சிறிதரன் கேட்ட ஆதாரங்கள் மே-18 நிகழ்வின் பின்னர் தருவேன்-சட்டத்தரணி


சிறீலங்கா அரசாங்கத்திற்கு ஜீ.எஸ்.பி வரிச்சலுகை
வழங்கப்படவேண்டும் என்பதற்காகவே நான் ஐரோப்பிய நாடாளுமன்றத்திற்கு சென்றதாக கூறப்படும் விமர்சனங்கள் பொய்யானவை, அரசாங்கத்திற்கு ஆதரவாகவே நான் அங்கு சென்றேன் என்பதை எவரேனும் நிரூபிப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை துறக்கவும் தயார் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் அதற்கு பதிலளிக்கும் முகமாக பிரபல சட்டத்தரணியும் மனித உரிமை செயற்பாட்டாளருமாக சுகாஸ் கனகரட்னம் அவர்கள் இப்போது முள்ளிவாய்க்கால் நினைவு வணக்க நிகழ்வுகள் இடம்பெறுவதால் அந்த தியாக வேள்வி முடிவுற்றதும் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் கேட்ட ஆதாரத்திற்கான பதிலை வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila