மிக முக்கிய பிரமுகரின் மனைவி விரைவில் கைது செய்யப்படவுள்ளார் என கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இவ்வாறு கைது செய்யப்படவுள்ளவர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவியான ஷிரந்தி ராஜபக்ஷவாக இருக்கக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரபல ரகர் வீரர் வசீம் தாஜூடினின் கொலையுடன் ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு தொடர்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. |
தாஜூடினின் கொலை இடம்பெற்ற போது அலரி மாளிகையிலிருந்து 41 தொலைபேசி அழைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என குற்றப்புலனாய்வு பிரிவினர் இனங்கண்டுள்ளனர். குறித்த தொலைபேசி அழைப்புகள் ஷிரந்தியின் தனிப்பட்ட இலக்கத்திலிருந்தே மேற்கொள்ளப்பட்டுள்ளது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே ஷிரந்தி ராஜபக்ஷ விரைவில் கைது செய்யப்படுவார் என கொழும்பு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. |
ஷிரந்தி ராஜபக்ச விரைவில் கைது?
Add Comments