
முதலமைச்சர் உருவாக்கும் கட்சிக்குள் தமிழ் மக்கள் பேரவையில் உள்ள சிவில் அமைப்பு பிரதிநிதிகளையும் அதற்கு வெளியே தன்னைப்போன்று நேர்மையான நிலைப்பாட்டில் உள்ள சிவில் அமைப்புக்களையும் இணைத்து கட்சியை உருவாக்குவது மிகவும் ஆரோக்கியமானதாக அமையும்.
அவ்வாறான கட்சியுடன் எமது கட்சி கூட்டிணைந்து பொது முன்னணி ஒன்றினை உருவாக்கி பொதுச் சின்னம் ஒன்றின் கீழ் முதலமைச்சர் தலைமையில் செயற்படுவதற்கு நாம் தயாராக உள்ளோம். இவ்வாறான நிலை உருவானால் தமிழ் மக்களுக்கு நம்பிக்கைதரும் கூட்டாகக் இக்கூட்டு அமையும்.
அது 2004 தேர்தல் காலம் போன்று மிகப்பெரும் எழுச்சியை மக்கள் மத்தியில் உருவாக்கும்.
ஐயாவின் தலைமையில் மக்களுக்காக பேரம்பேசும் நேர்மையான அரசியல் தலைமையாக இந்தக் கூட்டு விளங்கும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.