இராணுவமயமாக்க நீக்கத்தில் அரசாங்கம் சொல்வதைச் செய்யுமா?நிருபா குணசேகரலிங்கம்


அர­சாங்கம் எதிர்­வரும் 2018 ஆம் ஆண்­டுக்குள் இலங்­கையை இரா­ணுவ மய­மாக்­கத்தில் இருந்து விடு­விக்க உத்­த­ர­வா­த­ ம­ளித்­துள்­ளது. சர்­வ­தே­சத்­திடம் அர­சாங்கம் தெரி­வித்­தி­ருக்கும் இவ் உத்­த­ர­வா­தத்­தினை இவ்­வார இறு­தியில் நடை­பெற்ற செய்­தி­யாளர் மாநாட்டில் வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர மீள தெரி­வித்­தி­ருந்தார்.pathivu
இவை அர­சாங்­கத்தின் தெரி­விப்­பாக இருக்­கின்ற போதும்இ சம­கா­லப்­ப­குதியில் கடந்த ஆட்­சியில் மேற்­கொள்­ளப்­பட்ட இரா­ணுவ மய­மாக்­கத்­திற்குப் புறம்­பாக இரா­ணு­வ­ம­ய­மாக்­கத்­தினை மேற்­கொள்­வ­தற்­கான புதிய நட­வ­டிக்­கை­களும் நடை­பெற்ற வண்­ணமே உள்­ளன.
பொது­வாக வடக்கில் பல­ரது கவ­னத்­தி­னையும் ஈர்க்கும் யாழ்­கு­டா­நாடு போன்­ற­வற்றில் இரா­ணு­வ­ம­ய­மாக்கம் குறைக்­கப்­பட்­டாலும் முல்­லைத்­தீவு போன்ற மாவட்­டங்­களில் இரா­ணு­வ­ம­ய­மாக்­கத்­திற்­கான நட­வ­டிக்­கை­களில் படைத்­த­ரப்பு ஈடு­பட்டே வரு­கின்­றது. இந்த வகையில் தற்­போது கூட பண்­ணை­களை அமைப்­ப­தற்­காக முல்­லைத்­தீவு மாவட்ட நிர்­வா­கத்­திடம் இரா­ணு­வத்­தினர் காணி­களைக் கோரி­யுள்­ளனர்.army
உள்­நாட்­ட­ள­விலும் சர்­வ­தேச அள­விலும் இரா­ணுவ மய­மாக்கம் தவிர்க்­கப்­ப­ட­வேண்டும் என அர­சாங்­கத்­திற்கு அழுத்­தங்கள் இருந்­த­ வண்­ண­முள்­ளன. கடந்த மஹிந்த ராஜ­பக் ஷ காலத்­தினில் மேற்­கொள்­ளப்­பட்ட இரா­ணு­வ­ம­ய­மாக்­கத்­தினை தாம் வெகு விரைவில் நிவர்த்­தித்து விடுவோம்.
கடந்த அர­சாங்­கமே இரா­ணுவ மய­மாக்­கத்­தினை மேற்­கொண்­டது என வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர குறை­கூ­றி­வ­ரு­கின்றார். எனவேஇ இரா­ணு­வ­ம­ய­மாக்கம் நிவர்த்­திக்­கப்­ப­டு­வது ஜன­ந­ாய­கத்­தினை நிலை­நி­றுத்­து­வ­தற்கும் மனித உரி­மை­களை மதிப்­ப­தற்கும் அவ­சி­ய­மா­க­வுள்­ளது என்­ப­தனை அர­சாங்­கமும் பகி­ரங்­க­மா­கவே ஏற்­றுக்­கொண்­டுள்­ளது.
தற்­போது ஜெனீவா கூட்­டத்­தொடர் இடம்­பெறும் நிலையில் சர்­வ­தே­சத்தின் அழுத்­தத்­திற்கு உரிய விட­யங்­களில் ஒன்­றா­கவும் இவ் இரா­ணுவ மய­மாக்கம் உள்ள நிலையில் அர­சாங்கம் இரா­ணு­வ­ம­ய­மாக்­கத்­தினை படிப்­ப­டி­யாகக் குறைப்­ப­தற்கு சொல்­ல­ளவில் மாத்­தி­ர­மின்றி செய­ல­ள­விலும் செயற்­ப­ட­வேண்­டி­யுள்­ளது.
கடந்த மஹிந்த ரஜ­பக்சஷ அர­சாங்கம் இரா­ணு­வத்­தி­னரை வர்த்­தக முயற்­சி­களில் ஈடு­ப­டுத்­துதல்இ பண்ணைகளை நிர்­வ­கித்தல் மற்றும் கொண்டு நடத்­துதல்இ உற்­பத்தித் தொழிற்­சா­லை­களை நடத்­துதல்இ சுற்­றுலா விடு­தி­களை நடத்­துதல்இ சுற்றுலா மையங்­களை நிர்­வ­கித்தல் என பல­த­ரப்­பட்ட பொரு­ளா­தார மற்றும் இலாபம் ஈட்டும் முயற்­சி­க­ளிலும் ஈடு­ப­டுத்­தி­யி­ருந்­தது. யாழ்ப்­பா­ணத்தில் உள்ள வலி­காமம் வடக்குப் பிர­தே­சத்தில் இரா­ணு­வத்­தினர் சுற்­றுலா விடு­தி­யினை நிர்­வ­கிக்­கின்­றனர். இதற்கு மேலாக யுத்­தத்தின் கார­ண­மாக கடந்த 26 வரு­டங்­க­ளுக்கு முன் மக்கள் இடம்­பெ­யர்ந்த அந் நிலங்­களில் இரா­ணு­வத்­தினர் பயிர்ச் செய்­கையில் ஈடு­ப­டு­கின்­றனர். அங்கு தொழிற்­சா­லை­க­ளையும் படை­யினர் நடத்­து­கின்­றனர். வலோத்­கா­ர­மாக கைய­கப்­ப­டுத்­தி­வைத்­தி­ருக்கும் மக்­களின் நிலங்­களில் தம்மால் உற்­பத்தி செய்­யப்­பட்ட பொருட்­களை மரு­த­னார்­மடம் சந்­தைக்கு இரா­ணுவ வாக­னங்­களில் விற்­ப­னைக்­காக பொருட்­களை அனுப்­பு­கின்­றனர்.
சட்­டத்­திற்கு முர­ணாக வெளி­யேற்­றப்­பட்ட அப் பகுதி மக்கள் இன்றும் இடைத்­தங்கல் முகாம்­களில் வசிக்­கின்­றனர்.
தற்­போ­தைய அர­சாங்கம் வலி­காமம் வடக்கில் காணி­களில் ஒரு பகு­தி­யினை விடு­வித்­துள்­ளது. அதனை யாரும் மறுக்க முடி­யாது.
ஆனால்இ மேலும் நிலங்கள் விடு­விக்­கப்­ப­ட­வேண்­டி­யுள்­ளன. இவை தடை­யின்றி நடந்­தாலே இரா­ணு­வத்­தி­னரின் அதி­காரம் குறைக்­கப்­படும்.
அது­கா­ல­வ­ரையில் இரா­ணுவம் தன்­னு­டைய கையில் உள்ள வல­யங்­க­ளிலும் அத­னோடு ஒத்த விட­யங்­க­ளிலும் ஆட்சி அதி­கா­ரத்­தினை செலுத்­வதை தடுக்க முடி­யாது. இது போன்று கிழக்கு மாகாணம் திரு­கோ­ண­ம­லையில் மாபிள் கடற்­கரை போன்ற சுற்­றுலா பகு­தி­களை கடற்­ப­டை­யினர் நிர்­வ­கிக்­கின்­றனர். அங்கு பொது­மக்கள் நுழை­வ­தாயின் கூட கடற்­ப­டை­யி­னரின் கட்­டண நுழை­வுச்­சீட்டு பெற­வேண்டும். மேற்­கூ­றப்­பட்­ட­வைகள் கடந்த அர­சாங்­கத்தின் வழி­வந்த பிரச்­சி­னை­க­ளாகும். இவைகள் ஒரே இரவில் தீர்க்­கப்­பட முடி­யாவை என்­பது ஏற்­றுக்­கொள்­ளத்­தக்­கது. எனினும் இவற்றின் தீர்­வு­க­ளுக்­காக மக்­களை பொருத்­தி­ருக்­கவும் எதிர்­பார்க்க முடி­யாது. விரைவுப் பொறி­முறை அவ­சி­யா­க­வுள்­ளது. ஏல்­லா­வற்­றுக்கும் மேலாக வடக்கில் தற்­போதும் இரா­ணு­வத்­தினர் புதிய இரா­ணு­வ­ம­ய­மாக்­கத்­திட்­டங்­களை ஆரம்­பிப்­பது நிலை­மை­களைக் கேள்­விக்கு உட்­ப­டுத்­தி­யுள்­ளது. தற்­போதும் கூட முல்­லைத்­தீவு மாவட்­டத்தில் இரா­ணு­வத்­தினர் பண்­னை­களை அமைப்­ப­தற்­காக காணி­க­ளைக்­கோ­ரி­யுள்­ளனர் என்ற பிரச்­சினை தலை­தூக்­கி­யுள்­ளது.
எனினும் அண்­மையில் வெளி­நாட்டு அமைச்சர் மங்­கள சம­ர­வீரஇ தற்­போதே தாம் இரா­ணு­வத்­தி­னரின் வர்த்­தக முயற்­சி­களை நிறுத்தும் படி தெரி­வித்­துள்­ள­தாகத் தெரி­வித்­துள்ளார். இதனை சர்­வ­தே­சத்­தி­டமும் அவர் தெரி­வித்­தி­ருந்தார். வேளி­நாட்டு அமைச்சர் அவ்­வாறு தெரி­வித்­தி­ருந்­த­போதும் நடை­மு­றையில் சம­கா­லத்தில் முல்­லைத்­தீவில் படை­யினர் பண்­னைகள் அமைப்­ப­தற்­கான காணி­களைத் தரு­மாறு மாவட்ட அர­சாங்க நிர்­வா­கத்­திடம் கோரு­வது அர­சாங்­கத்தின் போக்குத் தொடர்பில் சந்­தே­கத்­தினை ஏற்­ப­டுத்­து­கின்­றது.
முல்­லைத்­தீவு மாவட்ட பிர­தேச காணிப்­ப­யன்­பாட்டுக் குழு­விடம் பாதூப்புப் படை­களின் அங்­க­மான சிவில் பாது­காப்புத் திணைக்­களம் பெரு­வா­ரி­யான காணி­க­ளையே பண்­னைகள் அமைப்­ப­தற்­காக கோரி­யுள்­ளது. அவற்றின் விப­ரங்கள் இது­வா­க­வுள்­ளன.Arm
விசு­வ­மடு கிழக்குஇ விசு­வ­மடு வடக்குஇ விசு­வ­மடு மேற்குஇ கோணாவில்இ புதுக்­கு­டி­யி­ருப்பு மேற்கில்;இ உடையார் கட்டு மேற்குஇ உடை­யார்­கட்டு வடக்குஇ சுதந்­தி­ர­புரம்இ உடையார் கட்டு தெற்குஇ தேவி­புரம்இ தேராவில் என கிரா­மங்கள் தோறும் பண்­னைகள் அமைப்­ப­தற்­காக படை­யி­னரால் காணிகள் கேட்­கப்­பட்­டுள்­ளன. இதற்கு மேலாக உடை­யார்­கட்டு வடக்கு தெற்குப் பகு­தியில் இல­வசக் கல்வி நிலையம் அமைக்­கவும் காணி கோரப்­பட்­டுள்­ளது.
இவ்­வா­றாக படைத்­த­ரப்­பி­னரால் காணிகள் தொடர்பில் விடுக்­கப்­பட்ட கோரிக்கை தொடர்பில் அடுத்த மாவட்ட அபி­வி­ருத்­திக்­கு­ழுக்­கூட்­டத்தில் ஆரா­யப்­ப­ட­வுள்­ளது. அடிப்­ப­டையில் பொது­மக்கள் பலர் காணிகள் இன்றி காலா­கா­ல­மாக திண்­டா­டிக்nhண்­டி­ருக்­கையில் படை­யினர் தமக்கு காணி­களை சுவி­க­ரிப்­பதில் நாட்டம் காட்டும் செயற்­பாடு காணப்­ப­டு­கின்­றமை ஏற்­றுக்­கொள்­ள­மு­டி­யா­த­தாகும். இந்த இடத்தில் தான் இரா­ணு­வ­ம­ய­மாக்கம் பற்றி வடக்கில் நடப்­ப­தையும் அர­சாங்­கத்தின் உயர் மட்­டத்தில் கூறப்­ப­டு­வ­த­னையும் சம சந்­தர்ப்­பத்தில் சகல தரப்­புக்­களும் நோக்­க­வேண்­டி­யுள்­ளது.
அர­சாங்கம் இரா­ணுவ மய­மாக்­கத்­தினை நாட­ளா­விய ரீதியில் எதிர்­வரும் 2018 ஆம் ஆண்­டுக்குள் விலக்கிக் கொள்­வ­தாக தெரி­விக்­கின்­றது. இத் தகவல் சர்­வ­தேசம் வரையில் அர­சாங்­கத்­தினால் உத்­த­ர­வா­த­மாகக் அளிக்­கப்­ப­டு­கின்­றது. எனினும் வன்னி மவட்­டங்கள் தோறும் ஏற்­க­னவே படை­யினர் வசம் ஏரா­ள­மான பண்­ணைகள் உள்ள நிலையில் அவைகள் விடு­விக்­கப்­ப­டு­வ­தற்கு பதி­லாக மேலும் பண்­னை­களை அமைப்­ப­தற்­கான மும்­முர முயற்­சி­களில் படை­யினர் ஈடு­ப­டு­கின்­றனர்.
மக்கள் தொழில் முயற்­சி­களில் ஈடு­பட வச­தி­யில்­லாமல் திண்­டா­டு­கின்­றனர். போரின் பின்னர் பொது மக்­களின் தொழில் முயற்சிள் ஊக்­கு­விக்­கப்­ப­ட­வில்லை. அந்த நிலையில் மக்­களின் வளங்­களை படை­யினர் பயன்­ப­டுத்தி வர்த்­த­தக முயற்­சி­களில் ஈடு­ப­டு­வது ஒரு­வ­கையில் இரா­ணு­வ­சு­ரண்­டலும் அடக்­கு­மு­றை­யுமே ஆகும். முன்­னைய ஆட்­சியில் படை­யினர் சர்­வல்­லமை பொருந்­தி­ய­வர்­க­ளாக அவர்கள் சட்­டத்­தி­னையும் ஒழுங்­கி­னையும் எவ்­வாறும் மீறி­விட செயற்­ப­ட­மு­டியும் என்ற எழுதா சட்டம் காணப்­பட்­டது. தற்­போது அது­போன்ற பார­தூர நட­வ­டிக்­கைகள் மாற்­ற­ம­டைந்­துள்­ளன. அந்த மாற்­றத்தின் பின்னர் சட்ட ரீதியில் இரா­ணு­வத்­தினர் காணி­களைக் கோரு­வதும் அதற்­கான நட­வ­டிக்­கை­களில் இறங்­கு­வதும் வெளிப்­ப­டை­யாக நடை­பெ­று­கின்­றது.army
இவற்­றினை வைத்துப் பார்க்­கையில்இ ஒரு வகையில் ஆட்சி மாற்­றத்தின் முன்னர் இருந்த நிலைமை பயங்­க­ர­மா­கவே இருந்­தது. இது­போன்றே ஆட்சி மாற்­றத்தின் பின்னர் காணப்­ப­டு­கின்ற நிலை­மையும் ஓர் வகையில் பயங்­க­ர­மா­ன­தா­கவே உள்­ளது. இரா­ணு­வத்­தினர் சட்­டத்­திற்கு மாறாக அதி­கா­ரத்­தினை பிர­யோ­கிப்­பது (ஆட்சி மாற்­றத்தின் முன்னர்) நல்­லதோர் மாற்ற சூழ்­நி­லையின் பின்னர் சட்ட நட­வ­டிக்­கை­களின் இரா­ணுவ பிர­சன்­னத்­தினை விலக்­கிக்­கொள்ளும் வாய்ப்­புள்­ளது. எனினும் இரா­ணு­வத்­தினர் சட்டப்படி மறைமுகமாக தமது அதிகாரங்களைப் பிரயோகித்து காணிகளைப் பெறுவார்களாயின் எந்த மாற்றம் நாட்டில் ஏற்பட்டாலும் இலகுவில் இராணுவத்தினரை இக் காணிகளில் இருந்து இராணுவத்தினரை வெளியேற்ற முடியாது போய்விடும். இச் சூழ்நிலையே தற்போது நிலவுகின்றது என்பதனையும் கூறித்தான் ஆகவேண்டியுள்ளது.
அரசாங்கம் இராணுவ மயமாக்க நீக்கம் பற்றி வெளியுலகிற்குத் தெரிவித்து தான் மனித உரிமகள் விடயத்தில் பலதரப்பட்ட சலுகைளையும் நன்மதிப்பினையும் பெறுகின்றது. மேலும் பெறவும் எத்தனிக்கின்றது. அப்படியானதோர் சூழ்நிலையில் வெளியுலகிற்கு சொல்வது ஒன்று உட் கிராமங்களில் நடப்பது வேறு ஒன்றாக இருப்பது பொருத்தமானதல்ல. அது இதய சுத்தியுடனான ஜனநாயகத்தினை கட்டியெழுப்பும் முயற்சியாக அமையாது. ஒரே அரசாங்கத்திற்குள் வெளிவவகார அமைச்சினதும் பாதுகாப்பு அமைச்சினதும் நோக்கங்கள் வேறுபட்டதாக அமைய முடியாது. அடுத்து அரசாங்கத்தின் சொல்லுக்கும் செயலுக்கும் வெகுதூரம் என்ற நிலைமை காணப்படுவதும் கொடிய போர் மற்றும் இதன் பின்னரான ஜனநாயகத்திற்கு இடமற்ற மகிந்த ஆட்சி போன்ற இடர்களை எதிர்கொண்ட மக்களை மீள்விப்பதற்கானதாக அமையாது.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila