நல்லாட்சிக்கு மீண்டும் ஆதரவளிப்பது தொடர்பினில் கூட்டமைப்பு பேரம் பேசவுள்ளதாக அறிவித்துள்ளது.அவ்வகையினில் எதிர்வரும் 2018ஆம் நிதியாண்டுக்கான வரவு-செலவுத்திட்டத்துக்கு ஆதரவளிப்பதா, இல்லையா என்பது தொடர்பில், எதிர்வரும் 16ஆம் திகதியன்று, இலங்கை ஜனாதிபதியை சம்பந்தன் -சுமந்தின் அணி சந்திக்கவுள்ளது.இச்சந்திப்பின் பின்னர் மீண்டும் ஆதரவளிப்பது தொடர்பினில் தீர்மானிப்பதற்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவெடுக்கவுள்ளது.
நாடாளுமன்றக் கட்டடத்தொகுதியில் நேற்று இடம்பெற்ற நாடாளுமன்றக்குழுக் கூட்டத்திலேயே, மேற்கண்ட தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
நல்லாட்சியின் கீழ் கொண்டுவரப்பட்ட முதல் இரண்டு வரவு- செலவுத்திட்டத்துக்கு ஆதரவு அளித்த போதும் தமிழ் மக்களது பிரச்சினைகள் ஏதும் தீர்க்கப்படவில்லையென சிவசக்தி ஆனந்தன் பகிரங்கமாகவே குற்றஞ்சாட்டியிருந்தார்.இம்முறை ஆகக்குறைந்தது அரசியல் கைதிகளது விடுதலை தொடர்பிலேனும் பேரம் பேசவேண்டுமென அவர் யாழ்.பல்கலைக்கழகத்தினில் பகிரங்க அழைப்புவிடுத்திருந்தார்.
இதேவேளை இது குறித்து உறுப்பினர்கள் அனைவரும் கலந்துரையாட வேண்டியது அவசியம் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ். சிறீதரன், சார்ள்ஸ் நிர்மலநாதன், கவீந்திரன் கோடீஸ்வரன் ஆகியோர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதனையடுத்தே, ஜனாதிபதியைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தி முடிவெடுக்கத் தீர்மானிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
Add Comments