வடமாகாண அதிகாரிகள் செய்திகளை வெளியிடக் கூடாதென – சி.வி.கே ஆதங்கம் !

வடமாகாணத்திலுள்ள அரச அதிகாரிகள் ஊடகங்களுக்கு செய்திகளை வழங்கக்கூடாதென வடமாகாண சபை அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம். 

வடமாகாணசபையின் 108ஆவது அம ர்வு நேற்று முன்தினம் இடம் பெற்ற அமர்விலேயே இவ்வாறு குறிப்பிட்டு ள்ளார்.  மேலும்  தெரிவிக்கையில், வடமாகாணத்துக்குரிய நிதியை வட மாகாண சபையின் முன்னாள் ஆளு நரே பதுக்கியுள்ளார். அது நீண்ட காலம் தரப்படாதிருந்து தற்போதே வடமாகாணத்திற்கு தரப்பட்டது. அவ்வாறு கிடைத்த 144மில்லியன் ரூபாவை மாகாண அமைச்சுக்களின் தலைமைச் செய லருடன் உரையாடி அமைச்சின் வேலைத்திட்டத்தை முன்வைத்து நிதியைப் பெற்றுக்கொள்ளமுடியுமெனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், சில அரசாங்க அதிகாரிகள் வேறு நோக்கத்துக்காக ஊடகங்க ளுக்கு தவறான செய்தியை வெளியகப்படுத்தினர். ஊடகங்களுக்கு செய்தியை வழங்குமாறு தெரியப்படுத்தியவர்கள்  யார்? 

எந்தவொரு அதிகாரிக்கும் ஊடகங்களுக்குச் செய்தி வழங்க அனுமதியில்லை. அவ்வாறு வழங்கவும் கூடாதென ஆதங்கம் கொண்டுள்ளார். 
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila