற்றது. உணர்ச்சிக் கவிஞர் காசி.ஆனந்தன் சொன்ன மாதிரி, 'நிறைவாகும் வரை மறைவாக இரு'ப்பது தான் நல்லது. தமிழ் அரசியல் கைதிகள் தொடங்கிய உண்ணாவிரதம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஜனாதிபதி மைத்திரிபாலா கொடுத்த வாக்குறுதியால்தான் நிறுத்தப்பட்டது. மைத்திரிபாலாவின் வாக்குறுதி இன்னும் நிறைவேற்றப்படாத நிலையில், அது தொடர்பாக இந்த வாரம் மைத்திரியுடன் கூட்டமைப்புத் தலைவர்கள் பேச இருப்பதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்திருக்கிறார்.
மாவையும் சம்பந்தனும் மைத்திரியிடம் நிச்சயமாகப் பேசுவார்கள். அதில் நமக்கு சந்தேகமேயில்லை. மைத்திரியும் நிச்சயமாக வாக்குறுதி கொடுப்பார்.
அதிலும் சந்தேகமில்லை. இந்த அரசியல் விளையாட்டு இரண்டு தரப்புக்குமே நிச்சயம் தேவைப்படும் - என்பதிலும் சந்தேகமில்லை. ஆனால், அரசியல் கைதிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டு விடுவார்களா? இதில் தான் நமக்கு சந்தேகம் எழுகிறது.
கூட்டமைப்பின் தலைவர்கள் உள்ளிட்ட அரசியல்வாதிகளை நம்ப இயலாத நிலைக்கு - சிறையில் வாடுகிற நிரபராதித் தமிழர்கள் தள்ளப்பட்டிருக்கிறார்களென்றால், கூட்டமைப்புத் தலைவர்களின் குளறுபடிகள்தான் அதற்குக் காரணம். கூட்டமைப்பிலுள்ள ஒரு மேதாவி, அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பாக எத்தகைய முரண்பாடான கருத்துக்களையெல்லாம் வெளியிட்டார் என்பதை நாம் இன்னும் மறந்துவிடவில்லை.
முன்னுக்குப் பின் முரணாகப் பேசும் அரசியல்வாதிகளை எங்களால் நம்ப முடியவில்லை. வட மாகாண சபை முதல்வர் விக்னேஸ்வரனைத்தான் நம்புகிறோம்.
எங்களது விடுதலை தொடர்பாக அரசுடன் முதல்வர் பேசுவதுதான் அர்த்தமுள்ளதாக இருக்கும்' என்று தங்களது பெற்றோர் மூலம் அரசியல் கைதிகள் சொல்லி அனுப்பியிருப்பதாக, வீரகேசரி நாளிதழ் தெரிவித்திருக்கிறது.
வீரகேசரியை மாவை படிக்கிறாரா இல்லையா என்பதைப் பற்றி நமக்குத் தகவல் இல்லை. என்றாலும், அதைப்படிக்காததால் தான் 'ஜனாதிபதியுடன் பேசப் போகிறோம்' என்று அவர் கூறியிருப்பார் என்று நான் கருதுகிறேன்.
அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பாக மட்டுமில்லாமல், காணிகள் விடுவிப்பு தொடர்பாகவும் ஜனாதிபதியுடன் பேசப் போவதாக மாவை தெரிவித்திருக்கிறார்.
இப்படிச் சொல்வதற்கான சகல உரிமையும் நாடாளுமன்றத்தின் மூத்த உறுப்பினரான அவருக்கு இருக்கிறது. அந்த உரிமையோடு, பிரச்சினை குறித்த புரிதலும் மாவைக்கு இருக்க வேண்டியது அவசியம் என்று நினைக்கிறேன்.
காணிகள் விடுவிப்பும், தமிழர் தாயகத்திலிருந்து ராணுவத்தை வெளியேற்றுவதும் ஒன்றோடொன்று தொடர்புடைய விஷயங்கள் என்பது மாவைக்குத் தெரியுமா தெரியாதா? ராணுவத்தை வெளியேற்றாமல் ராணுவத்தினர் ஆக்கிரமித்திருக்கும் காணிகளை எப்படி விடுவிக்க முடியும்? அந்த நிலங்களின் உரிமையாளர்களான தமிழர்களிடம் அவற்றை எப்படித் திருப்பிக் கொடுக்க முடியும்?
'நோய்நாடி நோய் முதல்நாடி அதுதணிக்கும்
வாய் நாடி வாய்ப்பச் செயல்' - என்கிறது வள்ளுவம்.
அதுதானே அறிவுடைமை.
உடல்நலம் பாதிக்கப்பட்டிருப்பவர், முதலில் மருத்துவரைத்தான் பார்க்கவேண்டும். நோய்க்கான காரணம் என்ன என்பதையே அறியாமல், 'காய்ச்சலுக்கு ரெண்டு மாத்திரை கொடு' என்று மருந்துக் கடையில் போய் கேட்டுக் கொண்டிருக்கக் கூடாது.
அதைத்தான் செய்கிறார் மாவை. அவருக்கும் விக்னேஸ்வரனுக்கும் இடையில் இருக்கிற வித்தியாசத்தை இதுபோன்ற அணுகுமுறைகள்தான், உள்ளங்கை நெல்லிக்கனி மாதிரி காட்டுகின்றன.
தமிழர் தாயகத்தில் ஒன்றரை லட்சம் இராணுவத்தினர் நிற்க வேண்டிய அவசியமென்ன? போர் முடிந்துவிட்டதாக அவர்களே அறிவித்துவிட்ட பிறகு இந்த இராணுவத் திணிப்பு எதற்கு?
தொடர்ந்து பாலியல் புகார்களுக்கு உள்ளாகும் ஒரு இராணுவம் எம் மண்ணில் நிற்பது எம் சகோதரிகளுக்கு ஆபத்தா இல்லையா? இராணுவத்தை வெளியேற்றாமல் காணிகளை எப்படி விடுவிக்க முடியும் - என்றெல்லாம் அழுத்தந் திருத்தமான கேள்விகளைத் தொடர்ந்து முன்வைக்கிறார் விக்னேஸ்வரன்.
இராணுவத்தை வெளியேற்று - என்று மட்டுமே விக்னேஸ்வரன் சொல்லவில்லை. சிங்கள அரசின் திட்டமிட்ட சதி ஒன்றைத் துணிவோடு அம்பலப்படுத்தினார்.
தமிழர் தாயகத்தில் போதை மருந்துகளைப் பரப்புவது இராணுவம்தான்.... எம் இளைஞர்களின் எதிர்காலத்தைச் சீரழிப்பதற்காக இந்தக் கொடுமையை அவர்கள் திட்டமிட்டுச் செய்கிறார்கள்' என்று பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டினார்.
விக்னேஸ்வரனின் இந்தக் குற்றச்சாட்டு மிக மிகக் கடுமையானது. உலகின் எந்த நாட்டிலும், ஒரு மத்திய அரசுக்கு எதிராக, அதிலும் குறிப்பாக இராணுவத்துக்கு எதிராக - 'போதைப் பொருளை இராணுவம் பரப்புகிறது' என்று யாரும் குற்றம் சாட்டியதாகத் தெரியவில்லை.
விக்னேஸ்வரன் ஒரு மாகாண சபையின் முதல்வர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர். அவர் அப்படியொரு குற்றச்சாட்டை முன்வைத்தது, சர்வ சாதாரணமான செய்தி அல்ல!
விக்னேஸ்வரன் சொன்னது பொய்யாயிருந்தால், இலங்கை மத்திய அரசு உடனடியாக அவர்மீது நடவடிக்கை எடுத்திருக்கும். அப்படிச் செய்யத் துணியாததிலிருந்து, விக்னேஸ்வரனின் குற்றச்சாட்டு வலுவானது என்பது தெளிவாகிறது.
அப்படியொரு குற்றச்சாட்டு தொடர்பாக கருத்துத் தெரிவிக்கக் கூட துணிவில்லாதிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்புதான், 'இராணுவத்தை வெளியேற்று' - என்று முழங்காமல், 'காணிகளை விடுவி' என்று மென்று விழுங்குகிறது.
இராணுவத்தை வெளியேற்று - என்பதை வலியுறுத்தாமல், 'காணிகளை விடுவித்துவிடுங்கள்' - என்று மாவை கோருவது அர்த்தமற்றது. நோய்க்கான காரணம் என்ன - என்பதைப் பற்றிக் கவலையே படாமல், மருந்துக் கடையில் போய் மாத்திரை கேட்கிறாரா மாவை!
பல்லாயிரம் மக்கள் வசிப்பதற்குப் போதுமான ஒரு நிலப்பரப்பு, சில நூறு பேரே இருக்கிற ஒரு இராணுவ முகாமுக்குத் தேவைப்படுகிறது. அதன் பக்கத்தில் கூட எவரும் நெருங்கிவிட முடியாத அளவுக்கு நீண்ட தூரத்துக்கு பாதுகாப்பு வேலிகள் தேவைப்படுகின்றன.
இராணுவத்தை வெளியேற்றாமல், அந்தக் காணிகளை மீட்டுவிட முடியும் - என்று மாவை நம்புவது அவரது அறியாமையை மட்டுமே காட்டுகிறதா, ஒட்டுமொத்தக் கூட்டமைப்பின் அறியாமையையும் காட்டுகிறதா என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும்.
சகோதரி தமிழினிக்காக கவிஞர் ஈழவன் எழுதியிருந்த ஓர் அற்புதமான கவிதையை மாவை போன்ற தலைவர்கள் படித்துப் பார்க்க வேண்டும்.
"விழுபவர் எழுவதும் வீழ்த்தியோர் அழிவதும்
எழுதிய விதியதன் உறுபயன் ஆயினும்
எதையெதை இழந்தோம் எதுவரை இழந்தோம்
அதையெலாம் அறிந்திடும் அருகதை இழந்தோம்'
- என்கிறார் ஈழவன் வேதனையுடன்!
இந்த இனத்துக்கு ஏற்பட்டிருக்கும் இழப்பின் அளவை அறிந்திடும் அருகதையை எவர் இழப்பினும், இந்த இனத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் தலைவர்கள் இழக்கலாமா?
இந்தத் தலைவர்களைத் தேர்ந்தெடுத்த எமது மக்கள்தானே விக்னேஸ்வரன் என்கிற புதுவரவை முழு நம்பிக்கையோடு அங்கீகரித்தார்கள்.....! அந்த நம்பிக்கையைக் காப்பாற்ற விக்னேஸ்வரனால் முடிகிற நிலையில், அதற்கு நேர்மாறாக சில தலைவர்கள் நடந்துகொள்வதற்கு என்ன காரணம்?
இனப்படுகொலை என்று சொல்வது ராஜதந்திரமில்லை...
சர்வதேச விசாரணை கோருவது ராஜதந்திரமில்லை....
இராணுவத்தை வெளியேற்றச் சொல்வது ராஜதந்திரமில்லை...
என்று மெத்தப் படித்த மேதாவிகள் சிலர், இந்தத் தலைவர்களின் சார்பில் பேசிக் கொண்டேயிருக்கிறார்களே...... வேறெதைத்தான் ராஜதந்திரமென்று கருதுகிறார்கள் அவர்கள்!
இனப்படுகொலை - என்கிற வார்த்த்தையைப் பார்த்து நடுங்குவது இலங்கை அரசு மட்டும்தான்...
சர்வதேச விசாரணை கூடவே கூடாது - என்று சொல்வது, பௌத்த சிங்கள வெறியர்கள்தான்....
தமிழர் தாயகத்திலிருந்து இராணுவத்தை வெளியேற்றவே கூடாது - என்று வற்புறுத்துவது பௌத்த மத பீடங்கள் தான்.....
அவர்கள் சொல்வதையே தான் இவர்களும் சொல்வார்கள் என்றால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்கிற பெயர் எதற்கு? தமிழ் - சிங்களக் கூட்டமைப்பு என்று பெயர் மாற்றித் தொலைக்க வேண்டியதுதானே!
அரவணைத்துப் போய்க் காரியம் சாதித்துக் கொள்வதுதான் புத்திசாலித்தனம் - என்று எனக்கு மின்னஞ்சல் வழி அறிவுரை சொல்லுகிற நண்பர்களிடம் - 'அரவணைத்துப் போய் என்ன காரியத்தைச் சாதித்துக் கிழித்திருக்கிறார்கள்' என்று கேட்பதைத் தவிர்க்க முடியவில்லை.
2009ல் நடந்தது திட்டமிட்ட அந்த இனப்படுகொலை.
ஆறு ஆண்டுகள் முடிந்து போய்விட்டன.
எம் உறவுகளைக் கொன்று குவித்த ஒரே ஒரு சிப்பாய் கூட கூண்டில் நிறுத்தப்படவில்லை. எம் சகோதரிகளைச் சீரழித்து நாசமாக்கிக் கொன்ற ஒரே ஒரு இராணுவப் பொறுக்கி கூட தூக்கிலிடப்படவில்லை.
எல்லா விதங்களிலும் அழிக்கப்பட்ட எம் இனத்துக்கு, ஒரே ஒரு முனையில் கூட இன்னும் நீதி கிடைக்கவில்லை.
தமக்கான நீதியை எமது மக்கள் பெறுவதற்கு இந்த ஆறு ஆண்டுகளில் ஒரு துரும்பைக்கூட தூக்கிவைக்க முடியவில்லை, மெத்தப்படித்த மேதாவிகளால்! சிங்கள மிருகங்களுக்கு வாய்தா வாங்குகிற உள்குத்து வேலையை மட்டும்தான் விசுவாசமாகச் செய்து கொண்டிருக்கிறார்கள் அவர்கள்.
இதைத்தான் சம்பந்தனிடம் கேட்டிருக்கிறார்கள், சுரேஷ் பிரேமச்சந்திரனும் மற்றவர்களும்! 'நீங்களும் சுமந்திரனும் தன்னிச்சையாக எடுக்கிற முடிவுகளைக் கூட்டமைப்பின் முடிவாக ஜெனிவாவில் பறைசாற்றியது நியாயமா' என்று கேட்டவர்களிடம் சம்பந்தன் மன்னிப்பு கேட்டதோடு சபை கலைந்துவிட்டது.
நடந்த தவறுக்கு (தவறா அது, பச்சைத் துரோகம்!) சுரேஷிடமும் மற்றவர்களிடமும் மன்னிப்பு கேட்ட சம்பந்தர், 'மதத் தலைவர்களுடன் ஆலோசனை' என்கிற பெயரில் மைத்திரி நடத்துகிற திட்டமிட்ட அயோக்கியத்தனத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறாரே... யாராவது கேட்டால் மன்னிப்பு கேட்டுக் கொள்ளலாம் என்று நினைக்கிறாரா?
ஜெனிவா தீர்மானத்தில் 'சர்வதேச விசாரணை' என்கிற வார்த்தை 'கொல்லப்பட்ட'போது, அதை வேடிக்கை பார்த்தது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்கிய விசாரணை - என்று குறிப்பிடப்பட்டதே எங்களால்தான் என்று நீட்டி முழங்கியது.
இப்போது, அந்த விசாரணைதானே ஆரம்பிக்கப்பட வேண்டும். அதற்கு நேர்மாறாக, 'என்ன செய்வது' என்று ஆலோசிக்க மதத்தலைவர்கள் கூட்டம் நடந்து கொண்டிருக்கிறதே, எதற்கு? மதத் தலைவர்களுக்கும் இதற்கும் என்ன சம்பந்தம் - என்று கேட்க வேண்டாமா சம்பந்தர்!
இலங்கையின் விருப்பப்படியெல்லாம் வரிக்கு வரி மாற்றப்பட்டது, ஜெனிவா தீர்மானம். உண்மையில் அது அமெரிக்காவின் தீர்மானமே இல்லை. இலங்கையே எழுதிக்கொடுத்த தீர்மானம். அதைக் கூட மதிக்காதென்றால், இலங்கை வேறெதைத்தான் மதிக்கப் போகிறது?
ஜெனிவா தீர்மானத்தின் எந்த இடத்திலாவது - 'இந்தத் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வெளிநாட்டு நீதிபதிகள் பங்கேற்பு தொடர்பாக இலங்கையின் மதத் தலைவர்களைக் கலந்து பேசி முடிவெடுக்க வேண்டும்' என்று குறிப்பிடப் பட்டிருக்கிறதா?
'எந்த அடிப்படையில், ஜெனிவா தீர்மானம் தொடர்பான சட்ட நடவடிக்கைகள் குறித்து மதத் தலைவர்களுடன் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கிறீர்கள்' - என்று இலங்கை அரசிடம் கேட்க வேண்டாமா சம்பந்தன்!
பௌத்த மத வெறி தான், இலங்கை என்கிற தேசம் நாசமானதற்கு மூலகாரணம். தேச நலனைக் காட்டிலும் பௌத்த நலன்தான் முக்கியம் - என்கிற தவறான அணுகுமுறையால்தான் அழிந்திருக்கிறது அந்த அழகிய தீவு.
அமைதித் தீர்வுக்கு முயன்ற பண்டாரநாயகாவை ஒரு புத்தபிக்குதான் சுட்டுக் கொன்றான். புத்த பிக்குகளின் பிக்ஷா பாத்திரங்கள் தமிழரின் ரத்தத்தால் நிறைவது, ஒட்டுமொத்த இலங்கையும் அறிந்த ரகசியம். அந்த பௌத்த மிருகங்களை உட்காரவைத்து, நீதி கிடைக்க என்ன செய்யலாம் என்று ஆலோசிப்பதை சம்பந்தன் எப்படி அனுமதிக்கிறார்?
சிங்கள பௌத்தர்களால் எடுத்த எடுப்பிலேயே கொன்று குவிக்கப்பட்டது, தமிழினம் இல்லை.....! அதற்கு முன்பே, புத்தன் போதித்த அன்பையும் அகிம்சையையும், துடிக்கத் துடிக்கப் படுகொலை செய்தவர்கள் அவர்கள். அவர்களது வெறி - புத்த வெறியல்ல, ரத்த வெறி.
'ரத்த பிக்குகளை மடியில் வைத்துக்கொண்டே நீதி வழங்குவோம்' - என்று சொல்கிற இலங்கையின் அயோக்கியத்தனத்தை, சம்பந்தனும் சுமந்திரனும் மட்டுமல்ல,
அமெரிக்காவும் இந்தியாவும் கூட புரிந்துகொள்ள வேண்டும். அதைப் புரிந்துகொள்ள முயலாமல், பாதிக்கப்பட்ட எமது தாயக மக்கள் மீது ரத்த பிக்குகளின் தீர்வைத் திணிக்க இவர்கள் யார்?
புகழேந்தி தங்கராஜ்
mythrn@yahoo.com
மாவையும் சம்பந்தனும் மைத்திரியிடம் நிச்சயமாகப் பேசுவார்கள். அதில் நமக்கு சந்தேகமேயில்லை. மைத்திரியும் நிச்சயமாக வாக்குறுதி கொடுப்பார்.
அதிலும் சந்தேகமில்லை. இந்த அரசியல் விளையாட்டு இரண்டு தரப்புக்குமே நிச்சயம் தேவைப்படும் - என்பதிலும் சந்தேகமில்லை. ஆனால், அரசியல் கைதிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டு விடுவார்களா? இதில் தான் நமக்கு சந்தேகம் எழுகிறது.
கூட்டமைப்பின் தலைவர்கள் உள்ளிட்ட அரசியல்வாதிகளை நம்ப இயலாத நிலைக்கு - சிறையில் வாடுகிற நிரபராதித் தமிழர்கள் தள்ளப்பட்டிருக்கிறார்களென்றால், கூட்டமைப்புத் தலைவர்களின் குளறுபடிகள்தான் அதற்குக் காரணம். கூட்டமைப்பிலுள்ள ஒரு மேதாவி, அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பாக எத்தகைய முரண்பாடான கருத்துக்களையெல்லாம் வெளியிட்டார் என்பதை நாம் இன்னும் மறந்துவிடவில்லை.
முன்னுக்குப் பின் முரணாகப் பேசும் அரசியல்வாதிகளை எங்களால் நம்ப முடியவில்லை. வட மாகாண சபை முதல்வர் விக்னேஸ்வரனைத்தான் நம்புகிறோம்.
எங்களது விடுதலை தொடர்பாக அரசுடன் முதல்வர் பேசுவதுதான் அர்த்தமுள்ளதாக இருக்கும்' என்று தங்களது பெற்றோர் மூலம் அரசியல் கைதிகள் சொல்லி அனுப்பியிருப்பதாக, வீரகேசரி நாளிதழ் தெரிவித்திருக்கிறது.
வீரகேசரியை மாவை படிக்கிறாரா இல்லையா என்பதைப் பற்றி நமக்குத் தகவல் இல்லை. என்றாலும், அதைப்படிக்காததால் தான் 'ஜனாதிபதியுடன் பேசப் போகிறோம்' என்று அவர் கூறியிருப்பார் என்று நான் கருதுகிறேன்.
அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பாக மட்டுமில்லாமல், காணிகள் விடுவிப்பு தொடர்பாகவும் ஜனாதிபதியுடன் பேசப் போவதாக மாவை தெரிவித்திருக்கிறார்.
இப்படிச் சொல்வதற்கான சகல உரிமையும் நாடாளுமன்றத்தின் மூத்த உறுப்பினரான அவருக்கு இருக்கிறது. அந்த உரிமையோடு, பிரச்சினை குறித்த புரிதலும் மாவைக்கு இருக்க வேண்டியது அவசியம் என்று நினைக்கிறேன்.
காணிகள் விடுவிப்பும், தமிழர் தாயகத்திலிருந்து ராணுவத்தை வெளியேற்றுவதும் ஒன்றோடொன்று தொடர்புடைய விஷயங்கள் என்பது மாவைக்குத் தெரியுமா தெரியாதா? ராணுவத்தை வெளியேற்றாமல் ராணுவத்தினர் ஆக்கிரமித்திருக்கும் காணிகளை எப்படி விடுவிக்க முடியும்? அந்த நிலங்களின் உரிமையாளர்களான தமிழர்களிடம் அவற்றை எப்படித் திருப்பிக் கொடுக்க முடியும்?
'நோய்நாடி நோய் முதல்நாடி அதுதணிக்கும்
வாய் நாடி வாய்ப்பச் செயல்' - என்கிறது வள்ளுவம்.
அதுதானே அறிவுடைமை.
உடல்நலம் பாதிக்கப்பட்டிருப்பவர், முதலில் மருத்துவரைத்தான் பார்க்கவேண்டும். நோய்க்கான காரணம் என்ன என்பதையே அறியாமல், 'காய்ச்சலுக்கு ரெண்டு மாத்திரை கொடு' என்று மருந்துக் கடையில் போய் கேட்டுக் கொண்டிருக்கக் கூடாது.
அதைத்தான் செய்கிறார் மாவை. அவருக்கும் விக்னேஸ்வரனுக்கும் இடையில் இருக்கிற வித்தியாசத்தை இதுபோன்ற அணுகுமுறைகள்தான், உள்ளங்கை நெல்லிக்கனி மாதிரி காட்டுகின்றன.
தமிழர் தாயகத்தில் ஒன்றரை லட்சம் இராணுவத்தினர் நிற்க வேண்டிய அவசியமென்ன? போர் முடிந்துவிட்டதாக அவர்களே அறிவித்துவிட்ட பிறகு இந்த இராணுவத் திணிப்பு எதற்கு?
தொடர்ந்து பாலியல் புகார்களுக்கு உள்ளாகும் ஒரு இராணுவம் எம் மண்ணில் நிற்பது எம் சகோதரிகளுக்கு ஆபத்தா இல்லையா? இராணுவத்தை வெளியேற்றாமல் காணிகளை எப்படி விடுவிக்க முடியும் - என்றெல்லாம் அழுத்தந் திருத்தமான கேள்விகளைத் தொடர்ந்து முன்வைக்கிறார் விக்னேஸ்வரன்.
இராணுவத்தை வெளியேற்று - என்று மட்டுமே விக்னேஸ்வரன் சொல்லவில்லை. சிங்கள அரசின் திட்டமிட்ட சதி ஒன்றைத் துணிவோடு அம்பலப்படுத்தினார்.
தமிழர் தாயகத்தில் போதை மருந்துகளைப் பரப்புவது இராணுவம்தான்.... எம் இளைஞர்களின் எதிர்காலத்தைச் சீரழிப்பதற்காக இந்தக் கொடுமையை அவர்கள் திட்டமிட்டுச் செய்கிறார்கள்' என்று பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டினார்.
விக்னேஸ்வரனின் இந்தக் குற்றச்சாட்டு மிக மிகக் கடுமையானது. உலகின் எந்த நாட்டிலும், ஒரு மத்திய அரசுக்கு எதிராக, அதிலும் குறிப்பாக இராணுவத்துக்கு எதிராக - 'போதைப் பொருளை இராணுவம் பரப்புகிறது' என்று யாரும் குற்றம் சாட்டியதாகத் தெரியவில்லை.
விக்னேஸ்வரன் ஒரு மாகாண சபையின் முதல்வர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர். அவர் அப்படியொரு குற்றச்சாட்டை முன்வைத்தது, சர்வ சாதாரணமான செய்தி அல்ல!
விக்னேஸ்வரன் சொன்னது பொய்யாயிருந்தால், இலங்கை மத்திய அரசு உடனடியாக அவர்மீது நடவடிக்கை எடுத்திருக்கும். அப்படிச் செய்யத் துணியாததிலிருந்து, விக்னேஸ்வரனின் குற்றச்சாட்டு வலுவானது என்பது தெளிவாகிறது.
அப்படியொரு குற்றச்சாட்டு தொடர்பாக கருத்துத் தெரிவிக்கக் கூட துணிவில்லாதிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்புதான், 'இராணுவத்தை வெளியேற்று' - என்று முழங்காமல், 'காணிகளை விடுவி' என்று மென்று விழுங்குகிறது.
இராணுவத்தை வெளியேற்று - என்பதை வலியுறுத்தாமல், 'காணிகளை விடுவித்துவிடுங்கள்' - என்று மாவை கோருவது அர்த்தமற்றது. நோய்க்கான காரணம் என்ன - என்பதைப் பற்றிக் கவலையே படாமல், மருந்துக் கடையில் போய் மாத்திரை கேட்கிறாரா மாவை!
பல்லாயிரம் மக்கள் வசிப்பதற்குப் போதுமான ஒரு நிலப்பரப்பு, சில நூறு பேரே இருக்கிற ஒரு இராணுவ முகாமுக்குத் தேவைப்படுகிறது. அதன் பக்கத்தில் கூட எவரும் நெருங்கிவிட முடியாத அளவுக்கு நீண்ட தூரத்துக்கு பாதுகாப்பு வேலிகள் தேவைப்படுகின்றன.
இராணுவத்தை வெளியேற்றாமல், அந்தக் காணிகளை மீட்டுவிட முடியும் - என்று மாவை நம்புவது அவரது அறியாமையை மட்டுமே காட்டுகிறதா, ஒட்டுமொத்தக் கூட்டமைப்பின் அறியாமையையும் காட்டுகிறதா என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும்.
சகோதரி தமிழினிக்காக கவிஞர் ஈழவன் எழுதியிருந்த ஓர் அற்புதமான கவிதையை மாவை போன்ற தலைவர்கள் படித்துப் பார்க்க வேண்டும்.
"விழுபவர் எழுவதும் வீழ்த்தியோர் அழிவதும்
எழுதிய விதியதன் உறுபயன் ஆயினும்
எதையெதை இழந்தோம் எதுவரை இழந்தோம்
அதையெலாம் அறிந்திடும் அருகதை இழந்தோம்'
- என்கிறார் ஈழவன் வேதனையுடன்!
இந்த இனத்துக்கு ஏற்பட்டிருக்கும் இழப்பின் அளவை அறிந்திடும் அருகதையை எவர் இழப்பினும், இந்த இனத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் தலைவர்கள் இழக்கலாமா?
இந்தத் தலைவர்களைத் தேர்ந்தெடுத்த எமது மக்கள்தானே விக்னேஸ்வரன் என்கிற புதுவரவை முழு நம்பிக்கையோடு அங்கீகரித்தார்கள்.....! அந்த நம்பிக்கையைக் காப்பாற்ற விக்னேஸ்வரனால் முடிகிற நிலையில், அதற்கு நேர்மாறாக சில தலைவர்கள் நடந்துகொள்வதற்கு என்ன காரணம்?
இனப்படுகொலை என்று சொல்வது ராஜதந்திரமில்லை...
சர்வதேச விசாரணை கோருவது ராஜதந்திரமில்லை....
இராணுவத்தை வெளியேற்றச் சொல்வது ராஜதந்திரமில்லை...
என்று மெத்தப் படித்த மேதாவிகள் சிலர், இந்தத் தலைவர்களின் சார்பில் பேசிக் கொண்டேயிருக்கிறார்களே...... வேறெதைத்தான் ராஜதந்திரமென்று கருதுகிறார்கள் அவர்கள்!
இனப்படுகொலை - என்கிற வார்த்த்தையைப் பார்த்து நடுங்குவது இலங்கை அரசு மட்டும்தான்...
சர்வதேச விசாரணை கூடவே கூடாது - என்று சொல்வது, பௌத்த சிங்கள வெறியர்கள்தான்....
தமிழர் தாயகத்திலிருந்து இராணுவத்தை வெளியேற்றவே கூடாது - என்று வற்புறுத்துவது பௌத்த மத பீடங்கள் தான்.....
அவர்கள் சொல்வதையே தான் இவர்களும் சொல்வார்கள் என்றால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்கிற பெயர் எதற்கு? தமிழ் - சிங்களக் கூட்டமைப்பு என்று பெயர் மாற்றித் தொலைக்க வேண்டியதுதானே!
அரவணைத்துப் போய்க் காரியம் சாதித்துக் கொள்வதுதான் புத்திசாலித்தனம் - என்று எனக்கு மின்னஞ்சல் வழி அறிவுரை சொல்லுகிற நண்பர்களிடம் - 'அரவணைத்துப் போய் என்ன காரியத்தைச் சாதித்துக் கிழித்திருக்கிறார்கள்' என்று கேட்பதைத் தவிர்க்க முடியவில்லை.
2009ல் நடந்தது திட்டமிட்ட அந்த இனப்படுகொலை.
ஆறு ஆண்டுகள் முடிந்து போய்விட்டன.
எம் உறவுகளைக் கொன்று குவித்த ஒரே ஒரு சிப்பாய் கூட கூண்டில் நிறுத்தப்படவில்லை. எம் சகோதரிகளைச் சீரழித்து நாசமாக்கிக் கொன்ற ஒரே ஒரு இராணுவப் பொறுக்கி கூட தூக்கிலிடப்படவில்லை.
எல்லா விதங்களிலும் அழிக்கப்பட்ட எம் இனத்துக்கு, ஒரே ஒரு முனையில் கூட இன்னும் நீதி கிடைக்கவில்லை.
தமக்கான நீதியை எமது மக்கள் பெறுவதற்கு இந்த ஆறு ஆண்டுகளில் ஒரு துரும்பைக்கூட தூக்கிவைக்க முடியவில்லை, மெத்தப்படித்த மேதாவிகளால்! சிங்கள மிருகங்களுக்கு வாய்தா வாங்குகிற உள்குத்து வேலையை மட்டும்தான் விசுவாசமாகச் செய்து கொண்டிருக்கிறார்கள் அவர்கள்.
இதைத்தான் சம்பந்தனிடம் கேட்டிருக்கிறார்கள், சுரேஷ் பிரேமச்சந்திரனும் மற்றவர்களும்! 'நீங்களும் சுமந்திரனும் தன்னிச்சையாக எடுக்கிற முடிவுகளைக் கூட்டமைப்பின் முடிவாக ஜெனிவாவில் பறைசாற்றியது நியாயமா' என்று கேட்டவர்களிடம் சம்பந்தன் மன்னிப்பு கேட்டதோடு சபை கலைந்துவிட்டது.
நடந்த தவறுக்கு (தவறா அது, பச்சைத் துரோகம்!) சுரேஷிடமும் மற்றவர்களிடமும் மன்னிப்பு கேட்ட சம்பந்தர், 'மதத் தலைவர்களுடன் ஆலோசனை' என்கிற பெயரில் மைத்திரி நடத்துகிற திட்டமிட்ட அயோக்கியத்தனத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறாரே... யாராவது கேட்டால் மன்னிப்பு கேட்டுக் கொள்ளலாம் என்று நினைக்கிறாரா?
ஜெனிவா தீர்மானத்தில் 'சர்வதேச விசாரணை' என்கிற வார்த்தை 'கொல்லப்பட்ட'போது, அதை வேடிக்கை பார்த்தது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்கிய விசாரணை - என்று குறிப்பிடப்பட்டதே எங்களால்தான் என்று நீட்டி முழங்கியது.
இப்போது, அந்த விசாரணைதானே ஆரம்பிக்கப்பட வேண்டும். அதற்கு நேர்மாறாக, 'என்ன செய்வது' என்று ஆலோசிக்க மதத்தலைவர்கள் கூட்டம் நடந்து கொண்டிருக்கிறதே, எதற்கு? மதத் தலைவர்களுக்கும் இதற்கும் என்ன சம்பந்தம் - என்று கேட்க வேண்டாமா சம்பந்தர்!
இலங்கையின் விருப்பப்படியெல்லாம் வரிக்கு வரி மாற்றப்பட்டது, ஜெனிவா தீர்மானம். உண்மையில் அது அமெரிக்காவின் தீர்மானமே இல்லை. இலங்கையே எழுதிக்கொடுத்த தீர்மானம். அதைக் கூட மதிக்காதென்றால், இலங்கை வேறெதைத்தான் மதிக்கப் போகிறது?
ஜெனிவா தீர்மானத்தின் எந்த இடத்திலாவது - 'இந்தத் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வெளிநாட்டு நீதிபதிகள் பங்கேற்பு தொடர்பாக இலங்கையின் மதத் தலைவர்களைக் கலந்து பேசி முடிவெடுக்க வேண்டும்' என்று குறிப்பிடப் பட்டிருக்கிறதா?
'எந்த அடிப்படையில், ஜெனிவா தீர்மானம் தொடர்பான சட்ட நடவடிக்கைகள் குறித்து மதத் தலைவர்களுடன் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கிறீர்கள்' - என்று இலங்கை அரசிடம் கேட்க வேண்டாமா சம்பந்தன்!
பௌத்த மத வெறி தான், இலங்கை என்கிற தேசம் நாசமானதற்கு மூலகாரணம். தேச நலனைக் காட்டிலும் பௌத்த நலன்தான் முக்கியம் - என்கிற தவறான அணுகுமுறையால்தான் அழிந்திருக்கிறது அந்த அழகிய தீவு.
அமைதித் தீர்வுக்கு முயன்ற பண்டாரநாயகாவை ஒரு புத்தபிக்குதான் சுட்டுக் கொன்றான். புத்த பிக்குகளின் பிக்ஷா பாத்திரங்கள் தமிழரின் ரத்தத்தால் நிறைவது, ஒட்டுமொத்த இலங்கையும் அறிந்த ரகசியம். அந்த பௌத்த மிருகங்களை உட்காரவைத்து, நீதி கிடைக்க என்ன செய்யலாம் என்று ஆலோசிப்பதை சம்பந்தன் எப்படி அனுமதிக்கிறார்?
சிங்கள பௌத்தர்களால் எடுத்த எடுப்பிலேயே கொன்று குவிக்கப்பட்டது, தமிழினம் இல்லை.....! அதற்கு முன்பே, புத்தன் போதித்த அன்பையும் அகிம்சையையும், துடிக்கத் துடிக்கப் படுகொலை செய்தவர்கள் அவர்கள். அவர்களது வெறி - புத்த வெறியல்ல, ரத்த வெறி.
'ரத்த பிக்குகளை மடியில் வைத்துக்கொண்டே நீதி வழங்குவோம்' - என்று சொல்கிற இலங்கையின் அயோக்கியத்தனத்தை, சம்பந்தனும் சுமந்திரனும் மட்டுமல்ல,
அமெரிக்காவும் இந்தியாவும் கூட புரிந்துகொள்ள வேண்டும். அதைப் புரிந்துகொள்ள முயலாமல், பாதிக்கப்பட்ட எமது தாயக மக்கள் மீது ரத்த பிக்குகளின் தீர்வைத் திணிக்க இவர்கள் யார்?
புகழேந்தி தங்கராஜ்
mythrn@yahoo.com