தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு வடக்கு கத்தோலிக்க ஆயர்கள் கோரிக்கை

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு வடக்கு கத்தோலிக்க ஆயர்கள் கோரிக்கை

 தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு வடக்கு கத்தோலிக்க ஆயர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண கத்தோலிக்க மதகுருமார்கள் கூட்டாக இணைந்து இந்த கோரிக்கையை விடுத்துள்ளனர். ஆயிரக் கணக்கான தமிழ் அரசியல் கைதிகள் நீண்ட காலமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

வெள்ளை வான்களில் கடத்தப்பட்டவர்கள், இறுதிக் கட்ட யுத்தத்தின் போது சரணடைந்தவர்கள், கைது செய்பய்பட்டவர்கள் தொடர்பில் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்தக் கோரிக்கைகள் அடங்கிய எழுத்து மூல ஆவணமொன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் நூறு நாள் திட்டத்தில் தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பிலான பிரச்சினைக்கும் தீர்வு வழங்கப்படும் என எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளார்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila