கடற்படையினர் மீண்டும் அதிரடி!- முள்ளிக்குளம் மக்களுக்கு பெரும் சிரமம்

முள்ளிக்குளத்தில் விடுவிக்கப்பட்ட காணிகளுக்கு செல்லும் பிரதான வீதிகளை கடற்படையினர் திடீரென மூடியுள்ளனர்.
குறித்த வீதிகளுக்கு முற்கம்பிகளை கொண்டு தடை ஏற்படுத்தி இன்று (புதன்கிழமை) மூடியுள்ள நிலையில், முள்ளிக்குளம் மக்கள் பல்வேறு சிரமங்களுக்கு முகம் கொடுத்து வருவதாக முள்ளிக்குளம் பங்குத்தந்தை அருட்தந்தை லோரான்ஸ் லியோ தெரிவித்தார்.
முள்ளிக்குளம் கிராமத்திற்கு கடற்படை முகாமினூடாக செல்லும் பிரதான வீதியை கடந்த 21ஆம் திகதி திடீரென கடற்படையினர் முட்கம்பிவேலியினால் இடைமறித்து அடைத்தனர். இதற்கு மக்களின் எதிர்ப்பு வலுக்க குறித்தவீதி கடற்படையினரால் மீண்டும் திறந்து விடப்பட்டது.
இந்நிலையில், கடற்படையினரின் குறித்த செயற்பாடுகளை கண்டித்து முள்ளிக்குளம் கிராமமக்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து முள்ளிக்குளத்தில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக முள்ளிக்குளம் மக்கள் தெரிவித்துள்ளனர்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila