இந்திய அரசின் நடவடிக்கைகள் வேதனையளிக்கிறது!

வடக்கு மாகாண சபையின் நிர்வாக எல்லைக்குள்ளாக நடைபெறும் பொது நிகழ்வுகள்,அபிவிருத்தி நடவடிக்கைகள் என்பவற்றில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட வடக்குமாகாண சபையை முற்றிலுமாக புறக்கணித்து அதுகுறித்தான முன்னெடுப்புகளைதன்னிச்சையாக மேற்கொண்டு வரும் மத்திய அரசின் சதிக்கு இந்திய அரசும் துணைபோவதுவேதனையளிப்பதாக, வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்கள்தெரிவித்துள்ளார்.
இன்று காலை 10.30 மணியளவில் அமைச்சர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர்சந்திப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்…
யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 26, 27 மற்றும் 28 ஆகிய நாட்களில் நடைபெறஏற்பாடாகியுள்ள 9வது சர்வதேச வர்த்தக கண்காட்சி நிகழ்வும் வடக்கு மாகாண சபையைமுற்றிலுமாக புறக்கணித்து நடாத்தப்படவிருக்கின்றது.
இந்நிகழ்விற்கானமுன்னேற்பாடுகள் ஏறக்குறைய நிறைவடையும் இத்தருணம் வரை வட மாகாண சபையின்வர்த்தகமும் வாணிபமும் அமைச்சராக இருக்கும் எனக்கு எதுவித அறிவிப்போ, அழைப்போகிடைக்கவில்லை.
மக்களால் ஜனநாய முறையில் தேர்வு செய்யப்பட்ட மாகாண சபை நிர்வாகத்தினைவேண்டுமென்றே புறக்கணித்து மத்திய அரசின் நிர்வாக கட்டமைப்புகளினூடாக வடக்கில்பொது நிகழ்வுகளையும் அபிவிருத்தி நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதானதுஇலங்கை அரசின் திட்டமிட்ட சதியாகும்.
இதற்கு இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகள்துணைபோவது வேதனையளிக்கின்றது.
வடக்கில் மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு அழுத்தங்களை பிரயோகித்த இந்தியாஉள்ளிட்ட சர்வதேச நாடுகள் அதற்கான அதிகாரங்களை வழங்கும் விடயத்தில் மௌனமாகஇருப்பதானது இவ்வாறு வட மாகாண சபையை திட்டமிட்டு புறக்கணித்து முன்னெடுப்புகளைமேற்கொள்வதற்கான உந்துதலை இலங்கை அரசாங்கத்திற்கு கொடுத்துள்ளது.
இவ்விடயத்தில் இந்தியாவும் மௌனமாக இருந்து வருவது தமிழர்களாகிய எமக்கு பெரும்ஏமாற்றத்தினையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.
முன்னைய இந்திய இலங்கை அரசதலைவர்களால் ஏற்படுத்தப்பட்ட இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம்வடக்கு-கிழக்கு இணைந்த தமிழர் தாயகம் ஏற்று அங்கீகரிக்கப்பட்டிருந்தது.
இந்தியாவின் சிறந்த நட்பு நாடாக இலங்கையை சீராட்டி பாராட்டி வந்த நிலையிலும்இந்திய-இலங்கை ஒப்பந்தத்திற்கு வேட்டுவைக்கும் வகையில் வடக்கு-கிழக்குமாகாணங்கள் தனித்தனி நிர்வாக அலகுகளாக பிரிக்கப்பட்டது.
தமிழர்களுக்கு எதிரானஇலங்கை அரசின் இந்த நடவடிக்கையினை கண்டிக்கவோ தடுத்து நிறுத்தவோ அப்போதையஇந்திய அரசோ தொடர்ந்து வந்த அரசுகளோ ஆக்கபூர்வமான முயற்சிகளைஎடுத்திருக்கவில்லை என்பது பெரும் குறiயாகவே இன்று வரை நீடித்து வருகின்றது.
தமிழ் மக்களின் விடுதலைக்கான போராட்டத்தினை மக்களின் ஆதரவுடன் விடுதலைப்புலிகள் முன்னெடுத்து வந்த போது மக்களிடம் இருந்து புலிகளை அந்நியப்படுத்திபலவீனப்படுத்துவதற்கு மேற்கொண்ட சதித்திட்டத்தின் நீட்சியாகவே தற்போதைய மாகாணசபையை புறக்கணிக்கும் அரசின் செயற்பாடுகளும் அமைந்துள்ளது.
மக்களால் ஜனநாயக வழியில் தெரிவுசெய்யப்பட்ட வட மாகாண சபையின் நிர்வாகஎல்லைக்குள்ளாக நடைபெறும் முன்னெடுப்புகளில் வட மாகாண சபையை புறந்தள்ளும்இலங்கை அரசின் இச்சதியில் இந்திய அரசும் மௌனமாக பங்கேற்பதானது, அதிகாரப்பரவலாக்கத்தினை மேற்கொண்டு தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வு காணப்படவேண்டுமென்று வலியுறுத்தி வருவதன் மீதான ஐயப்பாட்டினை தமிழர்களிடையேஏற்படுத்தியுள்ளது.
சர்வதேச வர்த்தக கண்காட்சிக்கு இந்திய அரசின் ஒத்துழைப்பும் ஆதரவும்மேலோங்கியிருக்கும் நிலையில் குறித்த நிகழ்விற்கு வடக்கு மாகாண சபைமுதலமைச்சர் மற்றும் துறைசார் அமைச்சர் உள்ளிட்டவர்களின் பங்கேற்புடன்நடாத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்திக் கூறக்கூடிய இடத்தில் இருந்தும் அதனைசெய்யாதது உண்மையில் எமது மக்களுக்கு பெரும் வேதனையையும் ஏமாற்றத்தினையும்ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்கள் மேலம் தெரிவித்திருந்தார்
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila