மேலும், வடக்கு, கிழக்கை சேர்ந்த தமிழ் அரசியல்வாதிகள் மாத்திரமல்லாது தமிழ் மக்களும் ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரத்தை பரவலாக்கும் அரசியல் தீர்விற்கு விருப்பத்துடன் உள்ளனர்.
வாக்குறுதி நிறைவேற்றப்படும் என்ற எதிர்பார்ப்பிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் வடக்கு, கிழக்கு தமிழ் மக்களும் தற்போதைய அரசாங்கத்திற்கு ஆதரவை வழங்கினர்.
எனினும் இரண்டு வருடங்கள் பூர்த்தியாகியுள்ள நிலையில், அந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாத காரணத்தினால், தமிழ் மக்கள் மத்தியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சி என்ற வகையில் நகைப்புக்கு உள்ளாகியுள்ளது.
இவ்வாறான பின்னணியில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு தொடர்ந்தும் ஆதரவு வழங்குவதா, அரசியலமைப்பு சட்டவாக்க சபையில் அங்கம் வகிப்பதா என்பது குறித்து தீர்மானிக்க வேண்டும் எனவும் சுரேஷ் பிரேமச்சந்திரன் குறிப்பிட்டுள்ளார்.