யாழ். அச்சுவேலி பகுதியில் மீட்கப்பட்ட மனித எலும்பு கூட்டு எச்சங்கள் தொடர்பாக மல்லாகம் நீதிவான் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டுள்ளார். அச்சுவேலி பத்தமேனி சூசையப்பர் வீதியில் மின்சார கம்பம் நடுவதற்காக நிலத்தை தோண்டிய போது மனித எலும்பு எச்சங்கள் மீட்கப்பட்டிருந்தன.இதனை தொடர்ந்து அச்சுவேலி பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை தொடர்ந்து அவர்கள் விசாரணைகளை மேற்கொண்டனர். யாழ். அச்சுவேலி பகுதியில் மீட்கப்பட்ட மனித எலும்பு கூட்டு எச்சங்கள் தொடர்பாக மல்லாகம் நீதிவான் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டுள்ளார். அச்சுவேலி பத்தமேனி சூசையப்பர் வீதியில் மின்சார கம்பம் நடுவதற்காக நிலத்தை தோண்டிய போது மனித எலும்பு எச்சங்கள் மீட்கப்பட்டிருந்தன.இதனை தொடர்ந்து அச்சுவேலி பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை தொடர்ந்து அவர்கள் விசாரணைகளை மேற்கொண்டனர். இன்றைய தினம் மல்லாகம் நீதிவான் ஏ.ஆனந்தராஜாவும் சட்ட வைத்திய அதிகாரி மயூரதனும் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டனர். இன்றைய தினம் மேலும் தோண்டப்பட்ட போது மேலதிகமாகவும் மனித எலும்பு எச்சங்கள் மீட்கப்பட்டிருந்தன. கால், கை, மண்டையோடு பகுதிகள் மீட்கப்பட்டிருந்து.இந்நிலையில் மீட்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பான ஆய்விகளை மேற்கொள்வதற்காக அவை யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.மேலும் மின்சார கம்பம் நாட்டும் பணியினை தொடர்ந்து மேற்கொள்ளவும் நீதிவான் அனுமதியளித்தார். அத்துடன் மேலதிக விசாரணைகளை அச்சுவேலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

அரசியல் கைதிகளது விடுதலைக்கான கோரிக்கையினை முன்வைத்து மக்கள்,மாணவர்களின் ஆதரவுடன் யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் நடைபயணம் இன்றிரவு மதவாச்சியை சென்றடைந்துள்ளது.இரவு ஓய்வின் பின்னர் அவர்களின் தொடர் நடைபயணம் நாளை சனிக்கிழமை காலை அனுராதபுரம் சிறைச்சாலையினை சென்றடையுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

சிங்கள பிரதேசங்களில் யாழ்.பல்கலைக்கழக சக இன மாணவிகள் பேரணியின் நோக்கம் பற்றி ஒலிபெருக்கியில் பிரச்சாரம் செய்து கொண்டு முன்னே செல்ல பின்னராக மாணவர்கள் நடைபயணி தொடர்கின்றது.மாணவர்களுடன் அரசியல் கட்சிகள் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் குடும்பங்களும் இணைந்துள்ளன. 

இதனிடையே ஒருபுறம் மதவாச்சியில் அடை மழை பொழிந்து கொண்டிருக்க அதன் மத்தியிலும் மாணவர்களது நடைபயணம் தொடர்கின்றது.இன்னொரு புறம் மாணவர்களில் பலரும் கால்ப்புண்களால் பாதிக்கப்பட்டுள்ள போதும் அதனையும் பொருட்படுத்தாது நடைபயணியில் தொடர்கின்றனர்.

நாளை அனுராதபுரம் சிறையினை சென்றடையும் மாணவர்களது நடைபயணத்தில் பொது அமைப்புக்கள் மற்றும் அரசியல் கைதிகளது விடுதலைக்கான தேசிய அமைப்பின் பிரதிநிதிகளும் இணையவுள்ளனர்.

அனைவரும் ஒன்றிணைந்து போராட்டகாரர்களை சந்தித்ததன் பின்னர் உண்ணாவிரத போராட்டத்தை தாம் பொறுப்பேற்தாக தெரிவித்து முடிவுறுத்த அரசியல் கைதிகளிடம் கோரவுள்ளதாக தெரியவருகின்றது.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila