பிரியங்கவின் மனைவி பிள்ளைகளின் விசா ரத்து- சிங்களத்திற்கு அடிமேல் அடி கொடுக்கும் தமிழர்

அடிமேல் அடி விழுந்தால் அம்மியும் நகரும் என்பது போல, இலங்கையில் உள்ள சிங்கள தலைமை மீது, லண்டன் தமிழர்கள் தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறார்கள்.
நேற்று முன் தினம் இந்திக்க பெனாண்டோ இலங்கை சென்றுள்ள நிலையில். அவரது குடும்பம் லண்டனில் தங்கியுள்ளது.
இதனை அறிந்த தமிழ் அமைப்புகள், லண்டனுக்கு அவரது விசாவில் (டிப்பெண்டனாக) வந்த அவரது மனைவி பிள்ளைகளை உடனடியாக நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று புதுக் கோரிக்கை ஒன்றை முன் வைத்துள்ளார்கள்.
பிரித்தானிய வெளியுளவு துறை அமைச்சர், உள் துறை அமைச்சர் என்று பல அமைச்சர்களுக்கு தமிழர் தரப்பில் இருந்து கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பிரியங்க பெனாண்டோவின் குடும்பத்தார் அனைவரது விசாவும் ரத்துச் செய்யப்பட்டு , அவர்களையும் நாட்டை விட்டு திருப்பி அனுப்ப, பிரித்தானியா உடனடி நடவடிக்கையில் இறங்கவுள்ளது என மேலும் அறிகிறது.
பிரித்தானியா , அமெரிக்கா , கனடா போன்ற பல வெளி நாடுகளுக்கு இந்திக்க பெனாணோ செல்லாமல் இருக்க உலகில் உள்ள பல நாட்டு தமிழர்கள் தமது நாட்டில் உள்ள தூதரங்களுக்கு அறிவித்து வருகிறார்கள்.
உலகில் பல நாடுகளில் வாழும் தமிழர்கள் லண்டன் தமிழர்களோடு கை கோர்த்து நிற்பது. உலகத் தமிழர்களின் ஒற்றுமையை சிங்கள அரசுக்கு உணர்த்தியுள்ளது.
2009க்கு பின்னர் உலகத் தமிழர்கள் மத்தியில் பல பிரச்சனைகளை ஏற்படுத்தி, பிரித்துவிட்டதாகவும். உடைத்து விட்டதாகவும் சிங்களம் நினைத்து பெருமையடைந்தது. ஆனால் அது இறுதிவரை நடக்கவே இல்லை…
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila