பஸ்கள் மீது கல்வீச்சு!


இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பருத்தித்துறை டிப்போ பஸ்கள் மீது, இன்று  காலை இனந்தெரியாதோர் கற்கள் வீசித் தாக்குதல்களை மேற்கொண்டதால், பருத்தித்துறையிலிருந்து யாழ்ப்பாணத்துக்கான பஸ் சேவைகள், காலை 10.30 மணியுடன் இடைநிறுத்தப்பட்டது.  எனினும், ஏனைய பாதைகளினூடாக பஸ் சேவைகள் அனைத்தும் இடம்பெற்றன. 
இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பருத்தித்துறை டிப்போ பஸ்கள் மீது, இன்று காலை இனந்தெரியாதோர் கற்கள் வீசித் தாக்குதல்களை மேற்கொண்டதால், பருத்தித்துறையிலிருந்து யாழ்ப்பாணத்துக்கான பஸ் சேவைகள், காலை 10.30 மணியுடன் இடைநிறுத்தப்பட்டது. எனினும், ஏனைய பாதைகளினூடாக பஸ் சேவைகள் அனைத்தும் இடம்பெற்றன.
           
வடபிராந்திய போக்குவரத்துச் சபையின் பாதுகாப்பு தரப்பு மற்றும் நிருவாக அதிகாரி ஆகியோரின் நடவடிக்கைகளைக் கண்டித்து, இன்று யாழ்ப்பாணம் இ.போ.ச டிப்போ ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இப்பணிப்புறக்கணிப்புக்கு, பருத்தித்துறை இ.போ.ச டிப்போ ஊழியர்கள் ஆதரவு தெரிவிக்காது, பருத்தித்துறை இ.போ.ச டிப்போ பஸ் சேவைகள் யாவும் அதிகாலை முதல் வழமை போல் ஆரம்பமாகி நடைபெற்று வந்தன. இந்நிலையிலேயே, இந்த கற்கள் வீசித்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
அதேவேளை, வடபிராந்திய போக்குவரத்துச் சபையின் தொழிற்சங்க நடவடிக்கையை மீறி, பருத்தித்துறை சாலை பஸ் சேவை இடம்பெற்றதால், யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையத்தில், ச குழப்பநிலை ஏற்பட்டது. ஊழியர்களை இடமாற்றக் கோரும் வடபிராந்திய பிரதான முகாமையாளருக்கும் பருத்தித்துறை சாலை முகாமையாளருக்கும் இடையே உள்ள நெருக்கமே, குறித்த வழித்தடத்துக்கான பஸ் சேவை இடம்பெற்றமைக்குக் காரணம் எனக் குற்றஞ்சாட்டப்படுகிறது.
இலங்கைப் போக்குவரத்துச் சபையின் வடபிராந்திய ஊழியர்கள் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டதால், அரச பஸ் சேவைகள் அனைத்தும், வடக்கில் முற்றாக முடங்கின. இதனால் யாழ். மத்திய பஸ் நிலையம் வெறிச்சோடிக் கிடந்தது. அங்கு அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படாதிருக்கும் வகையில், பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில், குறித்த பகுதியில் இடம்பெற்ற குழப்பநிலையைத் தொடர்ந்து, பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் குவிக்கப்பட்டு, பிரதேசத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே வடபிராந்திய போக்குவரத்துச் சபையின் தொழிற்சங்கப் போராட்டத்தை ஒழுங்கமைத்தனர் என்ற குற்றச்சாட்டின் பேரில், 5 பேருக்கு எதிராக, யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் இன்று நண்பகல் முறைப்பாடு செய்யப்பட்டது. யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையப் பொறுப்பாளர் எஸ்.கனகராஜா, இந்த முறைப்பாட்டைச் செய்துள்ளார்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila