மனிதாபிமானப் பிரச்சினைகளில் அரசாங்கம் தாமதமற்ற தீர்வை முன்வைக்க வேண்டும்

தமிழ் மக்கள் மத்­தியில் அவர்கள் எதிர்­கொண்­டுள்ள மனி­தா­பி­மானப் பிரச்­சி­னை­க­ளுக்கு உரிய முழு­மை­யான தீர்­வுகள் இன்று வரையில் கிடைக்­கப்­பெ­ற­வில்லை. அர­சியல் கைதி­களின் விடு­தலை விட­யத்தில் இழுத்­த­டிப்பு நடை­பெ­று­கின்றது.
படை­யினர் ஆக்­கி­ர­மித்­துள்ள காணி­களை விடு­விப்­பதில் தாம­தங்கள் உள்­ளன. காணா­மல்­போனோர் விட­யத்­திலும் பிரச்­சி­னைகள் உள்­ளன. மீள்­கு­டி­யேற்­றத்தில் தாம­தங்கள் உள்­ளன. இவ்­வா­றான விட­யங்கள் ஒட்­டு­மொத்­தத்தில் யுத்­தத்தில் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்­கான இயல்­பு­ நி­லை­யினை ஏற்­ப­டுத்­து­வதில் சிக்­கல்­களைத் தோற்­று­விக்­கின்­றன.
போரின் ­பின்­பா­கவோ அல்­லது ஆட்சி மாற்­றத்தின் பின்­பா­கவோ இனப்­பி­ரச்­சினைத் தீர்வு கால­தா­ம­த­மின்றி முன்­வைக்­கப்­பட்­டி­ருக்­கு­மாயின் அதற்­குள்­ளாக மேற்­கு­றிப்­பிட்ட பிரச்­சி­னைகள் இயல்­பாகத் தீர்த்தி­ருக்க வாய்ப்­புக்கள் உள்­ளன.
எனினும், இனப்­பி­ரச்­சினைத் தீர்வு விட­யத்­திலும் காணப்­படும் இழு­ப­றி­ நி­லைகள் ஒட்­டு­மொத்­தத்தில் தமிழ் மக்­க­ளையே பாதிக்­கின்­றன. புதிய அர­சாங்கம் பெறுப்­பேற்று 18 மாதங்கள் கடந்­து­விட்­டன. கடத்­தப்­பட்டு காணாமல் போனோர் விட­யத்தில் பொறுப்புச் சொல்­லுதல் இன்று வரையில் திருப்­தி­க­ர­மா­ன­தாக இல்லை.
தற்­போது காணாமல் போனோருக்கான அலு­வ­லகம் அமைப்­பது தொடர்பில் பேசப்­ப­டு­கின்­றது. காணாமல் போனோ­ருக்­கான சான்­றிதழ் பற்றி விவா­திக்­கப்­ப­டு­கின்­றது.
அவ்­வாறு சான்­றிதழ் வழங்­கப்­ப­டு­வது காணாமல் போனோரின் உற­வு­களின் கண்­ணீரைத் துடைக்­கவே என அர­சாங்கம் கூறு­கின்­றது. எனினும், காணாமல் போனோர் தமது பிள்­ளைகள் மீள வர­வேண்டும். தமது பிள்­ளை­க­ளுக்கு நேர்ந்த கதி தொடர்பில் தண்­ட­னைகள் வழங்­கப்­ப­ட­வேண்டும் என எதிர்­பார்க்­கின்­றனர்.

காணாமல் போனோர் அலு­வ­லகம் தொடர்­பான சட்­ட­மூலம் மஹிந்த தரப்­பி­ன­ரைக்­கொண்ட பொது எதி­ர­ணி­யி­னரால் மேற்­கொள்­ளப்­பட்ட எதிர்ப்­புக்­க­ளையும் தாண்டி நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளது.
இவ் அலு­வ­லகம் தொடர்பில் அர­சாங்க கடும்­போக்­கா­ளர்கள் தத்தம் அர­சியல் ரீதி­யி­லான நலன்­களை முன்­வைத்து எதிர்ப்­பினை வெளிப்­ப­டுத்­து­கின்­றனர். எனினும் பாதிக்­கப்­பட்ட காணாமல் போனோரின் உற­வினர் தமக்கு இதற்­குள்­ளா­க­ நியாயம் கிட்­ட­வேண்டும் என இவ் அலு­வ­லக நடை­மு­டையில் சில மாற்­றங்­க­ளையும் உறு­தி­யான போக்­கி­னையும் கோரு­கின்­றனர்.
தமது சான்­றி­தழோ இழப்­பீ­டு­களோ கால இழுத்­த­டிப்­புக்­களோ வேண்டாம். எமக்கு எமது பிள்­ளை­களே வேண்டும். இரா­ணு­வத்­திடம் எனது பிள்­ளையைக் கைய­ளித்தேன். பொலிஸார் அல்­லது கடற்­ப­டை­யினர் எனது பிள்­ளை­யினைக் கொண்டு சென்­றனர்.
அதற்­கான ஆதா­ரங்கள் உண்டு என பெற்றோர் சாட்­சி­ய­ம­ளித்­துள்­ளனர். வவு­னி­யாவில் ஜெய­வ­னிதா என்ற தாய் தன் பிள்ளை காணாமல் போன பின்பு எடுக்­கப்­பட்ட புகைப்­படம் ஒன்றில் இன்­றைய ஜனா­தி­ப­தி­யுடன் அப் பிள்ளை காணப்­ப­டு­கின்றார். அதனை ஜனா­தி­பதி கடந்த தேர்தல் பிர­ச்சார பிர­சு­ரத்தில் பயன்­ப­டுத்­தி­யுள்ளார். ஆகவே தனது மகள் எங்கே எனக் கேட்டு அலை­கின்றார்.
இவ்­வா­றாக வடக்­கிலும் கிழக்­கிலும் மக்கள் சாட்­சி­ய­ம­ளி­க­கையில் பாதிக்­கப்­பட்­டோரின் உறவுக்கு இவ் அலு­வ­லகம் எதைக் கொடுக்கப் போகின்­றது என்­பது கேள்­வி­யா­கவே உள்­ளது. காணாமல் போனோர் அலு­வ­ல­கத்­தினை நிய­மிப்­பது தொடர்பில் பாரா­ளு­மன்­றத்தில் இவ்­வாரம் வெளி­வி­வ­கார அமைச்சர் விளக்­க­ம­ளிக்­கையில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ச காணாமல் போனோ­ருக்­காக நர­கத்­திற்கும் செல்லத் தயார் என பாரா­ளு­மன்றில் தெரி­வித்தார்.
ஆனால் நாம் நர­கத்­திற்கோ அல்­லது ஜெனீ­வா­வுக்கோ செல்­லாமல் நாம் காணாமல் போனோ­ருக்குப் பதி­லொன்றை பெற்­றுக்­கொ­டுப்­ப­தற்குத் தயா­ரா­கி­யுள்­ளோம் என்கின்றார். அவர் காணாமல் போனோர் சான்­றிதழ் ஒன்றை வழங்­கு­வதன் ஊடாக காணாமல் போனோரின் குடும்­பங்­களில் நில­விய காணிப்­பங்­கீடு, திரு­மண உற­வுகள் போன்­ற­வற்­றி­லான சட்டச் சிக்­கல்­களைத் தீர்த்­துக்­கொள்ள முடியும் எனவும் தெரி­வித்­துள்ளார். அடிப்­ப­டையில் இத் தெரி­விப்­புக்கள் பல வினாக்­களைத் தொடுக்­கின்­றன?
அதா­வது. காணாமல் போனோர் குடும்­பங்­களில் சொத்­துக்­களைப் பகிர்தல், உரிமை கொண்­டா­டு­தலில் பல­த­ரப்­பட்ட பிரச்­சி­னைகள் உள்­ளமை உண்மை தான். எனினும் இன்­று­வ­ரையில் காணாமல் போனோரின் உற­வி­னர்கள் யாரும் காணாமல் போனோரால் தமது சொத்­துக்­களை பகிர முடி­யா­துள்­ளது எனத் தெரி­வித்து எந்தப் போராட்­டங்­க­ளையும் நடத்­த­வில்லை. மாறாக தங்கள் பிள்­ளை­களை கேட்டே தாய்மார் போரா­டு­கின்­றனர்.
நாளை மறு­தினம் (30) சர்­வ­தேச காணாமல் போனோர் தினம் வரு­கின்­றது. இத் தினத்தில் அவர்கள் மாவட்டம் தேறும் கண்ணீர் சிந்திப் போரா­ட­வுள்­ளனர். மேலும் கொழும்பில் பேராளர் மாநாடு ஒன்­றையும் நடத்­த­வுள்­ளனர். இவற்­றிலும் கூட காணாமல் போன­வர்கள் எதனைக் கேட்­கின்­றனர் என்­பது உலகம் அறிந்த விட­ய­மாகப்புலப்­படும்.
அண்­மையில் முன்னாள் ஜனா­தி­ப­தியும் தற்­போ­தைய நல்­லி­ணக்கச் செயற்­பாட்­டா­ள­ரு­மான சந்­தி­ரிக்கா பண்­டா­ர­நா­யக்க யாழிற்கு விஜயம் ஒன்றை மேற்­கொண்­டி­ருந்தார். அவர் யாழ்ப்­பா­ணத்தில் ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த மக்கள் சந்­திப்பு ஒன்­றுக்கு 5 மணி­நேரம் தாம­தித்தே மாவட்ட செய­ல­கத்­திற்கு வருகை தந்­தி­ருந்தார்.
அப்­ப­டி­யி­ருந்­த­போதும் அவ­ரிடம் காத்­தி­ருந்து பாதிக்­கப்­பட்­ட­வர்கள் சந்­தித்­தனர். கூட்­டத்தில், மக்கள் கேள்வி நேரத்­தின்­போது தன்­னு­டைய பிள்­ளையை எப்­பொது வீடு தி­ரும்­புவார் என காணாமல் போனோரின் தாயொ­ருவர் கேள்வி கேட்­டுள்ளார். அதற்கு சந்­தி­ரிக்­காவின் பதில் மகிந்­தவின் காலத்தில் இடம்­பெற்­றவை இவை என்ற தொனியில் இருந்­துள்­ளது. இந்­நி­லையில் உட­ன­டி­யாகக் குறுக்­கிட்ட மற்­றொரு தாயொ­ருவர் உங்­களின் ஆட்­சிக்­கா­லத்தில் தான் என் பிள்ளை காணாமல் போகச் செய்­யப்­பட்­டது என்று கேட்க உரிய பதில்கள் வழங்­கப்­ப­டாது இரு­பது நிமி­டங்­க­ளுக்குள் சந்­திப்பு பூர்த்­தி­யாக்­கப்­பட்­டுள்­ளது. இவ்­வா­றான போக்­கு­ககள் எப்­போதும் காணாமல் போனோர் விட­யத்தில் உறு­தி­யான பதில்கள் இல்லை என்­பதைத் தான் காட்­டு­கின்­றன.
இதற்கு அடுத்­த­ப­டி­யாக அர­சியல் கைதி­களின் விடு­தலை சார்ந்த விடயம் இருக்­கின்­றது. அர­சியல் கைதிகள் தமது விடு­த­லைக்­காக குடும்­பங்­க­ளோடு இணைவோம் ஏக்­கத்­துடன் காத்­தி­ருக்­கின்­றனர். அவர்­க­ளது காத்­தி­ருப்பு யுத்­தத்தின் பின்னர் நியா­ய­மா­னது. இந்­நி­லையில் ஆட்சி மாற்­றத்தின் பின்னர் தமக்கு விடு­தலை கிட்டும் என்ற நம்­பிக்கை பொய்த்­துப்­போக தொடர்ச்­சி­யாக போராட்­டங்­களை நடத்­தினர். உடலை வருத்தி உண்­ணா­வி­ர­தத்தில் ஈடு­பட்­டனர். எனினும் அவர்­க­ளுக்­கான தீர்­வுகள் இன்றும் கிட்­ட­வில்லை. உல­கமே காட்­டு­மி­ராண்­டித்­த­ன­மா­னது என்ற பயங்­க­ர­வாதத் தடைச்­சட்­டத்தின் கீழ் அவர்கள் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ளனர்.
அர­சியல் கைதிகள் உண்­ணா­ நோம்­பி­ருக்­கையில் தமிழ் அர­சியல்த் தலை­வர்கள் ஊடாக எல்­லோரும் ஏற்­றுக்­கொள்­ளத்­தக்க அர­சியல் தீர்­வொன்றை தான் முன்­வைப்பேன் என ஜனா­தி­பதி தெரி­வித்­தி­ருந்தார். எனினும் அர­சியல் கைதி­களின் விடு­தலை விட­யத்தில் தற்­போது மீளவும் சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்­திடம் புனர்­வாழ்வு அளிக்­கப்­ப­டத்­தக்­கோரின் விப­ரங்­களைக் கோரி­யுள்­ள­தாக சிறைச்­சா­லைகள் அமைச்சர் சுவா­மி­நாதன் தெரி­வித்­துள்ளார். அடிப்­ப­டையில் பல ஆண்­டு­க­ளாக விசா­ர­ணை­யின்றித் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள அர­சியல் கைதி­களின் விட­யத்­திலும் கருணை காட்­டப்­ப­டு­வதில் கால தாம­தமே நல்­லாட்­சி­யிலும் நில­வு­கின்­றது.
இது­போன்றே நிலங்­களை படை­யி­னரின் பிடிக்குள் இருந்து விடு­விப்­ப­திலும் தாம­தங்­களே நில­வு­கின்­றன. ஜனா­தி­பதி எதிர்­வரும் ஆறு­மா­தங்­க­ளுக்குள் மக்­களின் நிலங்கள் அவர்­க­ளிடம் கைய­ளிக்­கப்­படும் என யாழில் வைத்து
இவ்­வாண்டுத் தொடக்­கத்தில் உத்­த­ர­வாதம் அளித்­தி­ருந்தார். எனினும் அவ் உத்­த­ர­வாதம் உரி­ய­வாறு நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. தற்­போதும் யாழ் மாவட்­டத்தில் 31 பொரி­ய­ள­வி­லான நலன்­புரி நிலை­யங்­களில் அர­சாங்­கத்தின் தக­வல்­களின் படி மக்கள் வீடு திரும்ப முடி­யாது தங்­கி­யுள்­ளனர். சுயா­தீனத் தக­வல்­களின் அடிப்­ப­டையில் 40 வரை­யான இடைத்­தங்கல் முகாம்கள் யாழ்ப்­பா­ணத்தில் மட்டும் உள்­ளன.
யாழ்ப்­பாண மாவட்­டத்தில் ஓர­ள­வுக்கு உயர்­பா­து­காப்பு வல­யத்தின் சில பகு­தி­களில் இருந்து படை­யினர் நீங்­கி­யுள்­ளனர். எனினும் அது மக்கள் எதிர்­பார்த்த அள­வுக்கு இடம்­பெ­ற­வில்லை. ஆட்சி மாற்­றத்தின் பின்னர் முல்­லைத்­தீவில் இரா­ணு­வத்­தி­ன­ரிடம் இருந்து நிலங்கள் விடு­விக்­கப்­ப­ட­வில்லை என வடக்கு மாகாண சபையில் குற்­றச்­சாட்டு முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன.
தற்­போது இலங்­கைக்கு ஐ.நா.வின் பொதுச் செய­லாளர் விஜயம் அமை­ய­வுள்ள நிலையில் இடைத்­தங்கல் முகாம்­களை மூடு­மாறும் அங்­குள்ள மக்­களை எவ்­வா­றெ­னினும் மீளக்­கு­டி­யேற்­று­மாறும் அர­சாங்கம் அரச அதி­கா­ரி­களைப் பணித்­துள்­ளது. உண்­மையில் மக்­களின் விட­யத்தில் அர­சாங்கம் பொறுப்­பாக நடந்து
கொள்­ளு­மாயின் ஐ.நா. செய­லாளர் வரு­கின்றார் என இவ்­வா­றான அவ­ச­ரங்கள் தேவைப்­ப­டாது என்­பது யதார்த்­த­மாகும். இப்­ப­டி­யாக பல பிரச்­சி­னைகள் தமிழ் மக்­களை நீடித்த அவ­லத்­திற்குள் தள்­ளி­யுள்­ளது. இந் நிலை­மைகள் சாராண மனித நேயத்­துடன் அனு­கப்­பட்டு தீர்க்­கப்­ப­டத்­தக்­கவை. இவை­களை நிறை­வேற்­று­வ­தற்கே நாட்டில் ஏரா­ள­மான தடை­களும் தாம­தங்­களும் காணப்­ப­டு­மாயின் மிகுந்த அர்ப்­ப­ணிப்­புடன் அணு­க­வேண்­டிய இனப்­பி­ரச்­சினைத் தீர்வு நட­வ­டிக்­கை­யினை நாடு எவ்­வாறு எதிர்­கொள்ளும் என்ற கேள்­வியே எழு­கின்­றது.
காணாமல் போனோரின் விட­யங்­களை அணு­வது மற்றும் அர­சியல் கைதி­களை விடு­விப்­பது இரா­ணு­வத்­தி­ன­ரிடம் உள்ள காணி­களை விடு­விப்­பது போன்ற விட­யங்கள் கூட தெற்­கில் மக்­களைக் குழப்பும் வகையில் விசமப் பிர­சா­ர­மாக மகிந்த தரப்­பினர் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றனர். அது மறுப்­ப­தற்கு இல்லை. இவ்­வா­றா­னதோர் சூழ்­நி­லையில் தெற்கில் இடம் பெறும் இன­வாதப் பிரச்­சா­ரங்­களை முறியடிப்பதற்கு உத்திகளை அரசாங்கம் வகுத்து செயற்பட வேண்டும்.
தெற்கின் கடும்போக்காளர்களைச் சமாளிப்பதற்காக அது தமிழர்களின் பிரச்சினைகளை சரியாக அணுகாது விடுவது நல்லாட்சிக்குக் குந்தகமான விடயமாகும்.போருக்குப் பின்பான சூழ்நிலையில் மகிந்த ராஜபக்ச அரசாங்கம் பொறுப்புச் சொல்ல முன்வரவில்லை. அதனால் போருக்குப் பின்பாக நாடு அடையப்பெற்றிருக்க வேண்டிய பலவிடயங்களை மக்கள் ஆட்சி மாற்றத்தின் பின்னர் எதிர்பார்க்கின்றனர். இந் நிலையில் அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்ததில் இருந்து துரிதமாகச் செயற்படவில்லை என்பதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் இவ்வாரம் பாராளுமன்றில் சுட்டிக்காட்டியுள்ளார்.
அடிப்படையில் தமிழ் மக்களின் மனிதாபிமானப் பிரச்சினைகள் தீர்க்கப்படாது மலிந்தே கிடக்கின்றன. அவற்றிற்காக இன்றும் மக்கள் போராடவேண்டியே இருக்கின்றது. எனவே மனிதாபிமானப் பிரச்சினைகளை தீர்ப்பதில் தடைகள் இருப்பதாக மட்டும் அரசாங்கம் சொல்வதில் நியாயங்கள் கிடையாது. தடைகளைத் தாண்டி அவற்றினை தந்திரோபாயமாக அணுகி மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கும் அரசியலையே அரசாங்கம் மேற்கொள்ளவேண்டும்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila