ஓமந்தையில் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட எனது மகன் எங்கே? ஜ.நாவில் தாய் குமுறல்!

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பான யோசனை நிறைவேற்றப்பட்டு மூன்று ஆண்டுகள் கடந்துள்ள போதிலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்த நீதியும் கிடைக்கவில்லையென காணாமல் போனோர் அமைப்பின் செயலாளர் லீலாதேவி ஆனந்தராஜா தெரிவித்துள் ளார்.
கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் இறுதிக் கட்ட போரின் போது ஓமந்தை இராணுவ சோதனை சாவடியில் வைத்து கையளிக்கப் பட்ட எனது மூத்த மகன் காணாமல் போனார்.

இலங்கை ஜனாதிபதி விசேட அமைச்சர வைக் கூட்டத்தை நடத்தி, படை உயர் அதி காரிகளிடம் விசாரணை நடத்தவோ, அவர் களை விளக்கமறியலில் வைக்கவோ நடவடிக்கை எடுக்க வேண்டாமெனத் தெரிவித்துள்ளாா். 

11 மாணவர்கள் கடத்திச் செல்லப்பட்டு திருகோணமலையில் வைத்து கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய படை அதிகாரி ரவிந்திர விஜேகுணரத்னவை கைதுசெய்ய வேண்டாமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.

இலங்கையின் நீதித்துறை இலங்கை ஆட்சியாளர்களின் கைகளில் உள்ளது. இதனால், இலங்கையின் உள்நாட்டு நீதி கட்டமைப்பு எமக்கு தேவையில்லை. சர்வதேச நீதி கட்டமைப்பையே நாங்கள் கோருகிறோம். ஐக்கிய நாடுகள் அமைப்பு, இலங்கை இராணுவம் செய்த போர் குற்றங்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும்.

ஐக்கிய நாடுகள் தலையிட்டு சர்வதேச நீதிபதிகள் அடங்கிய கட்டமைப்பை ஏற்படுத்தி, குற்றம் செய்தவர்களுக்கு சர்வதேச சட்டத்திற்கு அமைய தண் டனை வழங்க வேண்டுமென லீலாதேவி ஆனந்தராஜா மேலும் தெரிவித்துள் ளாா்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila