அனு­நா­யக்க தேர­ரின் உரைக்கு- மைத்­திரி, ரணில் கடும் கண்­ட­னம்!

ஹிட்­ல­ரின் கொள்­கைக்­கும், பௌத்த தர்­மத்­துக்­கு­மி­டை­யி­லான தொடர்­பு­தான் என்ன? ஹிட்­லர் வழி நடப்­ப­தா­னது பௌத்த தர்­மத்­துக்கு எதி­ரான செய­லா­கும் என்று தெரி­வித்­துள்­ளார் தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க.
ஹிட்­ல­ராக மாறி, இரா­ணுவ ஆட்­சி­யை­யே­னும் ஏற்­ப­டுத்தி நாட்டை முன்­னேற்­று­வ­தற்கு கோத்­த­பாய ராஜ­பக்ச முன்­வ­ர­வேண்­டு­மென அழைப்பு விடுத்­துள்ள அஸ்­கி­ரிய பீடத்­தின் அனு­நா­யக்க தேர­ரான வென்­ட­ருவே ஸ்ரீ உபாலி தேர­ரின் கருத்தை வன்­மை­யா­கக் கண்­டிக்­கும் வகை­யி­லேயே தலைமை அமைச்­ச­ரா­லேயே மேற்­படி அறி­விப்பு விடுக்­கப்­பட்­டுள்­ளது.
மாத்­த­றை­யில் நேற்று முன்­தி­னம் நடை­பெற்ற நிகழ்­வொன்­றில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே தேர­ரின் அனு­சா­சன உரைக்கு தலைமை அமைச்­சர் எதிர்ப்பை வெளி­யிட்­டார்.
முன்­னாள் பாது­காப்­புச் செய­லர் கோத்­த­பாய ராஜ­பக்­ச­வின் 69 ஆவது பிறந்­த­நா­ளை­யொட்டி மீரி­ஹா­ன­வில் உள்ள அவ­ரது இல்­லத்­தில் கடந்த 20 ஆம் திகதி நடை­பெற்­ற­போது அனு­சா­சன உரை நிகழ்த்­திய அஸ்­கி­ரிய பீடத்­தின் அனு­நா­யக்க தேர­ரால் முன்­வைக்­கப்­பட்ட ஆலோ­சனை அறி­வு­ரையே தெற்கு அர­சி­ய­லில் தற்­போது பெரும் சர்ச்­சை­யைக் கிளப்­பி­விட்­டுள்­ளது.
தேர­ரின் உரைக்கு அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வும் கடந்த 21 ஆம் திகதி கடும் கண்­ட­னத்தை வெளி­யிட்­டி­ருந்­தார்.
‘எனக்கு முது­கெ­லும்­பில்லை. இய­லாத தலை­வன் என்­றெல்­லாம் சிலர் விமர்­சிக்­கின்­ற­னர். இந்த நாட்­டுக்கு ஏகா­தி­பத்­திய ஆட்­சி­யா­ள­ரொ­ரு­வர் தேவை­யென மகா­நா­யக்க தேர­ரொ­ரு­வர் அறி­விப்பு விடுத்­துள்­ளார். இது தவ­றான அறி­விப்­பா­கும். நாடு சர்­வா­தி­கா­ரத்தை நோக்­கிப் பய­ணித்­த­தால்­தான் 2015ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் 8 ஆம் திகதி மக்­கள் மாற்­ற­மொன்றை ஏற்­ப­டுத்­தி­னார்­கள் என்­பதை நினை­வூட்ட விரும்­பு­கின்­றேன். இன்று எனக்கு சொல்­லப்­ப­டும் கதை­கள்­தான் அன்று பண்­டா­ர­நா­யக்­க­வுக்கு எதி­ரா­க­வும் கூறப்­பட்­டது. இத்­த­கைய கதை­க­ளைக் கூறித்­தான் பண்­டா­ர­நா­யக்­கவை கொலை­செய்­த­னர். தற்­போது அந்த செயற்­பாடு மீண்­டும் தலை­தூக்கி வரு­கின்­றது’ என்று குறிப்­பிட்­டி­ருந்­தார்.
இந்த நிலை­யி­லேயே தலைமை அமைச்­சர் ரணி­லால் நேற்­று­முன்­தி­னம் கண்­ட­னம் வெளி­யி­டப்­பட்­டுள்­ளது. இது தொடர்­பில் கருத்து வெளி­யிட்ட தலைமை அமைச்­சர் மேலும் தெரி­வித்­த­தா­வது,
‘ஹிட்­ல­ரா­கு­மாறு எந்­த­வொரு சந்­தர்ப்­பத்­தி­லும் புத்­த­பெ­ரு­மான எமக்கு உப­தே­சம் வழங்­க­வில்லை. ஜேர்­ம­னி­யி­லும் பௌத்த தர்­மத்­தைப் போதிக்­கும் நிறு­வ­னங்­கள் செயற்­பட்­டன. ஹிட்­லர் ஆட்­சிக்­கு­வந்த பிறகு மேற்­படி நிறு­வ­னங்­கள் கலைக்­கப்­பட்­டன. அதில் இருந்­த­வர்­கள் சிறை­க­ளில் அடைக்­கப்­பட்­ட­னர். இறு­தி­யில் அவர்­கள் குறித்து எந்­த­வொரு தக­வ­லும் வெளி­யா­க­வில்லை.
ஹிட்­ல­ரை­யும், பௌத்த தர்­மத்­தை­யும் எவ்­வாறு ஒன்­றாக இணைத்­துப் பய­ணிப்­பது எனத் தெரி­ய­வில்லை. ஹிட்­லர் வழி நடப்­பது எமது தர்­மத்­துக்கு எதி­ரா­னது. எம்­மி­டையே அர­சி­யல் ரீதி­யாக கருத்து வேறு­பா­டு­கள் இருக்­க­லாம். அது தவ­றில்லை. எப்­ப­டி­யா­ன­வர்­க­ளுக்கு வாக்­க­ளிக்­க­வேண்­டு­மென்­பது புத்­த­தர்­மத்­தில் உப­தே­சிக்­கப்­பட்­டுள்­ளது.
ஆனால், இடி அமீன், ஹிட்­லர் ஆகி­யோர் போன்று மாறு­மாறு கூற­மு­டி­யாது. அது தவ­றா­னது. கண்­டிக்­கப்­ப­ட­வேண்­டி­யது.
நான் பங்­கேற்ற நிகழ்­வொன்­றின்­போது இவ்­வா­றான கருத்து வெளி­யி­டப்­பட்­டி­ருக்­கு­மா­னால், ஊட­கங்­கள் என்­மீது கடும் விமர்­ச­னங்­களை முன்­வைத்­தி­ருக்­கும். அந்­நி­கழ்­வில் வெளி­யிட்­டப்­பட்ட தக­வல் செய்­தி­யா­கக்­கூட வெளி­வ­ர­வில்லை. மறைக்­கப்­பட்­டது. ஆசி­ரி­யர் தலை­யங்­கங்­கள்­கூட எழு­தப்­ப­ட­வில்லை. இப்­ப­டியே இவ்­வா­றென்­றால், ஹிட்­ல­ரொ­ரு­வர் ஆட்­சிக்கு வந்­தால் என்ன நடக்­கும்? – என்­றார் ரணில்.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila