குறித்த வானில் இருந்தவர்கள் சிவில் உடை தரித்த இராணுவ வீரர்கள் எனவும் இவர்கள் வசமிருந்த துப்பாக்கியும் கைப்பற்றப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். மேலும் சந்தேகநபர்களை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணைக்கு உட்படுத்தியபோது, அவர்கள் மேஜர் ஜெனரல் ஒருவரின் பிரத்தியேக பாதுகாவலர்களாக செயற்பட்டு வந்ததாக கூறியுள்ளனர். எவ்வாறு இருப்பினும் சம்பவத்துடன் தொடர்புடைய வான் மற்றும் அதன் இலக்கத் தகடு என்பன இராணுவத்தினருக்கு சொந்தமானதா என்பதை ஆராய்ந்து தெரியப்படுத்துமாறு, இராணுவப் பொலிஸாருக்கு, பொலிஸார் அறிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்படுவதாகவும், படையினர் குற்றமிழைத்திருந்தால் இராணுவச் சட்டங்களின் கீழ் தண்டிக்கப்படுவர் என்றும் இராணுவத் தலைமையகம் தெரிவித்துள்ளது. |
கொழும்பில் மீண்டும் வெள்ளை வான்! - சிவிலுடையில் ஆயுதங்களுடன் சிக்கிய படையினர்
Related Post:
Add Comments