ஆளுநரை கண்காணிக்கிறாராம் சீ.வீ.கே?

வடக்கு மாகாண ஆளுநர் தனது தனிப்பட்ட செயலாளராக அடையாளப்படுத்தியுள்ள மனைவி மற்றும் செயலாளர் இளங்கோவன் சகிதம் லண்டன் மற்றும் ஜரோப்பிய நாடுகளிற்கான சுற்றுப்பயணமொன்றை ஆரம்பித்துள்ளார்.

இதேவேளை தனது தனிப்பட்ட செயலாளரான மனைவியின் மகன் மற்றும் தன்னால் நியமிக்கப்பட்டுள்ள செயலாளர்கள் ஒரு பகுதியினரையும் இந்த சுற்றுப்பயணத்தில் இணைத்துக்கொள்ள முற்பட்டிருந்த போதும் அதற்கு இலங்கை ஜனாதிபதி அலுவலகம் அனுமதி மறுத்துவிட்டதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

வுடமாகாணசபை கலைக்கப்பட்ட பின்னர் ஆளுநரின் ஆட்டத்தை பார்க்க அழைப்புவிடுத்துள்ள முன்னாள் விடுதலைப்புலிகள் ஆதரவாளரும் தற்போதைய ஆளுநரது முகவருமான சுந்தரம் டிவகலாலாவினது வெளிநாட்டு சுற்றூலவையும் மைத்திரி தடுத்துவிட்டதாகவும் கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

புலம்பெயர் தமிழ் தரப்பினை சேர்ந்த சிலரது அழைப்பின் ஆளுநரது இந்தய பயணம் அமைந்துள்ளது.

இதனிடையே தமிழர்களது இரதத்தில் ஓடுவது சிங்கள இரத்தமென தெரிவித்த ஆளுநரது வெளிநாட்டுப்பயணத்தை தாம் விழிப்புடன் பார்த்துக்கொண்டிருப்பதாக வடமாகாண அவைதலைவர் சீ.வீ.கே.சிவஞானம் மற்றும் உறுப்பினர்கள் அஸ்மின்,சிவாஜிலிங்கம் போன்றவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila