அரசியல் கைதிகளுக்காக உயிர்நீத்த செந்தூரனின் குடும்பத்தினருக்கு திட்டமிட்டவகையில் தொல்லை

அரசியல் கைதிகளை விடுதலை செய்யவேண்டும் என்றுகோரி ரயிலின் முன்னால் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட யாழ்ப்பாண மாணவரின் குடும்பத்தினரை சாதாரண ஆடைகளில் வந்த சிங்கள பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவினர் திட்டமிட்ட வகையில் தொல்லை செய்து வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த விசாரணையாளர்கள், செந்தூரனின் தற்கொலைக்கு அரசியல் தரப்புக்கள் காரணமாக இருக்கலாமா? என்பதை கண்டறியும் வகையிலேயே கேள்விகளை தொடுக்கின்றனர்.
செந்தூரன், சிறந்த பண்புகளை கொண்ட மாணவர் என்பதுடன் ஊடகக் கற்கையிலும் ஆர்வம் கொண்டிருந்தார்;.
செந்தூரன், சிறந்த உடலமைப்பை கொண்டு 100 மீற்றர் ஓட்ட வீரராகவும் திகழ்ந்தார்.
ஊடகக் கற்கையை மேற்கொள்வதற்காகவே அவர் கொக்குவில் இந்துக் கல்லூரியை தேர்ந்தெடுத்தார்.
எனினும் அவரின் தற்கொலை முடிவு அனைவருக்கும் ஆச்சரியத்தை உண்டாக்கியுள்ளது என்று அவரின் நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை தமது விடுதலை தொடர்பான அரசாங்கத்தின் முடிவை அடுத்து எதிர்வரும் 15ம் திகதியன்று அடுத்த கட்டப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக தமிழ் அரசியல் கைதிகள் அறிவித்துள்ளனர்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila