மன்னாரில் முப்பது எலும்புக்கூடுகள் மீட்பு!

மன்னார் நகர நுழைவாயிலில் இதுவரை சுமார் 30 மனித எலும்புக்கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக விசேட சட்ட வைத்திய நிபுணர் டபல்யூ. ஆர்.ஏ. எஸ்.ராஜபக்ஸ ஊடகவியலாளர்களுக்கு தெரிவித்துள்ளார். 

மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள விற்பனை நிலைய வளாகத்தில் இடம் பெற்று வந்த அகழ்வுப் பணிகள் கடந்த வெள்ளிக்கிழமை மதியம் இடை நிறுத் தப்பட்ட நிலையில் மீண்டும் இன்று திங் கட்கிழமை காலை 7.30 மணியளவில் 20 ஆவது தடவையாக அகழ்வு பணிகள் ஆரம்பமாயின. 

விசேட சட்ட வைத்திய நிபுணர் டபல்யூ. ஆர்.ஏ.எஸ்.ராஜபக்ஸ தலைமையில் ஆரம்பமான அகழ்வுப் பணிகளின் போது அவருடன் இணைந்து களனி பல் கலைக்கழகத்தின் பேராசிரியர் ராஜ் சோம தேவா மற்றும் அவரின் குழுவினர் மற்றும் அழைக்கப்பட்ட அதிகாரிகள் இணைந்து அகழ்வு பணிகள் இடம் பெற் றது. 
அதனைத் தொடர்ந்து இன்று திங்கட்கிழமை காலை 11 மணியளவில் ஊடக வியலாளர்கள் செய்தி சேகரிக்க உள்ளே அனுமதிக்கப்பட்டனர். இதன் போது ஊடகவியலாளர்களுக்கும் விசேட சட்ட வைத்திய நிபுணர் டபல்யூ. ஆர்.ஏ. எஸ்.ராஜபக்ஸ மற்றும் களனி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ராஜ் சோம தேவா ஆகியோருக்கும் இடையில் கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது. 

இதன் போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த விசேட சட்ட வைத்திய நிபுணர் டபல்யூ. ஆர்.ஏ. எஸ்.ராஜபக்ஸ, ”குறித்த அகழ்வு பணிகள் மிகவும் நுணுக்கமான முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

அகழ்வுப் பணிகளிகள் நிறைவரையும் வரை எவற்றையும் கூற முடியாது. தொடர்ந்தும் அகழ்வுகள் இடம் பெற்று வருகின்றன. சில தடயங்கள் காணப் பட்டுள்ளன. அவற்றை மீட்டுள்ளோம். 

ஆனால் வேறு எந்த அபாயகரமான தடையப்பொருட்களும் கிடைக்கவில்லை. நீதவான் முன்னிலையில் 20 ஆவது தடவையாக அகழ்வுப் பணிகள் இடம் பெற்று வருகின்றன. முழுமையாகவும், துண்டு துண்டுகளாகவும் மனித எலும் புகள் மீட்கப்பட்டு வருகின்றன. 

பல்வேறு தரப்பினரின் உதவியுடன் அகழ்வுகள் இடம்பெற்று வருகின்றது. சட்ட திட்டங்களுக்கு அமைவாகவே அகழ்வுகள் இடம்பெற்றுள்ளது. குறித்த வளாகம் முழுமையாக அகழ்வு நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுமெனத் தெரி விக்கப்பட்டுள்ளது. 
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila