புதிய அரசியலமைப்புத் தொடர்பில் சந்தேகம்?!

perera

புதிய அர­சி­ய­ல­மைப்பு ஒன்றை உரு­வாக்கும் நோக்­கத்தில் அர­சாங்கம் செயற்­ப­டு­வ­தாக தெரி­ய­வில்லை. இந்த ஆட்­சிக்­கா­லத்தில் புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்­கப்­ப­டுமா என்­பதில் சந்­தேகம் உள்­ளது என தேசிய சமா­தான பேர­வையின் தலைவர் கலா­நிதி ஜெஹான் பெரேரா தெரி­வித்தார். நல்­லி­ணக்­கத்தை உரு­வாக்கும் பய­ணத்தில் அர­சாங்கம் சரி­யான பாதையில் பய­ணிக்­க­வில்லை. மீண்டும் நாட்டில் இன­வாத செயற்­பா­டு­களை பரப்பும் சூழல் உரு­வாக்­கப்­பட்டு வரு­வ­தா­கவும் அவர் குறிப்­பிட்டார்.
நல்­லி­ணக்க வேலைத்­திட்டம் மற்றும் புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்கம் தொடர்­பி­லான நகர்­வுகள் குறித்து வின­வி­ய­போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.
இது குறித்து அவர் மேலும் கூறு­கையில், ஆட்சி மாற்றம் மூல­மாக நாட்டின் நல்­லி­ணக்க செயற்­திட்­டங்கள் முன்­னே­டுக்­கப்­படும் என்­பதே இந்த அர­சாங்கம் கொடுத்த வாக்­கு­று­தி­யாகும். சர்­வ­தேச தரப்­புக்கும் இந்த வாக்­கு­று­திகள் வழங்­கப்­பட்­டுள்­ளன. எனினும் அர­சாங்கம் கொடுத்த வாக்­கு­று­தி­களை செயற்­ப­டுத்த உறு­தி­யான வேலைத்­திட்­டங்கள் எத­னையும் முன்­னெ­டுக்க முயற்­சிக்­க­வில்லை.
நல்­லி­ணக்­கத்தை உரு­வாக்கும் பாதையில் இவர்கள் பய­ணிக்­க­வில்லை. மாறாக காலத்தை கடத்தும் வகையில் அர­சாங்கம் செயற்­பட்டு வரு­கின்­றது. நாட்டில் மத அடக்­கு­முறை செயற்­பா­டுகள் மற்றும் இன ரீதி­யி­லான பாகு­பா­டுகள் மீண்டும் தலை­தூக்­கி­யுள்­ளன. இந்த விட­யங்­களை இன்று பல தரப்­பி­னரும் முன்­வைத்து வரு­கின்­றனர்.
அதேபோல் புதிய அர­சி­ய­ல­மைப்பு ஒன்று உரு­வாக்­கப்­பட வேண்டும் என்ற நோக்கம் ஆரம்­பத்தில் இருந்த போதிலும் தற்­போது அந்த நோக்­கமும் இல்­லாது போகின்­றதா என்ற சந்­தேகம் எழுந்­துள்­ளது. இந்த ஆண்டு இறு­திக்குள் புதிய அர­சியல் அமைப்பு உரு­வாக்­க­படும் என அர­சாங்கம் வாக்­கு­றுதி வழங்­கி­யுள்ள போதிலும் வேலைத்­திட்­டங்­களில் பாரிய தாம­தங்கள் நில­வு­கின்­றன.
இவ்­வா­றான செயற்­பா­டுகள் தொடர்ந்தும் முன்­னெ­டுக்­கப்­ப­டு­மாயின் 2020 ஆம் ஆண்டு வரையில் இவர்­க­ளினால் புதிய அர­சியல் அமைப்பு ஒன்று உரு­வாக்­கப்­ப­டப்­போ­வ­தில்லை. இந்த ஆட்சி காலம் முடிய முன்னர் புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்படாவிட்டால் இனிமேல் எப்போதும் புதிய அரசியல் அமைப்பு ஒன்று உருவாக்கப்பட போவதில்லை. அதற்கான வாய்ப்புகளும் அமையப்போவதில்லை என்றார்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila