
ஆர்னோல்ட் மற்றும் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் துரைராஜசிங்கம் ஆகியோர் நிதி சேகரிக்கும் நடைபயணத்தில் கலந்துகொள்வதற்காக இன்று கனடா வந்தடைந்துள்ளனர்.
தாயக மக்களின் அபிவிருத்தித் தேவைக்காக நிதிசேகரிப்பில் ஈடுபடுவதற்காகவே குறித்த மூவரும் கனடாவிற்குப் பயணமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றபோதும் இதுவரை த.தே.கூட்டமைப்பின் சார்பில் திரட்டப்படும் நிதி யாவும் தமிழரசுக்கட்சியின் ஓரிருவராலேயே கையாளப்படுவதாகவும் ஏனைய கட்சிகளுக்கோ உறுப்பினர்களுக்கோ தெரியப்படுத்தப்படுவதில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
கனடாவில் இன்றும் நாளையும் தெருவிழா நடைபெறவுள்ளதுடன், எதிர்வரும் 10ஆம் நாளில் ஸ்காபரோவில் நிதிசேர் நடைபவனியும் நடைபெறவுள்ளது. இதில் கலந்துகொள்ளவே இவர்கள் கனடாவிற்குப் பயணம் செய்துள்ளனர்.
இரண்டு வாரம் கனடா நாட்டில் தங்கியிருக்கும் இக்குழுவினர் அங்கு பல நிகழ்வுகளில் கலந்துகொண்டு நிதி