அறிவித்தலின் தமிழ்ப் பிரதி இன்னும் கிடைக்கவில்லை என ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். காலியில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் பேசும் போதே மகிந்த தேசப்பிரிய இதனை கூறியுள்ளார்.
மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்
நாங்கள் எந்த நேரத்திலும் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்த தயாராக இருக்கின்றோம்.
எனினும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சின் வர்த்தமானி அறிவித்தலில் தொகுதிகளின் எல்லைகள் என்பது தெரியவேண்டும் என்பதே தற்போதுள்ள அடிப்படை பிரச்சினை.
மேலும் சபைகளின் பெண்களின் பிரதிநிதித்துவம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலும் அவசியம். சட்டமூலத்தில் உள்ள திருத்தங்கள் அவசியம்.
நான் அறிந்த வரையில் சட்டமூலத்தின் திருத்தங்கள் இன்னும் அமைச்சரவையில் முன்வைக்கப்படவில்லை. இணையத்தளத்தில் வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டால் போதுமானது என்பது எனக்கு தெரியாது.
வர்த்தமானி அறிவித்தலின் சிங்களம் மற்றும் ஆங்கில பிரதிகளே எங்களுக்கு கிடைத்துள்ளன. தமிழ்ப் பிரதியும் தேவை என மகிந்த தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார்