சீ.வி.விக்னேஸ்வரன் மீது மோசமான விமர்சனங்களை முன்வைத்த உத்தியோகஸ்த்தருக்கு புதிய சிக்கல்

வவுனியா - தெற்கு பிரதேச செயலக விளையாட்டு உத்தியோகஸ்த்தருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு கொண்டுவரப்பட்ட பிரேரணை தொடர்பில் வடமாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
வடமாகாண சபை எதிர்க்கட்சி உறுப்பினர் அ.ஜயத்திலக்க குறித்த பிரேரணையை சபைக்கு கொண்டு வந்துள்ளார்.
வடமாகாண சபையின் 100ஆவது அமர்வு இன்று பேரவை செயலகத்தின் சபா மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போது பிரேரணையை முன்வைத்து அ. ஜயத்திலக்க கருத்து தெரிவிக்கையில்,
“வடமாகாண விளையாட்டுத்துறை அமைச்சினால் இவ்வாண்டு வடமாகாணத்தில் உள்ள விளையாட்டு கழகங்களை பதிவு செய்வதற்கான கோரிக்கை கடிதம் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
மேற்படி கடிதம் தமிழில் உள்ளதாக கூறி வவுனியா வடக்கு பிரதேச செயலக விளையாட்டு உத்தியோகத்தர் தனக்கு கீழ் உள்ள விளையாட்டு கழகங்களை பதிவு செய்யாமல் விட்டிருக்கின்றார்.
இது தொடர்பாக கடந்த 15.07.2017ஆம் திகதி நடைபெற்ற வவுனியா வடக்கு பிரதேச செயலக ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கேள்வி எழுப்பியிருந்தபோது
பிரதேச செயலர் மற்றும் விளையாட்டு உத்தியோகஸ்த்தர் ஆகியோர் இனவாதமாக பேசியதுடன் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மற்றும் மாகாணவிளையாட்டுதுறை அமைச்சின் பணிப்பாளர் ஆகியோர் மீது மோசமான விமர்சனங்களையும் முன்வைத்திருக்கின்றார்.
இது பிழையான முன் உதாரணமாகும். எனவே குறித்த விளையாட்டு உத்தியோகஸ்த்தருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கின்றது” என குறிப்பிட்டுள்ளார்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila