அரசியல் நெருக்கடி நிலைமை – அமெரிக்காவின் புதிய தூதுவர் இலங்கைக்கு விஜயம்!

இலங்கை மிகப்பெரிய அரசியல் நெருக்கடி நிலையை எதிர்கொண்டுள்ள நிலையில், இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவர் அலைனா பி டெப்பிளிட்ஸ் சற்றுமுன்னர் கொழும்பிற்கு வந்தடைந்துள்ளார்.
2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் புதிய தூதுவராக பதவியேற்ற அவர் இன்று (செவ்வாய்க்கிழமை) நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கைக்கான அமெரிக்காவின் தூதரகம் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளது.
கடந்த 26 ஆம் திகதி ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு, புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டார்.
இதன் பின்னர் பல்வேறு நாடுகளும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அரசியலமைப்பின் பிரகாரம் செயற்படுமாறும், நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறும் வலியுறுத்தி வருவதுடன், இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நிலவரங்கள் தொடர்பில் உன்னிப்பாக அவதானித்து வருகின்றன.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila