இறக்குமதி செய்யப்பட்ட குண்டு துளைக்காத வாகனங்கள் மஹிந்தவுடையதா? – பிரதமர் அலுவலகம் விளக்கம்!

தேர்தல் பிரசாரத்திற்காக இறக்குமதி செய்யப்பட்ட இரண்டு குண்டு துளைக்காத வாகனம் மஹிந்த ராஜபக்ஷவுடையது இல்லை என பிரதமர் அலுவலகம் உறுதியாக தெரிவித்துள்ளது.

பிரதமர் பதவியை தவறாக பயன்படுத்தி மஹிந்த ராஜபக்ஷ இரண்டு புதிய வாகனங்களை இறக்குமதி செய்துள்ளதாக ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் வதந்திகள் பரவியிருந்தது.

இந்நிலையில் இன்று (திங்கட்கிழமை) பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் இதற்கு முற்றாக மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த இரண்டு குண்டு துளைக்காத லேண்ட் ரோவர் செண்டினல் வாகனங்களும் பிரித்தானியாவில் இருந்து நேரடி விமானத்தின் ஊடாக பண்டாரநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila