நாடு திரும்பிய ஊடகவியலாளர் கைது!


அவுஸ்திரேலியாவில் இருந்து நாடு திரும்பிய மட்டக்களப்பைச் சேர்ந்த ஊடகவியலாளர் புண்ணியமூர்த்தி சசிகரன் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று மாலை குறித்த ஊடகவியலாளர் நாடு திரும்பிய போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து அவரை கைதுச் செய்ததாகவும் குடிவரவு குடியகல்வு சட்டங்களை மீறியமை தொfடர்பிலேயே அவரைக் கைதுச் செய்ததாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

2012 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் ஹிக்கடுவை பகுதியில் இருந்து சட்ட விரோதமாக படகு மூலம் புண்ணிய மூர்த்தி சசிகரன் அவுஸ்திரேலியாவுக்கு சென்றுள்ளார். இந் நிலையிலேயே அவர் நேற்று முன் தினம் இலங்கைக்கு திரும்பியுள்ளார். இதன் போது விமான நிலைய குடிவரவு குடியகல்வு அதிகாஅரிகள் புண்ணியமூர்த்தி சசிகரனை கைது செய்த நிலையில் அவரை குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila