இலங்கை சிங்கள பௌத்த நாடே : இதனை மாற்ற முடியாது என்கிறார் நாமல்



இலங்கை சிங்கள பௌத்த நாடு இது தொடர்பான மாற்றுக்கருத்துக்கு இடமில்லை என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.
லண்டன் பீ.பீ.சி சிங்கள சேவைக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இலங்கையில் மதச் சார்பில்லாத அரசியலமைப்பை ஏற்றுக்கொள்கின்றீர்களா? அல்லது இலங்கை சிங்கள பெளத்த நாடாக இருக்க வேண்டுமென கருதுகின்றீர்களா? என அவரிடம் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
”இலங்கை சிங்கள பௌத்த நாடாகவே இருக்க வேண்டும். இதில் மாற்றுக் கருத்துக்கள் இருக்க முடியாது . இந்தியாவை இந்து நாடு அல்ல என கூற முடியுமா? அமெரிக்கா , இங்கிலாந்தை கிறிஸ்தவ நாடு அல்ல என கூற முடியுமா? அந்தந்த நாடுகளின் அடையாளங்களுக்கு நாங்கள் மதிப்பளிக்க வேண்டும் அந்த நாடுகளின் பின்னணி இருக்கின்றது. அதற்கான கௌரவத்தை நாங்கள் வழங்க வேண்டும்.” என கூறியுள்ளார்.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila