தமிழ் ஊடகவியலாளர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் பொலிஸில் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படாமையானது, இவ்வாறான விடயங்கள் அரச அனுசரணையுடன் நடைபெறுகின்றதா என்ற சந்தேகத்தை தோற்று வித்துள்ளதென வடக்கு
முதலமை ச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.
யாழ். ஊடகவியலாளர் ஒருவர் தாக்கப்பட்டமைக்கு எதிராக நேற்று புதன்கிழமை நடத்தப்பட்ட ஆர்ப்
பாட்டத்தின் பின்னர், வடக்கு முதல்வருக்கு மகஜர் கையளிக்கப்பட்டது. குறித்த மகஜரை பெற்றுக்கொண்ட முத லமைச்சர், அதன் பின்னர் மேற்குறித்தவாறு தெரிவித்தார்.
பத்திரிகையாளர்களை பயமுறுத்தும் வகையிலேயே இவ்வாறான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்த முதலமைச்சர், ,வை அரசியல் ரீதியாக நடைபெறுகின்றதா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளார்.
இ த்தாக்குதலை வன்மையாக கண்டிப்ப தோடு, இது தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு சிரேஷ்ட உப பொலிஸ் அதிபரிடம் கோரியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
தாக்குதல் நடத்தியவர்களை பொலிஸார் நன்கறிவார்கள் எனக் குறிப்பிட்ட முதலமை ச்சர், ஆகவே அவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறு த்தியுள்ளார். அதே சந்தர்ப்பத்தில் இளைஞ ர்களும் இவ்வாறான பிழையான நடவடிக்கைகளில் ஈடுபடுவதை நிறுத்திக்கொள்ள வேண்டுமெனக் கேட்டுக்கொண்டார்.