ஜனநாயக நாட்டில் அரசாங்க அதிபருக்கு இராணுவம் உத்தரவிட முடியாது: சர்வேஸ்வரன்

அரசாங்க அதிபருக்கு ஒரு இராணுவ தளபதியோ அல்லது கட்டளைத் தளபதியோ உத்தரவிடுவதானது இராணுவ ஆட்சியிலேயே இடம்பெறுமென தெரிவித்த வட மாகாண சபை உறுப்பினர் கலாநிதி கே.சர்வேஸ்வரன், இலங்கை போன்ற ஜனநாயக ஆட்சியில் இவ்வாறு நடைபெறுவதை ஏற்றுக்கொள்ள முடியாதென குறிப்பிட்டுள்ளார்.
யாழ்.கட்டளைத் தளபதியின் அறிவுறுத்தலுக்கமைய அரச அதிபரால் முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்த  கடிதம் தொடர்பில், இன்றைய வட மாகாண சபை அமர்வில் கருத்துத் தெரிவித்தபோதே அவர் மேற்குறித்தவாறு தெரிவித்தார்.
காணி விடுவிப்பு தொடர்பில் மாகாண முதலமைச்சருடன் மத்திய பாதுகாப்பு அமைச்சர் கலந்துரையாடியே தீர்மானங்களை எடுக்க வேண்டுமென தெரிவித்த சர்வேஸ்வரன், இராணுவத்திற்கு இது தொடர்பில் எவ்வித அதிகாரமும் இல்லையென இதன்போது சுட்டிக்காட்டினார்.

Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila