
வடக்கு – கிழக்கு மாகாணங்களை ஒன்றாக இணைக்க வேண்டும் என்ற தேவை முஸ்லிம் மக்களுக்கு இல்லை என்று விளையாட்டுத்துறை பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு – கல்முனை சாஹிரா கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார்.
வடமாகாண சபையினால் முன்வைக்கப்பட்டுள்ள இனப்பிரச்சினை தொடர்பான தீர்வுத்திட்ட யோசனை முஸ்லிம் மக்களை ஒருபோதும் திருப்திப்படுத்தாது என்று அவர் குறிப்பிட்டார்.
எனினும் இனப்பிரச்சினைக்கு தீர்வுகாணும் விடயத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒருபோதும் குந்தகம் விளைவிக்கும் நோக்குடன் செயற்படாது என்றும் பிரதியமைச்சர் ஹாரிஸ் தெரிவித்தார்.