சர்வதேச நீதிபதிகளுக்கு விசாரணையில் இடமில்லை இறுதிப்போரில் உயிரிழப்பும் அதிகமல்ல - சமரசிங்க


போர்க்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான பொறுப்புக் கூறலுக்கான உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையில் சர்வதேச நீதிபதிகள் இடம்பெறுவதை இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாது எனத் தெரிவித்த தொழிற்பயிற்சி மற்றும் அபிவிருத்தி அமைச்சர் மகிந்த சமரசிங்க, போரின் இறுதிக்கட்டத்தில் 40 ஆயிரம் பேர் கொல்லப்பட்டதாக ஐ.நா. அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் இதுபற்றி அறிவித்த அவர்,
விசாரணைப் பொறிமுறையில் சர்வதேச நீதிபதிகளை அனுமதிக்காவிடினும், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவைப் போன்று, வெளிநாட்டு நிபுணர்களின் உதவியை இலங்கை அரசாங்கம் ஏற்றுக் கொள் ளும்.

பாதிக்கப்பட்ட மக்களுக்காக காணாமற் போனோர் தொடர்பான செயலகம் ஏற்கெனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பரணகம ஆணைக் குழுவின் அறிக்கையும் உள்ளது. உள்நாட்டுப் பொறிமுறை ஏற்கெனவே உருவாக்கப்ப ட்டுள்ளது. எனவே உள்ளக விசாரணை நீதியாக இடம்பெறும்.
போரின் இறுதிக்கட்டத்தில் 40 ஆயிரம் பேர் வரை கொல்லப்பட்டதாக, ஐ.நா ஒருபோதும். அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை.

கோடன் வைஸ் எழுதிய நூலை மட்டுமே ஐ.நா மேற்கோள்காட்டியிருந்தது. தருஸ்மன் அறிக்கையிலும் அதுவே சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.எனினும் உயிரிழப்புக்கள் அதிகமாக காண்பிக்கப்படுகின்றது.
இலங்கை நல்லிணக்கத்துக்காக இன்ன னும் கடுமையாகப் பணியாற்ற வேண்டியுள்ளது. இந்நிலைமைகளை முன்னேற்றுவதற்கு நாம் இன்னும் அதிகம் செய்ய வேண்டியுள்ளதுடன்,
நாட்டில் நிலையான நல்லிணக்கத்தை அடைவதற்கு உறுதி பூண்டுள்ளோம் என் பதை, தொடர்ச்சியாக வெளிப்படுத்த வேண்டியுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.(
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila