பொன்சேகாவின் வாக்குமூலம்; நெருக்கடியை சீர் செய்ய மைத்திரி – ரணில் தரப்பு கடும் முயற்சி!

போர்க் குற்­றங்கள் தொடர்பில் ஆதா­ரங்கள் உள்­ள­தாக முன்னாள் இரா­ணுவத் தள­பதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்­சேகா கூறி­யுள்­ளமை அர­சாங்­கத்­துக்குள் பாரிய தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ள­தா­க தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. அதே­வேளை, ஜெனரல் ஜெகத் ஜய­சூ­ரி­ய­வுக்கு எதி­ராக பிரேசில் மற்றும் கொலம்­பி­யாவில் தாக்கல் செய்­யப்­பட்­டுள்ள போர்க்குற்­றச்­சாட்டு வழக்கு விவ­காரம் சர்வ­தேச நெருக்­க­டிக்குள் மீண்டும் இலங்­கையை தள்­ளி­விட்­டுள்­ள­தாக அர­சியல் ஆய்­வா­ளர்கள் கூறு­கின்­றனர்.
ஐக்­கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக்கூட்­டத்தில் கலந்து கொள்­வ­தற்கு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­ சேன அமெ­ரிக்கா செல்­ல­வுள்ள நிலை யில் அதற்கு முன்னர், போர்க் குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்­பான பேச்­சுக்­களை கட்­டுப்­ப­டுத்­து­வது தொடர்பில் ஜனா­தி­ப­திக்கும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விற்கும் இடையில் முக்­கிய சந்­திப்பு இடம்­பெற்­றுள்­ள­தா­கவும் தெரி­ய­வ­ரு­கி­றது.
இலங்­கையின் இறு­திக்­கட்ட போரில் இடம்­பெற்­ற­தாக கூறப்­படும் போர்க் குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்பில் சர்­வ­தேச நாடுகள் குற்­றச்­சாட்­டுக்­களை முன்­வைத்து வந்­தன . இத­ன­டிப்­ப­டையில் ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் பேர­வையில் இந்த போர்க் குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்பில் இலங்கை கடந்த 8 ஆண்டு கால­மாக நிரா­க­ரித்து வந்­தது.
முன்னாள் ஜன­ப­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ சர்­வ­தேச குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்பில் கவ­னத்தில் கொள்­ளப்­ப­டாத நிலையில் மேற்­கு­லக நாடு­களின் விமர்­ச­னத்­திற்கும் இலங்கை உட்­பட்­டது. ஆனால் தற்­போது இரண்டு பிர­தான கட்­சி­களும் ஒன்­றி­ணைந்து ஆட்­சி­ய­மைத்­துள்ள நிலையில் சர்­வ­தே­சத்­துக்கு முற்­றிலும் மாறு­பட்ட நம்­பிக்­கைக்கு உரிய வெளிப்­பா­டு­களை நல்­லாட்சி அர­சாங்கம் வெளிப்­ப­டுத்­தி­யது.
இதனால் கடந்த காலங்­களில் கடும் நட­வ­டிக்­கை­க­ளுக்கு வலி­யு­றுத்­திய பல நாடுகள் , இலங்கை மீது மென்­மை­யான போக்கைக் கடை­பி­டிக்க ஆரம்­பித்­தன. அதன் தொடர்ச்­சி­யாக கொள்­கையில் இலங்கை விட­யங்­களை கையாண்­டது. இறு­திக்­கட்ட போரில் இடம்­பெற்­ற­தாகக் கூறப்­படும் பார­தூ­ர­மான மனித உரிமை மீறல்கள் மற்றும் போர் குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்பில் உண்மை நிலை­மை­களைக் கண்­ட­றி­யவும் பொறுப்­புக்­கூ­றலை வெளிப்­ப­டுத்­தவும் குறிப்­பிட்ட கால எல்­லையை சர்­வ­தேசம் இலங்­கைக்கு வழங்­கி­யது.
இன்னும் ஓரிரு வாரங்­களில் ஐக்­கிய நாடுகள் பொதுச்­சபைக் கூட்டம் மற்றும் ஐ. நா. மனித உரி­மைகள் மீளாய்வு கூட்­டத்­தொடர் என்­பன ஆரம்­ப­மாக உள்­ளன. இந் நிலை­யி­லேயே இறு­திக்­கட்ட போரில் இடம்­பெற்­ற­தாகக் கூறப்­படும் பார­தூ­ர­மான மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்­றங்­க­ளுக்கு ஒப்­புதல் வாக்­கு­மூலம் அளிக்கும் வகையில் முன்னாள் இரா­ணுவத் தள­பதி பீல்ட் மார்ஷல் சரத்­பொன்­சேகா தகவல் வெளி­யிட்­டுள்­ள­தாக ச் சுட்­டிக்­காட்­டப்­ப­டு­கின்­றது.
மேலும் முன்னாள் இரா­ணுவத் தள­பதி ஜெனரல் ஜெகத் ஜய­சூ­ரி­ய­வுக்கு எதி­ராக, பிரே­சிலில் போர்க்­குற்ற வழக்கு தாக்கல் செய்­யப்­பட்­டுள்ள நிலை­யி­லேயே சரத் பொன்­சேகா குற்றம் இடம்­பெற்­ற­தற்­கான ஆதா­ரங்கள் தன்­னிடம் இருப்­ப­தாக தெரி­வித்­துள்ளார். இந்த அறி­விப்பை தொடர்ந்து அர­சாங்­கத்­திற்­குள்ளும் கடும் கருத்து மோதல்கள் எழுந்­துள்­ளன. ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன இந்த விடயம் தொடர்பில் பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்­க­வுடன் கலந்­து­ரை­யா­டி­யுள்­ள­தாக தெரி­ய­வ­ரு­கி­றது.
மேலும் சர்­வ­தேச உண்மை மற்றும் நீதிக்­கான திட்டம் தலை­மை­யி­லான, மனித உரிமை அமைப்­புகள் ஜெகத் ஜய­சூ­ரி­ய­வுக்கு எதி­ராக போர்க் குற்ற வழக்கை தாக்கல் செய்­துள்­ளன. 2007ஆம் ஆண்டு தொடக்கம் இறு­திக்­கட்ட போர் இடம்­பெற்ற 2009ஆம் ஆண்டு வரை ஜெனரல் ஜெகத் ஜய­சூ­ரிய வன்னி படை­களின் தள­ப­தி­யாக இருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.
வவு­னி­யாவில் உள்ள ஜோசப் முகாமில் இருந்து இவர் இரா­ணுவ நட­வ­டிக்­கையை மேற்­பார்வை செய்­த­தாக போர் குற்­ற­வ­ழக்கில் குற்­றச்­சாட்டு முன் வைக்­கப்­பட்­டுள்­ளது. குறிப்­பாக 2009ஆம் ஆண்டு இறு­திக்­கட்ட போரில் ஜெனரல் ஜெகத் ஜய­சூ­ரி­யவின் மேற்­பார்­வையில் இருந்த இரா­ணுவப் பிரி­வு­களால், மருத்­து­வ­ம­னைகள் , குடி­யி­ருப்­புக்கள் மீது தாக்­குதல் நடத்­தப்­பட்­ட­தா­கவும், இதனால் ஆயி­ரக்­க­ணக்­கான மக்கள் கொல்­லப்­பட்­ட­தா­கவும், காணாமல் ஆக்­கப்­பட்­ட­தா­கவும், சித்­தி­ர­வதை செய்­யப்­பட்­ட­தா­கவும் இந்த வழக்கில் மேலும் குற்­றச்­சாட்­டுக்கள் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன.
ஜெகத் ஜய­சூ­ரிய பிரேசில் மற்றும் கொலம்­பியா, பெரு, சிலி, ஆர்­ஜென்­ரீனா மற்றும் சூரினாம் ஆகிய நாடு­க­ளுக்­கான இலங்­கையின் தூது­வ­ரா­கவும் நிய­மிக்­கப்­பட்­டி­ருந்தார். இந்­நி­லை­யி­லேயே பிரேசில் மற்றும் கொலம்­பி­யாவில் ஜெனரல் ஜெகத் ஜயசூரியவுக்கு எதிரான வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்த வழக்குகளை இராஜதந்திர ரீதியில் நட்பு நாடுகளின் ஒத்துழைப்புகளுடன் எதிர்கொள்ள முடிந்தாலும் ,உள்நாட்டில் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜெகத் ஜயசூரிய குற்றம் செய்ததற்கான ஆதாரம் உள்ளதாக பிராந்திய அபிவிருத்தி அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கூறியுள்ளமை குறித்த வழக்கிற்கு வலுசேர்ப்பதுடன் சர்வதேச குற்றச்சாட்டுக்கு ஒப்புதல் வாக்குமூலம் அளித்தது போன்றுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகின்றது .
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila