செபமாலை அடிகளாரின் அலுவலகத்தைச் சோதனையிட்ட புலனாய்வுப் பிரிவினர்!


ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அமர்வுகளில் கலந்துகொண்டுள்ள மன்னார் சிவில் சமூக குழுவின் தலைவர் அருட்தந்தை செபமாலை அடிகளாரின் மன்னாரிலுள்ள அலுவலகம் புலனாய்வுப் பிரிவினரால் சோதனையிடப்பட்டுள்ளது. தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பாக பல பிரதிநிதிகளும், சிவில் அமைப்புக்களைச் சேர்ந்தவர்களும் ஜெனீவா  கூட்டத் தொடரிலும், அதுசார்ந்த உபக் கூட்டங்களிலும் கலந்துகொண்டு உரையாற்றி வருகின்றனர்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அமர்வுகளில் கலந்துகொண்டுள்ள மன்னார் சிவில் சமூக குழுவின் தலைவர் அருட்தந்தை செபமாலை அடிகளாரின் மன்னாரிலுள்ள அலுவலகம் புலனாய்வுப் பிரிவினரால் சோதனையிடப்பட்டுள்ளது. தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பாக பல பிரதிநிதிகளும், சிவில் அமைப்புக்களைச் சேர்ந்தவர்களும் ஜெனீவா கூட்டத் தொடரிலும், அதுசார்ந்த உபக் கூட்டங்களிலும் கலந்துகொண்டு உரையாற்றி வருகின்றனர்.
           
அந்த வகையில் ஜெனீவா மனித உரிமை பேரவை வளாகத்தில் இடம்பெற்ற உபகுழுக் கூட்டமொன்றில் நேற்று முன்தினம் கலந்துகொண்டு உரையாற்றிய செபமாலை அடிகளார், தனது அலுவலகம் சோதனையிடப்பட்ட தகவலை அம்பலப்படுத்தினார். பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஜெனீவாவில் அழுத்தம் பிரயோகத்துவரும் நிலையில் தனது அலுவலகத்தை புலனாய்வுப் பிரிவினர் சோதனையிட்டுள்ளமையானது பிரச்சினைக்குரிய விடயம் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதுவே ஸ்ரீலங்காவின் தற்போதைய நிலைமை என்று சுட்டிக்காட்டிய அருட்தந்தை செபமாலை அடிகளார், சுதந்திரம் உள்ளதாக கூறப்படுகின்ற போதிலும், இன்னும் அது நடைமுறையில் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila