அங்கு தமிழ் அரசியல் கைதிகளுடன் கலந்துரையாடியுள்ளார். கைதிகளின் நிலை குறித்து லங்காசிறி 24 செய்தி சேவைக்கு வழங்கிய விசேட நேர்காணலில், அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பான பிரச்சினையில் எதிர்பார்த்த தீர்வு கிடைக்குமோ என்ற சந்தேகம் இருப்பது குறித்து தாம் அரசியல் கைதிகளிடம் கூறியதாக வடக்கு முதலமைச்சர் சி.வீ. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். அத்துடன் உயிருக்கு ஆபத்து ஏற்படாத வகையில் போராட்டத்தை தொடரலாம் என அறிவுறுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்பிரகாரம், இன்று முதல் எதிர்வரும் 10 நாட்களுக்கு குறித்த 90 பேரும் கட்டம் கட்டமாக புனர்வாழ்வு அளிக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
இதேவேளை, உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கைதிகள் ஆரோக்கியமான உடல்நிலையில் உள்ளதாகவும் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் குறிப்பிட்டார்.
இதன்போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனும் பிரசன்னமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதன்பிரகாரம், இன்று முதல் எதிர்வரும் 10 நாட்களுக்கு குறித்த 90 பேரும் கட்டம் கட்டமாக புனர்வாழ்வு அளிக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
இதேவேளை, உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கைதிகள் ஆரோக்கியமான உடல்நிலையில் உள்ளதாகவும் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் குறிப்பிட்டார்.
இதன்போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனும் பிரசன்னமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.