இராணுவத்தினரினால் அச்சுறுத்தல் - அரசியல் கைதியின் மனைவி கண்ணீருடன் தெரிவிப்பு


அரசியல் கைதியான தனது கணவரை விரைவில் விடுதலை செய்யுமாறு மனைவி ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த 2009 ஆம் ஆண்டு கைதுசெய்யப்பட்ட தனது கணவருக்கு சிறைச்சாலையில் பல்வேறு சித்திரவதைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் கணவர் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமையினால் தனது குடும்பத்தை கொண்டு செல்ல முடியாத நிலைமை காணப்படுவதாகவும், இதனால் பிள்ளைகள் கற்றல் செயற்பாடுகளை முன்னெடுக்க முடியாத நிலைமைகள் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

அத்துடன் கணவரின்றி தாம் தனிமையில் வசித்து வந்த நிலையில் இராணுவத்தினரின் அச்சுறுத்தல்களை எதிர்நோக்கியதாகவும் அவர் கூறினார்.

இதனால் தமது பிள்ளைகளின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு தனது மூத்த மகளை கொழும்பில் கல்வியை தொடர்வதற்கு ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவித்த அவர், தமது பாதுகாப்பை கருதி கடந்த மூன்று ஆண்டுகளாக வேறு பகுதியில் வசித்து வருவதாகவும் தெரிவித்தார்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila