
புதிய அரசியலமைப்பு தொடர்பில் தற்போது இலங்கை நாடாளுமன்ற த்தில் விவாதங்கள் இடம்பெற்றுவ ரும் நிலையில் 20 ஆவது திருத்தச்ச ட்டம் தொடர்பில் தனது கருத்தை வழ ங்குவதற்கான சந்தர்ப்பத்தை தனக்கு வழங்குமாறு வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் எதி ர்கட்சித்தலைவர் சம்பந்தனிடம் நிபந்தனை விடுத்த போது அதற்கான சந்த ர்ப்பத்தை சம்பந்தன் வழங்க மறுத்ததினால் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் சபாநாயகரிடம் முறைப்பாடு வழங்கியுள்ளார்.
ஒரு மக்கள் பிரதிநிதி தான் சார்ந்த மக்களின் கருத்தை நாடாளுமன்றில் தெரிவிப்பதற்கான சிறப்புரிமையை சம்பந்தன் பறித்திருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் குற்றம் சுமத்தியுள்ளார்.
மேலும் தான் சபாநாயகர் கரு ஜெயசூரியவிடம் முறைப்பாடு செய்திருப்ப தாகத் தெரிவித்த அவர் தனது கருத்தை தெரிவிப்பதற்கான நேரத்தை சபாநாய கரிடம் கோரியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.