மன்னார் மடு தேவா லய நுழைவாயில் அருகாமையில் இராணுவத்தினரால் புத்தர் சிலை ஒன்றை வைத்து பௌத்த தேவா லயம் ஒன்றை அமைப்பதற்கு எடுக் கும் முயற்சியை உடனடி யாக தடுத்து நிறுத்த நடவடிக்கை எடு க்குமாறு கூறி மன்னார் பிரஜைகள் சங்கங் கள் இரண்டு வட மாகாண கல்வி மற்றும் கலாசார அமைச்சருக்கு கடிதம் மூலம் கோரி க்கை முன்வைத்துள்ளனர்.
இந்த இடத்தில் சிற்றுண்டிச்சாலை ஒன்றை நடத்திவரும் இராணுவப் படையி னர் குறித்த இடத்தில் உள்ள மரத்திற்கு கீழ் புத்தர் சிலை ஒன்றை வைத்து பௌத்த தேவாலயம் ஒன்றை அமைப்பதற்கு நடவடி க்கை மேற்கொண்டு வருவதாக கூறும் மன் னார் பிரஜைகள் சங்கம், இந்த இடத்தில் இவ் வாறான செயலை செய்ய ஒருபோதும் அனு மதிக்க முடியாது, அது மடு தேவாலயத்திற்கு செய்யும் மிகப் பெரிய அவமரியாதை என குறிப்பிட்டுள்ளது.
இப்போதைக்கு இவ்விடத்தை வணக்க வழிபாடுகள் நடத்தும் இடமாக இராணுவப் படையினர் மாற்றியுள்ளதாக சுட்டிக்காட்டியு ள்ள பிரஜைகள் சங்கம், பிரபல கிறிஸ்தவ தேவாலயம் உள்ள இடத்தில் இவ்வாறான செயலை அனுமதிக்க முடியாது என குறித்த கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளது.
வடக்கில் பல இடங்களில் புத்தர் சிலை களை வைத்து வணக்க வழிபாடுகளில் ஈடு படுகின்ற இராணுவப் படையினர், அவ்விட த்தை விட்டு செல்லும் போது, சிலைகளை அகற்றாமல் செல்வதன் மூலம் ஏற்படுகின்ற பிரச்சினை, தேசிய ரீதியான பிரச்சினையாக உருவெடுப்பதால் இந்த இடத்தில் புத்தர் சிலையை வைப்பதற்கு முன்னரே இச்செயற் பாட்டை நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு மன்னார் பிரஜைகள் சங்கங்கள் இரண்டும் வட மாகாண சபையிடம் வேண்டியுள்ளது.
மேலும் மன்னார், மடு நுழைவாயில் பகுதியில் புத்தர்சிலை வைப்பதற்கான எந்த நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை என வன்னி இராணுவ கூட்டுப்படை தள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வவுனியா-மன்னார் வீதியில் உள்ள மடு நுழைவாயில் பகுதியில் காணப்படும் அரச மரத்தின் கீழ் இராணுவத்தால் புத்தர்சிலை வைப்பதற்கான நடவடிக்கைகள் இடம்பெறு வதாக சில ஊடகங்கள் உண்மைக்கு புறம் பான செய்தியினை வெளியிட்டு இருந்தன. ஆனால், இராணுவத்தால் அவ்வாறு எந்த வொரு நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட வில்லை. அவ்வாறான எண்ணம் கூட எம் மிடம் இல்லை என வன்னி இராணுவ கூட் டுப்படைத்தள அதிகாரிகள் மேலும் தெரிவி த்துள்ளனர்.