இராணுவத்திற்கு எதிராக யாழில் பன்னிரண்டு ஆட்கொணர்வு மனுத் தாக்கல் !

யாழ்ப்பாணத்தில் கடந்த 1996 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இராணுவத்தி னரால் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை மீள விடு விக்குமாறு கோரி யாழ்.மேல் நீதிமன்றில் பன்னிரன்டு ஆட்கொணர்வு மனு க்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 
பன்னிரன்டு மனுக்களில் ஒன்பது பேரின் மனுக்கள் ஏற்கனவே அநுரா தபுரம் நீதிமன்றில் விசாரணையில்  ஒன்பது மனுக்களையும் நிராகரித்து ஏனைய மூன்று வழக்குகள் மீதான விசாரணையும் எதிர்வரும் 14 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன். சட்டத்தரணி சுபாஜினி கிஷோர் ஊடாக தாக்கல் செய்யப்பட்ட இவ் ஆட்கொணர்வு மனுவில் சட்ட த்தரணி குருபரன் மனுத் தொடர்பாக விவாதித்திருந்தார் என்பது குறிப்பிடத்த க்கது. 

இதன்படி அவ் ஆட்கொணர்வு மனுவில், யாழ்ப்பாணம் விடுதலைப் புலிகளது கட்டுப்பாட்டில் இருக்கையில் ஒப்ரேசன் ரிவிரெஸ ஊடாக யாழ்ப்பாணம் முற்றாக இராணுவத்தின் பூரண கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது. 

அவ்வேளை யாழ்ப்பாணத்தில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் மீளவும் 1996 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் குடியமர்ந்த வேளை சாவகச்சேரி நாவற்குழி அரியாலை பகுதிகளில் இராணுவத்தால் கடத்தப்பட்டு இராணுவத்தாலேயே இவர்கள் காணாமல் ஆக்கப்பட்டிருந்ததாக  மனுவில் தெரிவிக்கப்பெற்று ள்ளது.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila