2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் புதிய தூதுவராக பதவியேற்ற அவர் இன்று (செவ்வாய்க்கிழமை) நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கைக்கான அமெரிக்காவின் தூதரகம் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளது.
கடந்த 26 ஆம் திகதி ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு, புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டார்.
இதன் பின்னர் பல்வேறு நாடுகளும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அரசியலமைப்பின் பிரகாரம் செயற்படுமாறும், நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறும் வலியுறுத்தி வருவதுடன், இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நிலவரங்கள் தொடர்பில் உன்னிப்பாக அவதானித்து வருகின்றன.