மாந்தையில் அதிகரித்துள்ள திடீர் கருகலைவுக்கு இராணுவத்தினரே காரணம் : மக்கள் விசனம்

மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட சன்னார் கிராம பகுதியிலுள்ள முகாமில் இராணுவத்தினர் மேற்கொள்ளும் ஆயுதப்பயிற்சியின் காரணமாக, ஏற்படுகின்ற பாரிய அதிர்வுகளினால், சன்னார் கிராமத்திலலுள்ள பல கர்ப்பிணி தாய்மார்களுக்கு, திடீர் கருக்கலைவு ஏற்பட்டுள்ளதாக அக்கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
இலங்கை அரசாங்கத்தினால் ஏற்படுத்தப்படவுள்ள நீதிப் பொறிமுறை தொடர்பான நல்லிணக்க பொறிமுறைகள் பற்றிய கலந்தாலோசனைக்கான, வலய செயலணி இன்று (வியாழக்கிழமை) காலை மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தில் இடம் பெற்றது.
குறித்த செயலணியில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த, சன்னார் கிராமத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
இராணுவத்தினரின் பயிற்சி முகாமில் இருந்து சுமார் 500 மீற்றர் தொலைவில் மக்களின் குடியிறுப்பு காணப்படுவதாகவும், இராணுவ பயிற்சி முகாமில் மோட்டார் செல் பயிற்சி, கண்ணிவெடி செயலிழப்பு, கைக்கண்டு பயிற்சி மற்றும் துப்பாக்கி சூட்டு பயிற்சி போன்றவை இடம் பெற்று வருவதாகவும் கூறினார்.
இவ்வாறான பயிற்சி நடவடிக்கைகளின் போதே, பாரியளவிலான அதிர்வுகள் ஏற்படுவதாகவும், இதன் காரணத்தினால் குறித்த கிராமத்தில் உள்ள பல கர்ப்பிணித் தாய்மார்களுக்கு திடீர் கருக்கலைவு ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
கடந்த 2 மாதங்களுக்குள் சன்னார் கிராமத்தைச் சேர்ந்த 15 கர்ப்பிணி தாய்மார்களுக்கு இவ்வாறு கருக்கலைவு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila