மன்னார் புதைகுழியில் தாய்- குழந்தையின் எலும்பு எச்சங்கள்!


மன்னார் 'சதொச' வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மனித புதைகுழி அகழ்வின் போது, இன்று  தாய் ஒருவரினதும், பச்சிளம் குழந்தை ஒன்றினதும், மனித எச்சங்கள் அருககே மீட்கப்பட்டுள்ளன. மன்னார் மனித புதைகுழி அகழ்வு பணிகள் இன்று காலை 43 வது நாளாக  இடம்பெற்றன.
மன்னார் 'சதொச' வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மனித புதைகுழி அகழ்வின் போது, இன்று தாய் ஒருவரினதும், பச்சிளம் குழந்தை ஒன்றினதும், மனித எச்சங்கள் அருககே மீட்கப்பட்டுள்ளன. மன்னார் மனித புதைகுழி அகழ்வு பணிகள் இன்று காலை 43 வது நாளாக இடம்பெற்றன.

இதன்போது சந்தேகத்திற்கு இடமான ஒரு முதிர்ந்த மனித எச்சமும் அதன் அருகே சிறிய எழும்புகளை கொண்ட மனித எச்சமும் காணப்பட்டன. இரு மனித எச்சங்களையும் சூழ்ந்திருந்த களிமண்ணை அகற்றிய போது, அவை அருகருகே புதைக்கப்பட்ட தாயினதும், பிள்ளையினதும் என சந்தேகிக்கப்படுகிறது.
மீட்கப்பட்ட இரு மனித எலும்புக்கூடுகள் தொடர்பாக எந்த வித துல்லியமான கருத்துக்களையும் தங்களால் கூற முடியாது எனவும் முழுமையான பரிசோதனைகளின் பின்னரே கருத்துக்கள் தெரிவிக்க முடியும் எனவும் அகழ்வு பணிகளில் ஈடுபட்டு வரும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுவரை மீட்கப்பட்டுள்ள மனித எச்சங்களை உடற்கூற்று பரிசோதனைக்காக அமெரிக்காவில் உள்ள புளோரிடாவுக்கு அனுப்பி வைப்பதற்கான பரிந்துரையை நீதிமன்றத்திற்கு தாங்கள் முன்வைத்துள்ளதாகவும், இதுவரை உறுதிப்படுத்தப்பட்ட எந்த முடிவுகளும் எடுக்கப்படவில்லை எனவும் தெரிவித்தனர்.
தற்போது வரை மன்னார் மனித புதை குழியிலிருந்து 60 மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila