காணாமல் போனோருக்கான அலுவலகம் நீதியையும் நிவாரணத்தையும் வழங்குமா?

காணாமல் போனோருக்கான அலுவலகம் நீதியையும் நிவாரணத்தையும் வழங்குமா?

வலிந்து காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்­கான சர்வதேச தினத்­தை­யொட்டி, வட­மா­கா­ணத்தின் பல இடங்­க­ளிலும் கவ­ன­யீர்ப்பு நட­வ­டிக்­கை­களும் யாழ்ப்­பா­ணத்தில் பேர­ணியும் நடத்­தப்­பட்­டுள்­ளன. காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்­கான சர்­வ­தேச தின­மா­கிய ஆகஸ்ட் 30 ஆம் திகதி
மட்­டு­மல்­லாமல், ஏனைய பல சந்­தர்ப்­பங்­க­ளிலும் காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­களைக் கண்­டு­பி­டிக்க சம்­பந்­தப்­பட்ட தரப்­பினர் நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை முன்­வைக்­கப்­பட்டு
வந்­துள்­ளது.
ஆயினும் இம்­முறை காணாமல் ஆக்­கப்­பட்­டோ­ருக்­கான சர்­வ­தேச தினத்தின் மறு­நா­ளா­கிய 31 ஆம் திகதி ஐ.நா. செய­லாளர் நாயகம் பான் கீ மூன் இலங்­கைக்கு விஜயம் மேற்­கொள்­வதை முன்­னிட்டு அன்­றைய தினத்தில் பல இடங்­க­ளிலும் போராட்­டங்­களும் கவ­ன­யீர்ப்பு நட­வ­டிக்­கை­களும்
பேர­ணியும் நடத்­தப்­பட்­டி­ருக்­கின்­றன. காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்கள் தொடர்பில் அர­சாங்கம்
ஆக்­க­பூர்­வ­மான நட­வ­டிக்­கைகள் எத­னையும் எடுக்­காத நிலை­யி­லேயே இந்தப் போராட்­டங்கள் வலுப்­பெற்­றி­ருக்­கின்­றன.
அது மட்­டு­மல்­லாமல், மனித உரிமை மீறல்கள், போர்க்­குற்றச் செயற்­பா­டுகள் என்­ப­வற்­றுக்குப் பொறுப்புக் கூறு­வ­தற்­காக அமைக்­கப்­ப­ட­வுள்ள பொறி­மு­றையின் ஓர் அங்­க­மாக காணாமல்
ஆக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்­கான அலு­வ­லகம் ஒன்றை அமைப்­ப­தற்கு சட்ட ரீதி­யாக அர­சாங்கம்
நட­வ­டிக்கை எடுத்­துள்ள நிலையில் இந்தப் போராட்டங்கள் பர­வ­லாக
முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன என்­பது கவ­னத்­திற்கும் ஆழ்ந்த சிந்­த­னைக்கும் உரி­ய­தாகும்.
சுமார் இரு­ப­தி­னா­யிரம் பேர் வரையில் காணாமல் போயி­ருப்­ப­தாக முறைப்­பா­டுகள்
செய்­யப்­பட்­டி­ருப்­ப­தாகத் தக­வல்கள் வெளி­யா­கி­யி­ருக்­கின்ற போதிலும், அந்த எண்­ணிக்கை இன்னும் அதி­க­மா­னது என்­பதே மனித உரிமைச் செயற்­பாட்­டா­ளர்­க­ளி­னதும், காணாமல்
ஆக்­கப்­பட்­ட­வர்கள் தொடர்­பி­லான செயற்­பாட்­டா­ளர்­க­ளி­னதும் கருத்­தாகும்.
கடத்­தப்­பட்­ட­வர்கள், கைது செய்­யப்­பட்­ட­வர்கள், பலபேர் சூழ்ந்­தி­ருக்க இரா­ணு­வத்திடம்
சர­ண­டைந்­ததன் பின்னர், காணாமல் போயி­ருப்­ப­வர்கள் என பல­த­ரப்­பட்ட வழி­களில் ஆட்கள் காணாமல் போகச் செய்­யப்­பட்­டி­ருக்­கின்­றார்கள். காணாமல் போன­வர்­களில் சிலரை, காணாமல் போனதன் பின்னர், அவர்­களை இரா­ணு­வத்­தி­ன­ரு­டனும், அடை­யாளம் தெரி­யாத இடங்­க­ளிலும், தடுப்பு முகாம்­க­ளிலும் கண்ணால் கண்­ட­தற்­கான சாட்­சி­யங்கள் தங்­க­ளிடம் இருப்­ப­தாக காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­களின் உற­வி­னர்கள் தெரி­வித்­தி­ருக்­கின்­றனர்.
அது மட்­டு­மல்­லாமல், அடை­யாளம் தெரி­யாத இடம் ஒன்றில் தன்னைத் தடுத்து
வைத்­தி­ருக்­கின்­றார்கள் என்று காணாமல் ஆக்­கப்­பட்­டுள்ள ஒருவர் தனது தாயா­ருக்கு எழு­தி­ய ­
க­டி­தத்தை சாட்­சி­ய­மாக வைத்­தி­ருக்­கின்ற ஒரு தாயாரும், அது­பற்றி காணாமல் போன­வர்கள் தொடர்பில் விசா­ர­ணைகள் நடத்­திய ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழு­வி­ன­ரிடம்
சாட்­சி­ய­ம­ளித்­தி­ருக்­கின்றார்.
கடந்த 2015 ஆம் ஆண்டு, ஜன­வரி மாதம் நடை­பெற்ற ஜனா­தி­பதி தேர்­த­லுக்­கான
பரப்­பு­ரை­யின்­போது, வேட்­பா­ள­ராகக் கள­மி­றங்­கி­யி­ருந்த மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுடன் புகைப்­படம் ஒன்றில் தமது புதல்­விகள் காணப்­பட்­ட­தாக, அந்தப் பகைப்­ப­டத்தை ஆதா­ர­மாக சில தாய்­மார்கள் காட்­டி­யி­ருக்­கின்­றனர்.
இந்தப் புகைப்­படம் மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் தேர்தல் பரப்­பு­ரைக்­கான துண்டுப் பிர­சுரம் ஒன்றில் பிர­சு­ர­மா­கி­யி­ருந்­ததை அந்தத் தாய்­மார்கள் மைத்­தி­ரி­பால சிறி­சேன ஜனா­தி­ப­தி­யாகப் பத­வி­யேற்­றதன் பின்னர் நேர­டி­யாக அவ­ரிடம் காட்டி, தமது பிள்­ளை­களைக் கண்­டு­பி­டித்துத் தரு­மாறு கோரிக்கை விடுத்­தி­ருந்­தார்கள்.
ஆனால் அந்தக் கோரிக்­கையைக் கவ­னத்தில் எடுத்து உரிய நட­வ­டிக்கை எடுப்­ப­தாக அவர்
அளித்­தி­ருந்த உறு­தி­மொழி வாய் பேச்­ச­ளவில் மட்­டுமே இருக்­கின்­றது.
அந்தப் பிள்­ளைகள் குறித்து விசா­ர­ணைகள் நடத்­தப்­பட்­ட­னவா? என்ன நடந்­தது? அந்தப்
புகைப்­ப­டத்தில் காணப்­ப­டு­ப­வர்கள் உண்­மையில் காணாமல் போன பிள்­ளைகள் தானா அல்­லது அவர்கள் வேறு குடும்­பங்­களைச் சேர்ந்த பிள்­ளை­களா என்ற விப­ரங்கள் எதுவும் பாதிக்­க­பட்ட
தாய்­மார்­க­ளுக்குத் தெரி­விக்­கப்­ப­ட­வில்லை.
இது விட­யத்தில் ஜனா­தி­பதி தரப்பில் இருந்து பொறுப்­பான பதி­லேதும் வழங்­கப்­ப­ட­வில்லை என்ற முறைப்­பாடு பாதிக்­கப்­பட்ட அன்­னை­யர்கள் சார்பில் முன்­வைக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது.
ஆணைக்­கு­ழுக்­க­ளிடம் அளித்த சாட்­சி­யங்கள்………..
இறுதி யுத்­தத்­தின்­போது அர­சாங்­கத்தின் பாது­காப்பு உத்­த­ர­வா­தத்­தை­ய­டுத்து, படைத்­த­ரப்­பி­னரால் விடுக்­கப்­பட்ட பகி­ரங்க அறி­வித்­தலை நம்பி, இரா­ணு­வத்­தி­ன­ரிடம் நூற்­றுக்­க­ணக்­கான முன்னாள் விடு­த­லைப்­புலி உறுப்­பி­னர்கள் சர­ண­டைந்­தனர். முள்­ளி­வாய்க்­காலில் இருந்து வெளி­வந்து
முல்­லைத்­தீவு வட்­டு­வாகல் பகு­தியில் அமைக்­கப்­பட்­டி­ருந்த இரா­ணுவ முகாமில் அவர்கள் சர­ண­டைந்­தார்கள். அவர்­க­ளு­டைய உற­வி­னர்கள் பலர் அவர்­க­ளை இ­ரா­ணு­வத்­தி­ன­ரி­டம் ­
கை­ய­ளித்­தார்கள்.
இவ்­வாறு அவர்கள் சர­ண­டைந்­த­தையும், குடும்ப உற­வி­னர்கள் அவர்­களை இரா­ணு­வத்­தி­ன­ரிடம் கைய­ளித்­த­தையும் அங்கு சூழ்ந்­தி­ருந்த நூற்­றுக்­க­ணக்­கான மக்கள் நேர­டி­யாகக்
கண்­டி­ருக்­கின்­றார்கள்.
ஆனால் இவர்கள் எவ­ரையும் தாங்கள் பொறுப்­பேற்­க­வில்லை. எவ­ரையும் நாங்கள் கைது
செய்­ய­வில்லை என்று இரா­ணுவ தரப்பில் இப்­போது தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. இறுதி
யுத்­தத்­தின்­போது, சர­ண­டைந்த விடு­த­லைப்­புலி உறுப்­பி­னர்கள் எவ­ரையும் இரா­ணுவம் இன்னும் விடு­தலை செய்­ய­வில்லை.
அதே­போன்று அவர்கள் எங்கு வைக்­கப்­பட்­டி­ருந்­தார்கள்? இப்­போது எங்கு
வைக்­கப்­பட்­டி­ருக்­கின்­றார்கள், அவர்­களின் நிலை என்ன என்­பது குறித்து எத­னையும் அர­சாங்கம் இன்னும் வெளி­யி­ட­வில்லை.
இரா­ணு­வத்­தி­ன­ரிடம் சர­ண­டைந்து காணாமல் போயுள்ள முன்னாள் விடு­த­லைப்­புலி
உறுப்­பி­னர்கள் தொடர்பில் போதிய அளவில் அவர்­களின் உற­வி­னர்கள், நல்­லி­ணக்க ஆணைக்­குழு மற்றும் ஜனா­தி­ப­தி­யினால் நிய­மிக்­கப்­பட்ட பர­ண­கம ஆணைக்குழு அதி­கா­ரி­க­ளிடம் அளித்த
சாட்­சி­யங்­களின் ஊடா­க ­போ­திய அளவு தக­வல்­க­ளையும் சான்­று­க­ளையும் தெரி­வித்­தி­ருந்­தனர். இரா­ணு­வத்­தி­ன­ரிடம் சர­ண­டைந்­த­வர்கள் பற்­றிய சாட்­சி­யங்கள் மட்­டு­மல்ல. ஏனைய காணாமல் போன­வர்கள் தொடர்­பி­லான சாட்­சி­யங்­களும் பல­னற்­ற­வை­யா­கவே போயி­ருக்­கின்­றன.
இதனால் இந்தக் குழுக்­களின் விசா­ர­ணைகள் வெறும் விசா­ர­ணை­க­ளா­கவும், அவற்­றிடம்
அளிக்­கப்­பட்ட சாட்­சி­யங்கள் வெறும் ஏட்­ட­ள­வி­லான சாட்­சி­யங்­க­ளா­கவும் மட்­டுமே
எஞ்­சி­யி­ருக்­கின்­றன.
ஆட்­கொ­ணர்வு மனுக்கள் தொடர்­பான நீதி­மன்ற விசா­ர­ணைகள் இத்­த­கைய நிலை­யில்தான்
இரா­ணு­வத்­தி­ன­ரிடம் சர­ண­டைந்­த­வர்கள், அவர்­க­ளிடம் கைய­ளிக்­கப்­பட்­ட­வர்கள் தொடர்பில் சில உற­வி­னர்கள் வவு­னியா மேல் நீதி­மன்­றத்தில் ஆட்­கொ­ணர்வு மனுக்கள் தாக்கல்
செய்­தி­ருக்­கின்­றனர்.
சுமார் பதி­னான்கு மனுக்கள் இவ்­வாறு தாக்கல் செய்­யப்­பட்டு அவற்றில் சில மனுக்கள் தொடர்­பாக ஆரம்ப விசா­ர­ணை­களை நடத்தி அறிக்கை சமர்ப்­பிக்­கு­மாறு வவு­னியா மேல் நீதி­மன்றம்
முல்­லைத்­தீவு நீதிவான் நீதி­மன்­றத்­திற்கு அறி­வித்­தி­ருந்­தது.
இரா­ணு­வத்­தி­ன­ரிடம் சர­ண­டைந்த சம்­பவம் முல்­லைத்­தீவில் நடை­பெற்­ற­தனால், அந்தப்
பிர­தே­சத்­திற்­கு­ரிய நியா­யா­திக்­கத்தைக் கொண்ட நீதி­மன்­றத்தில் அந்தச் சம்­ப­வங்கள் எவ்­வாறு நடை­பெற்­றன. யார் யார் அதில் சம்­பந்­தப்­பட்­டி­ருந்­தார்கள் என்­பதை உள்­ள­டக்­கிய விசா­ரணை மூல­மான தக­வல்­களைப் பெற்று மேற்­கொண்டு விசா­ர­ணை­களைத் தொடர்­வ­தற்­காக இவ்­வாறு மேல் நீதி­மன்றம் அந்த விசா­ர­ணை­களை முல்­லைத்­தீவு நீதி­மன்­றத்­திற்குப்
பாரப்­ப­டுத்­தி­யுள்­ளது,முல்­லைத்­தீவு நீதி­மன்­றத்தில் இந்த ஆட்­கொ­ணர்வு மனுக்கள் தொடர்­பாக நடை­பெற்று வரு­கின்ற விசா­ர­ணை­களில் காணாமல் போயுள்­ள­வர்­களின் குடும்ப உற­வி­னர்கள் சாட்­சி­ய­ம­ளித்­தி­ருக்­கின்­றனர். தமது சாட்­சி­யத்­திற்கு ஆதா­ர­மான சாட்­சி­க­ளையும் அவர்கள் உடன் அழைத்துச் சென்­ற­தை­ய­டுத்து, அவர்­க­ளு­டைய சாட்­சி­யங்­களும் பதிவு செய்­யப்­பட்­டி­ருக்­கின்­றன.
இத­னை­ய­டுத்து, இரா­ணுவ தரப்பு சாட்­சி­யங்கள் பதிவு செய்­யப்­பட்டு வரு­கின்­றன. இத்­த­கைய ஒரு சாட்­சி­யத்தில் முல்­லைத்­தீவு இரா­ணுவ முகாமில் சர­ண­டைந்­த­வர்கள் பற்­றிய பதி­வுகள்
இருப்­ப­தாக இரா­ணுவ தரப்பில் அளிக்­கப்­பட்ட சாட்­சி­யத்தில் தெரி­விக்­கப்­பட்ட ஒரு
தக­வ­லை­ய­டுத்து, அந்தப் பதி­வுகள் தொடர்­பி­லான விப­ரங்­களை நீதி­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கு­மாறு நீதி­மன்றம் உத்­த­ர­விட்­டி­ருந்­தது.
இந்த உத்­த­ர­வை­ய­டுத்து, இரா­ணு­வத்தின் புனர்­வாழ்வுப் பயிற்சி முகாம்­களில் பயிற்சி பெற்­றதன் பின்னர், சமூ­கத்தில் இணைக்­கப்­பட்­ட­வர்­களின் பெயர் விப­ரங்கள் அடங்­கிய சுமார் ஆயிரம் பக்­கங்­களைக் கொண்­ட­தொரு பட்­டியல் இரா­ணுவ தரப்பில் சாட்­சி­ய­ம­ளித்த இரா­ணுவ அதி­காரி ஒரு­வ­ரினால் நீதி­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­பட்­டது.
ஆயினும் அந்த சாட்­சி­யிடம் காணாமல் போயுள்­ள­வர்­களின் நலன்­க­ளுக்­காக நீதி­மன்­றத்தில்
முன்­னி­லை­யா­கி­யி­ருந்த சட்­டத்­த­ரணி கே.எஸ்.ரட்­ணவேல் நடத்­திய குறுக்கு
விசா­ர­ணை­க­ளின்­போது, நீதி­மன்­றத்­தினால் கோரப்­பட்ட பெயர்ப்­பட்­டியல் நீதி­மன்­றத்தில்
சமர்ப்­பிக்­கப்­ப­ட­வில்லை என்ற தகவல் தெரி­ய­வந்­தது. இத­னை­ய­டுத்து, இறுதி யுத்­தத்­தின்­போது முல்­லைத்­தீவில் இரா­ணு­வத்­தி­ன­ரிடம் ஆட்­கொ­ணர்வு மனுக்­களில் குறிப்­பி­டப்­பட்­ட­வர்­களும், அவர்­க­ளுடன் சர­ண­டைந்த ஏனை­யோரும் சர­ண­டைந்த போது பதிவு செய்­யப்­பட்ட பதிவு
விப­ரங்கள் அடங்­கிய பெயர்ப்­பட்­டி­யலை அடுத்த வழக்குத் தவ­ணை­யின்­போது நீதி­மன்­றத்தில் சமர்ப்­பிப்­ப­தற்கு அவ­காசம் அளித்து இரா­ணுவ உய­ர­தி­கா­ரி­க­ளுக்கு நீதி­மன்றம்
உத்­த­ர­விட்­டி­ருக்­கின்­றது.
ஆட்­கொ­ணர்வு மனுக்கள் சம்­பந்­தப்­பட்ட மிகவும் முக்­கி­ய­மான ஒரு நீதி­மன்ற
விசா­ர­ணை­க­ளி­லும்­கூட காணாமல் போயுள்­ள­வர்கள் பற்­றிய தக­வல்­களைப் பெற்­றுக்­கொள்­வதில் கூட தாம­தம ஏற்­பட்­டி­ருப்­பதைக் காண முடி­கின்­றது. இருப்­பினும் நீதி­மன்றம் தனது
விசா­ர­ணை­களைத் தொடர்ந்து நடத்தி வரு­கின்­றது.
இந்த நீதி­மன்ற விசா­ர­ணைகள் நடை­பெற்­றுக்­கொண்­டி­ருந்த போதுதான் இந்த விசா­ர­ணை­களில் சாட்­சி­ய­ம­ளிப்­ப­தற்­காக வந்த காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­களின் உற­வி­னர்­களை அச்­சு­றுத்தும் வகையில் இரா­ணுவ புல­னாய்­வா­ளர்­களின் ஏற்­பாட்டில் கடந்த ஆட்­சியின் போது முல்­லைத்­தீவு நக­ரத்தில் நீதி­மன்­றத்­திற்கு சற்று தொலைவில் அவர்­க­ளுக்கு எதி­ரான ஆர்ப்­பாட்­டங்கள்
நடத்­தப்­பட்­டி­ருந்­தன.
இதில் குறிப்­பாக விடு­த­லைப்­பு­லி­களின் திரு­கோ­ண­மலை மாவட்ட அர­சி­யல்­துறை
பொறுப்­பா­ள­ராக இருந்த எழிலன் என்­ற­ழைக்­கப்­படும் எஸ்.சசி­தரன் தொடர்­பில்­ஆட்­கொ­ணர்வு மனு தாக்கல் செய்­தி­ருந்த அவ­ரு­டைய மனைவி அனந்தி சசி­த­ர­னுக்கு எதி­ரா­கவே இந்த
ஆர்ப்­பாட்­டங்கள் நடத்­தப்­பட்­டி­ருந்­தன.
அந்த ஆர்ப்­பாட்­டத்தில் சிவில் பாது­காப்பு பிரிவில் இணைக்­கப்­பட்­டுள்ள முன்னாள்
விடு­த­லைப்­பு­லிகள் உள்­ளிட்­ட­வர்கள் கலந்து கொள்ள நிர்ப்­பந்­திக்­கப்­பட்­டி­ருந்­தார்கள். அவர்கள்
ஏந்­தி­யி­ருந்த சுலோக அட்­டை­களில் அனந்தி சசி­த­ரனின் கணவன் எழிலன் பல இளை­ஞர்­களை பலாத்­கா­ர­மாக விடு­த­லைப்­பு­லிகள் அமைப்­பிற்குக் கொண்டு சென்று அவர்­களைக் காணாமல்
ஆக்­கி­யி­ருந்­த­தாகத் தெரிவித்து அதற்கு நீதி வழங்­கப்­பட வேண்டும் என்ற கோரிக்­கைகள் அடங்­கிய வாச­கங்கள் பொறிக்­கப்­பட்­டி­ருந்­தன.
இந்த ஆர்ப்­பாட்­டங்கள் ஒவ்­வொரு வழக்குத் தவ­ணை­யின்­போதும் நடத்­தப்­பட்­டது
மட்­டு­மல்­லாமல் வட­மா­காண சபை உறுப்­பி­ன­ராகத் தெரிவு செய்­யப்பட்டிருந்த அனந்தி சசி­த­ரனின் வாக­னத்தில் அவ­ருடன் வழக்குத் தவ­ணைக்­காக வருகை தந்­தி­ருந்த ஆட்­கொ­ணர்வு மனு தாக்கல் செய்­தி­ருந்த பெண்­களை அச்­சு­றுத்தும் வகையில் அவர்கள் பயணஞ் செய்த வாக­னமும்,
புல­னாய்வு பிரி­வினர் என்று சந்­தே­கிக்­கப்­பட்­ட­வர்­க­ளினால் பின்­தொ­ட­ரப்­பட்டு மிக நெருக்­க­மாகக் கண்­கா­ணிக்­கப்­பட்­டது.
இதே­போன்று மன்னார் மாவட்ட நீதி­மன்­றத்தில் தாக்கல் செய்­யப்­பட்­டி­ருந்த ஆட்­கொ­ணர்வு மனு ஒன்றில் சம்­பந்­தப்­பட்ட காணாமல் போன­வ­ரு­டைய மனைவி தொடர்ச்­சி­யாக புல­னாய்வு
பிரி­வி­னரால் அந்த வழக்கைக் கைவி­டு­மாறு கோரி அச்­சு­றுத்­தப்­பட்­டி­ருந்தார்.
இதன் கார­ண­மாக அவர் மன்­னா­ரை­விட்டு வெளி­யேற நேர்ந்­தி­ருந்­தது. இதனால் முதலில் தாக்கல் செய்­தி­ருந்த அந்த ஆட்­கொ­ணர்வு மனுவை கைவிட வேண்­டிய நிலை­மைக்கு அவர்
தள்­ளப்­பட்­டி­ருந்தார். இருப்­பினும் ஆட்­சி­மாற்­றத்­தை­ய­டுத்து. மீண்டும் ஆட்­கொ­ணர்வு மனு தாக்கல் செய்­யப்­பட்டு நீதி­மன்ற விசா­ர­ணைகள் நடை­பெற்று வரு­கின்­றன.
இத்­த­கைய ஒரு பின்­ன­ணி­யில்தான் நல்­லி­ணக்­கத்தை உரு­வாக்­கு­வதற்­காக நீதிக்­கான நிலை­மாறு காலச் சூழலில் நான்கு அம்­சங்­களைக் கொண்ட ஒரு பொறி­மு­றையின் முதலும், முக்­கி­ய­மான அம்­ச­மு­மாகக் கருப்­ப­டு­கின்ற காணாமல் போனோ­ருக்­கான அலு­வ­லகம் ஒன்றை நிறு­வு­வ­தற்­கான சட்டம் இயற்­றப்­பட்டு இன்னும் மூன்று மாத காலப்­ப­கு­தியில் அந்த அலு­வ­லகம் செயற்­படத் தொடங்கும் என அறி­விக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது.
காணாமல் போனோ­ருக்­கான அலு­வ­லகம்
சர்­வ­தே­சத்­திடம் அளித்­தி­ருந்த உறுதி மொழிக்­க­மை­வாக மனித உரிமை மீறல்கள், சர்­வ­தேச
மனி­தா­பி­மான சட்ட மீறல்­க­ளுக்கு பொறுப்புக் கூறும் வகையில் அர­சாங்­கத்­தினால்
அமைக்­கப்­ப­ட­வுள்ள பொறி ­மு­றையின் முதல் அம்­ச­மாக – முதல் நட­வ­டிக்­கை­யாக காணாமல் போனோ­ருக்­கான அலு­வல­கத்தை அமைப்­ப­தற்­கான சட்­ட மூ­லத்தை அர­சாங்கம்
பாரா­ளு­மன்­றத்தில் நிறை­வேற்­றி­யி­ருக்­கின்­றது.
இந்தச் சட்­ட­மா­னது வாக்­கெ­டுப்­பின்றி மிகவும் சாது­ரி­ய­மாக சபா­நா­ய­க­ரினால் பாரா­ளு­மன்­றத்தில் சாதா­ரண ஒரு சட்­டத்தை நிறை­வேற்­று­வதைப் போல நிறை­வேற்­றப்­பட்­ட­தாகக் கூறப்­ப­டு­கின்­றது. இதற்­காக அர­சாங்­கத்­துக்குப் பாராட்­டுக்­களும் கிடைத்­தி­ருந்­தன. காணாமல் போனோ­ருக்­கான அலு­வ­ல­க­மா­னது ஆட்கள் காணாமல் ஆக்­கப்­பட்­ட­மைக்கு நீதி நியா­யமும், நிவா­ர­ணமும் கிடைப்ப­தற்கு வழி செய்யும் என்­பது காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­களின் ஓர­ள­வி­லான
எதிர்­பார்ப்­பா­கவும் நம்­பிக்­கை­யா­கவும் இருக்­கின்­றது.
அதே­வேளை, சிங்­களத் தீவிர அர­சி­யல்­வா­திகள் இரா­ணு­வத்­தி­ன­ருக்கு எதி­ராக, அவர்கள் மீது போர்க்­குற்­றத்தைச் சுமத்தி தண்­டிப்­ப­தற்­காக நிறு­வப்­ப­டு­கின்ற ஒரு பொறி­யா­கவே இந்த
அலு­வ­லகம் அமைக்­கப்­ப­டு­கின்­றது என அதற்கு எதி­ராகப் பெரும் எடுப்பில் அர­சியல் ரீதி­யான
பிர­சா­ரங்­களை முடுக்­கி­விட்­டி­ருந்­தனர்.
முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்­ஷவின் ஆத­ர­வா­ளர்­களே இந்தப் பிர­சார நட­வ­டிக்­கை­களில் முக்­கிய பங்­கேற்­றி­ருந்­தனர்.
அதே­வேளை, காணாமல் போயுள்­ள­வர்கள் தொடர்பில் விசா­ர­ணைகள் நடத்தி நீதியும்
நிவா­ர­ணமும் வழங்க நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என சர்­வ­தே­சத்­திற்கும் ஐ.நா. மனித உரிமைப் பேர­வைக்கும் அளித்­துள்ள உறு­தி­மொ­ழியை நிறை­வேற்­று­வதை முக்­கிய நோக்­க­மாகக் கொண்டு இந்த அலு­வ­ல­கத்தை உரு­வாக்­கு­வ­தற்கு அர­சாங்கம் நட­வ­டிக்­கை­களை எடுத்­தி­ருந்­தது. இந்த நிலையில் பாரா­ளு­மன்­றத்தில் எதிர்ப்­புக்கள் ஏற்­பட்டு இந்த அலு­வ­ல­கத்தை அமைப்­ப­தற்­கான
சட்­ட­மூ­லத்தை நிறை­வேற்­ற­வி­டாமல் சிங்­களத் தீவிர அர­சி­யல்­வா­திகள் குழப்­பி­விடக் கூடாது, அவர்­களை முந்­தி­விட வேண்டும் என்ற ஓர் அவ­சர போக்கில் இந்த சட்­ட­மூ­லத்தை
நிறை­வேற்­று­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை அர­சாங்கம் மேற்­கொண்­டி­ருந்­தது.
இந்த அவ­சர நட­வ­டிக்­கை­யா­னது ஒரு வகையில் அர­சாங்­கத்­திற்கு இந்த சட்­டத்தை
நிறை­வேற்­று­வ­தற்கு உத­வி­யி­ருக்­கின்ற போதிலும், இந்த சட்­டத்தில் உள்­ள­டக்­கப்­பட்­டி­ருக்க வேண்­டிய பல முக்­கிய அம்­சங்கள் உள்­ள­டக்­கப்­ப­ட­வில்லை என காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­களின் நலன்­களைக் கவ­னிப்­ப­வர்கள் தரப்பில் இருந்து குற்றம் சுமத்­தப்­பட்­டி­ருக்­கின்­றது.
அதே­நேரம் அவ­சர அவ­ச­ர­மாக இந்தச் சட்டம் கொண்டு வரப்­பட்­டதை மனித உரிமைச்
செயற்­பாட்­டா­ளர்கள் கண்­டித்­தி­ருக்­கின்­றார்கள். அதே­போன்று தம்மால் முன்­வைக்­கப்­பட்ட
திருத்­தத்­திற்­கு­ரிய அம்­சங்கள் இதில் உள்­ள­டக்­கப்­ப­ட­வில்லை என தமிழ்த்தேசிய கூட்டமைப்பு, ஜே.வி.பி. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனக்குரல் எழுப்பியிருக்கின்றன.
காணாமல் போனோர் தொடர்பிலான இந்த அலுவலகத்தின் செயற்பாடுகள், அதன் செயற்பாட்டாளர்கள். அதன் அதிகார எல்லை உள்ளிட்ட முக்கிய விடயங்கள் தொடர்பில் போதிய வெளிப்படைத் தன்மை பேணப்படவில்லை என்று இந்த அலுவலகம் உருவாக்கப்படுவதற்காக உழைத்த மனித உரிமைச் செயற்பாட்டாளர்களினால் கவலையும் ஆதங்கமும் வெளியிடப்பட்டிருக்கின்றன.
நல்லிணக்க ஆணைக்குழு, காணாமல் போனோர் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு போன்ற விசாரணை குழுக்களைப் போலவே இந்த அலுவலகமும் நீதித்துறை சார்ந்த அதிகாரமற்றதொரு பொறிமுறையாக அமையப் போகின்றது என்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டியிருக் கின்றார்கள். காணாமல் போயுள்ளவர்கள் பற்றிய தரவுகளையும், விபரங்களையும் மாத்திரம் திரட்டி அதற்குரிய நடவடிக்கைகளுக்கான பரிந்துரைகளை வெளிப்படுத்தவதற்காக மட்டுமே இந்த அலுவலகம் பயன்படப் போகின்றது என்பது அவர்களுடைய கருத்தாகும்.
இத்தகைய செயற்பாடுகளைக் கொண்டதோர் அலுவலகத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியும் நிவாரணமும் எவ்வாறு கிடைக்கும் என்பது அவர்கள் எழுப்பியுள்ள முக்கியமான கேள்வியாகும். இந்தக் கேள்வியின் பரிமாணத்திலேயே பல்வேறு கருத்துக்களும் கோரிக்கைகளும்கூட காணாமல் போனோருக்கான சர்வதேச தினத்தில் நடத்தப்பட்ட கவனயீர்ப்புப் போராட்டங்கள். பேரணிகளில் வெளிப்படுத்தப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
எது எப்படியாயினும் ஆட்கள் காணாமல் ஆக்கப்பட்டமையானது தண்டனைக்குரிய ஒரு குற்றச் செயல் என்பதை அரசாங்கம் அதிகாரபூர்வமாக முதலில் பிரகடனப்படுத்த வேண்டும். நீதி நடைமுறைகளின் மூலம் அந்தக் குற்றத்திற்குரிய தண்டனை என்ன? எத்தகையது என்பது சட்டத்தில் உள்ளடக்கப்பட்டு, அதன் அடிப்படையில் இந்த காணாமல் போனோருக்கான அலுவலகம் செயற்பட வேண்டும். அந்தச் செயற்பாட்டில் குற்றம் புரிந்தவர்களாகக் காணப்படுபவர்கள் எந்தத் தரத்தினராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்.இதுவே பாதிக்கப்பட்டவர்களினதும், மனித உரிமைச் செயற்பாட்டாளர்களினதும் முக்கிய கோரிக்கையாக உள்ளது.
செல்­வ­ரட்னம் சிறி­தரன்
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila