ஏற்றுக்கொள்ள முடியாத வேலையை செய்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு!

வவுனியா வடக்கு பிரதேச சபைக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் தெரிவு செயய்பபட்டுள்ள தவிசாளர் உப தவிசாளர்களை தாம் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை எனவும் இத் தெரிவை கண்டிப்பதாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வவுனியா மாவட்ட வட மாகாணசபை உறுபபினர் ஜி. ரி. லிங்கநாதன் தெரிவித்துள்ளார்.
வவுனியா வடக்கு பிரதேசம் திட்டமிட்ட சிங்கள குடியற்றத்தினால் பறிபோய்க்கொண்டிருக்கும் நிலையில் அப்பிரதேசத்தின் இருப்பினை தக்க வைப்பதற்காகவும் தமிழ் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்காகவும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் சார்பில் வட மாகாண சபை உறுப்பினர்களான ப. சத்தியலிங்கம், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் செ. மயூரன் ஆகியோருடன் நானும் அர்ப்பணிப்புடன் செயலாற்றியிருந்தோம்.
இந் நிலையில் அப்பகுதிக்காக தவிசாளர் பிரதி தவிசாளர் தெரிவின் போது மக்கள் பிரதிநிதிகள் என்ற வகையிலும் அப்பகுதியினை தக்க வைப்பதற்கு உதவியவர்கள் என்ற வகையிலும் எனக்கோ மயூரனுக்கோ அழைப்பு விடுக்கப்படவில்லை.
இதனை நாம் வன்மையாக கண்டிப்பதுடன் அப்பகுதியில் தெரிவு செய்ய்பபட்ட தவிசாளர் உதவி தவிசாளர்களில் எமக்கு எவ்விதத்திலும் உடன்பாடு இல்லை என்பதனையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.
எச்சந்தர்ப்பத்திலும் இதனை நாம் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila